ராகுல் பிரதமர் வேட்பாளர்னு காங். கட்சியே சொல்லல… ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார்… அவ்வளவுதான்!

kushboo - 2026
கோப்பு படம்

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என என காங்கிரஸ் கட்சி இது வரை அறிவிக்கவில்லை; திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிய மட்டுமே செய்து இருக்கின்றார் என காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை தனியார் கல்லூரி வளாகத்தில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநாடு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறு கின்றது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வியட்நாம், ரஷ்யா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டியது, விஷாலை கைது செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது என தெரிவித்தார்.விஷாலை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்த அவர், விஷால் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் மூலம் விஷாலுக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் வெற்றி கிடைத்தது என தெரிவித்த அவர்,அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை இதில் எப்படி வந்தது? என கேள்வி எழுப்பினார்.

இதில் அரசியல் தலையீடு கண்டிப்பாக உள்ளது என தெரிவித்த அவர், முதல்வர் வரை இதை கொண்டு செல்ல வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார். எதிர் அணியில் இருப்பவர்களில் ஒருவர் பாஜக, ஒருவர் அதிமுக எனவும் தெரிவித்த அவர், அதனால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது போல் இந்த இரு நாட்கள் சம்பவம் இருந்தது எனவும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலின் , பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்தார் எனவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வில்லை எனவும், ஆனால் பிரதமராக வருவதற்கு எல்லா தகுதிகளும் ராகுலுக்கு உண்டு எனவும் தெரிவித்தார்.

ரபேல் விவகாரத்தில் பாஜக அல்ப தனமாக வெற்றி என்று சொல்லி வருகின்றனர் என கூறிய குஷ்பு ரபேல் விவகாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம் எனவும் தெரிவித்தார்.

கணினியில் தகவல் எடுக்கலாம் என உளவு அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்திரவு வழங்கி இருப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உள்ளது என தெரிவித்த அவர், இந்த திட்டம் பொதுமக்களுக்கு மட்டுமா? டெல்லி ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருப்பவர்களுக்கு இது பொருந்தாதா எனவும் கேள்வி எழுப்பினார்.

2 ஆண்டுகளாக நாங்கள் சொன்ன போது குறைக்காத ஜி.எஸ்.டி. தற்போது 5 மாநில தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்ட பின் குறைத்து உள்ளனர் என தெரிவித்த குஷ்பு, ஆரம்பத்தில் ஏன் இதை செய்ய முடியாது என்று சொன்னார்கள்? எனவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி நான் தான் ராஜா நான் தான் மந்திரி என்று இருப்பதாகவும் அவரை என்.ஆர்.ஐ. பிரதமர் என்று தான் சொல்ல வேண்டும் என கூறிய குஷ்பு வெளிநாட்டில் தான் போடி அதிகமாக இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

பிரதமரால் பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு செல்ல முடியும் போது, புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளை சந்திக்க மட்டும் ஏன் முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.

அதிமுக , பாஜகவின் கை கிளவ்ஸ் போல தான் செயல்படுகின்றது எனவும் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என தெரிவித்த அவர், பாஜக, அதிமுகவை வேறு வேறாக பார்க்கவில்லை. பாஜக சொல்வதை தான் அதிமுக செய்கிறது என்றார்.

பாஜக 4 ஆண்டுகளில் முடியாததை தான் இப்ப தான் சொல்லி வருகின்றனர் எனவும் 2014 ல் சொன்னது எதுவும் மக்களிடம் கொண்டு செல்லவில்லை, விளம்பரத்திற்காக செய்கின்றனர் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஒரு விளம்பர பிரியர் என தெரிவித்த அவர், பரக் ஒபாமா வரும்போது, யு.பி.ஏ. அரசு தான் அமெரிக்கா-இந்தியா உறவு பலமாக இருப்பதற்கு காரணம் என்றார்.

இந்திய நாடு உலக அளவில் மிகப்பெரிய நாடு என்று சொல்வதற்கும், பலமான நாடு என்று சொல்வதற்கும், பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அளிக்கப்படும் வரவேற்புக்கும் கடந்த 55 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி தான் காரணம் எனவும் குஷ்பு தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories