குமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்!

Published:

tenkasi kumarapandian anjali - 2026

நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 2006- டிசம்பர் 17ஆம் தேதி இந்து முன்னணி நகர தலைவர் குமார் பாண்டியன் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது 12ஆவது நினைவு தினம் திங்கள் கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிய்ல் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குமார் பாண்டியனின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷ்த் சார்பில் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவண கார்த்திகேயன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமார் பாண்டியன் கொலை வழக்கை மாவட்ட காவல் துறை கண்டுகொள்ளவில்லை. சிறப்பு நீதிமன்றம் அமைத்தும் எவ்வித பலனும் இல்லை. அதன் பின்பு உள்ள வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த வழக்கு மட்டும் கண்டுகொள்ளமல் விடப்பட்டுள்ளது.

இதற்காக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கோரி வழக்குத் தொடர உள்ளோம். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாகத் திரிகின்றனர். அவர்களை கைது செய்ய வேண்டும்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

தென்காசி காவல் துறை வேற்று மத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குகிறது. இந்து அமைப்புகளுக்கு மட்டும் இந்தக் கொலைகளைக் காரணம் காட்டி அனுமதி வழங்க மறுக்கிறது.

தொடர்ந்து இது போன்று நடவடிக்கைகளில் ஈடுப்பட்டால் குமரி கோட்டத்தில் அனைத்து இந்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்றார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img