மின் வாரிய ஊழல்வாதிகளை தண்டிப்பது எப்படி? எப்போது?!

TNEB - 2026

எல்லாவற்றையும் ஆன்லைனில் மாற்றிக் கொண்டு போகிறது மத்திய அரசு. காரணம், இடைத்தரகர் ஒழிப்பு, லஞ்சம், ஊழல், முறைகேட்டை முற்றிலும் ஒழிப்பது இவற்றுக்காகத்தான்.

ஆனால், தமிழகத்தில் அரசுத் துறைகள், சேவைத்துறைகளில் பெரும் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் நடப்பது நமக்குத்தெரியும், நாமே அவற்றில் சிக்கியிருப்போம். ஆனால், எப்படி இவற்றில் இருந்து வெளியே வருவது? கட்டணங்களை எல்லாம் ஆன்லைனில் செய்வது போல், அபராதங்கள், வேண்டுகோள்களையும் ஆன்லைனிலேயே மாற்ற வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட்டுள்ளது.

இது என் அனுபவம்…
#தமிழ்நாடுமின்சாரவாரியம் #tneb #tncm #pm_modi #p_thangamani

மின்வாரியம் மக்களிடம் அதிகம் மோசடிகள் செய்து வருகிறது. அதிலும், கீழ் மட்ட அதிகாரிகள் மக்களிடம் மிக அதிகமாக மோசடி செய்கின்றனர்.

உதாரணமான ஓர் அனுபவ சம்பவம்… கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கொரக்கவாடி கிராமத்தில் உள்ள மின்மாற்றி இயந்திரம் பழுது அடைந்தது. அப்போது மின்சார வாரியத்தில் தகவல் தெரிவித்தோம். ஆனால், அதிகாரிகள் மக்களிடம் நேரடியாகச் சென்று பணம் வசூல் செய்தனர்.

இதை அறிந்து நான் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு நேரடியாகக் கேட்ட போது என்னை ஆள் வைத்து மிரட்டினர். பின்பு உயர் அதிகாரியை தொடர்புகொண்டு கூறிய போது, மின்மாற்றியை மாற்றி அமைப்பது மின்வாரியத்தின் கடமை. அதில் எக்காரணம்கொண்டும் பணம் பெறக் கூடாது. மாட்டோம் என்றனர். எனவே, உயர் அதிகாரிகள் வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்போம் என்று உறுதி அளித்தனர்.

மின்மாற்றியும் இரண்டு நாட்களில் மாற்றி தருவதாக உறுதி அளித்தனர் ஆனால் மீண்டும் மறைமுகமாக ஆள் வைத்து வசூல் வேட்டை நடத்தினர். இது தொடர்பாக, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! இதில் சுமார் நாற்பது ஆயிரம் ரூபாய் அளவுக்கு பொது மக்களிடம் வசூல் செய்து ஊழல் நடைபெற்று உள்ளது!

  • குமார் ராமமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories