Home Blog Page 5858

வெள்ள நிவாரணத்துக்கு இதுவரை சேர்ந்த நிதி ரூ.303 கோடி

சென்னை:

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 17 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று முதல்வரிடம் அளிக்கப்பட்டது.

அந்த வரிசையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.

1. ஐசிஐசிஐ வங்கியின் முதுநிலை பொது மேலாளர் மற்றும் தென் இந்திய வணிகத் தலைவர் அமித் பால்டா 10 கோடி ரூபாய்.

2. அசோக் லேலாண்ட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினோத் தாசரி 3 கோடி ரூபாய்.

3. அமால்கமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி 2 கோடி ரூபாய்.

4. ஃபோர்டு மோட்டார் பிரைவேட் லிமிடெட்நிறுவனத்தின் இயக்குநர் ஆர். ஸ்ரீகாந்த் 1 கோடி ரூபாய்.

5. தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம். நாசர் 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 17 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று திங்கட்கிழமை முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்களும், தனி நபர்களும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.303 கோடியே 90 லட்சத்து 98 ஆயிரத்து 948 வழங்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடிகர் சங்க கட்டட பூமி பூஜைக்கு வர ஜெயலலிதா சம்மதம்

சென்னை: நடிகர் சங்கத்தின் சார்பில் ரூ. 1.10 கோடி வெள்ள நிவாரணம் கொடுக்கப்பட்டதுடன், நடிகர் சங்க கட்டட பூமி பூஜை விழாவுக்கு வர வேண்டும் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று  முதல்வர் ஜெயலலிதா சம்மதம் சொன்னதாக நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம். நாசர் ரூ.1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் முதல்வரிடம் வழங்கினார்.

இதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவர் கருணாஸ் கூறிய போது, “தென்னிந்திய நடிகர் சார்பில் வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1 கோடியே 10 லட்சம் முதல்வரிடம் அளித்தோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டட துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வரிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம். அதே கோரிக்கையை இந்த முறை தலைவர் நாசரும், பொதுச் செயலாளர் விஷாலும் முன் வைத்தார்கள். முதல்வரும் நிச்சயமாக பூமி பூஜையில் கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.” என்று கூறினார்.

குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கடும் தண்டனை: உச்ச நீதிமன்றம் பரிந்துரை

புது தில்லி;

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யுமாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை குறித்த விவகாரத்தில், குழந்தை என்ற சொல்லுக்கு வரையறை செய்யுமாறும் அது வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்ற மகளிர் வழக்குரைஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யவும், கடுமையான தண்டனை வழங்கவும்  நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய உச்ச நீதிமன்ற மகளிர் வழக்குரைஞர் சங்க பொதுச் செயலாளர் பிரேரணா குமாரி, இதுபோன்ற குற்றங்களுக்கு ஆண்மை நீக்கம்தான் சரியான தண்டனையாக இருக்கும். பாலியல் வன்முறை தொடர்பான சட்டத்தில், குழந்தைகளின் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தாக்குதலுக்குக் கூட, பொதுவான பாலியல் வன்முறைத் தாக்குதலுக்கே இருக்கின்ற அரசியல் சாசனப் பிரிவின் கீழ்தான் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையில் கேரள காவல் நிலையம் மூட நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் கேரள காவல் நிலையம் மூட நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

முல்லைப்பெரியாறு அணைக்கு கூடுதல் பாதுகாப்பு தருவதாகக் கூறி அணைப்பகுதியில் புதிய காவல் நிலையத்தை  கேரள காவல்துறை இன்று திறக்கிறது. கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா இந்த காவல்நிலையத்தை திறந்து வைக்கிறார். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக கேரள அரசு கவலைப்படுவது உள்நோக்கம் கொண்டதாகும். தமிழக நலனுக்கு எதிரான கேரள அரசின் இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையில் கேரள அரசு புதிய காவல்நிலையத்தை திறப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது முல்லைப்பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பராமரிப்பு பணிகளை முடக்குவது, இரண்டாவது முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்காக மத்திய தொழில்பாதுகாப்பு படையை நிறுத்தப்படுவதை தடுப்பது ஆகும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டதால் கேரளத்துக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 1980&ஆம் ஆண்டுக்கு முன்பாக அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்த்தேக்கப்பகுதி பரப்பு குறைந்ததை பயன்படுத்தி அப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் விடுதிகளை கேரள அரசு அதிகளவில் கட்டிக் கொண்டது. இப்போது அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டதால் சுற்றுலா விடுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அடுத்தகட்டமாக அணையை வலுப்படுத்தும் பணிகளை முடித்து, நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் நீர்த்தேக்கப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா விடுதிகளும் பயன்பாட்டை இழந்து விடும். இதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை கேரள அரசு தொடர்ந்து தடுத்து வருகிறது.

2014ஆம் ஆண்டு மே மாதம் முல்லைப்பெரியாறு அணையின் கேலரி பகுதியில் ஓடுகள் ஒட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமானப் பொருட்களை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்டு செல்ல முயன்ற போது, அவர்களை கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் அந்த பணிகள் பாதிக்கப்பட்டன. அதன்பின் முல்லைப்பெரியாறு அணைக்கு தேக்கடியிலிருந்து படகு மூலம் எளிதில் சென்று விடலாம். ஆனால், இதை தடுப்பதற்காகவேகடந்த 2014ஆம் ஆண்டு திசம்பர் முதல், கேரள வனத்துறை வீணான தடைகளை விதிக்கிறது. இதனால் தமிழக அதிகாரிகள் படகு பயணத்தைத் தவிர்த்து வல்லக்கடவு வழியாக அணைக்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் பல கிலோ மீட்டர் கூடுதலாக பயணிக்க வேண்டியிருக்கிறது.  பல நேரங்களில் தமிழக அதிகாரிகளை கேரள காவலர்கள் மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்த நிகழ்வுகளும் உண்டு.

அதே உத்தியை பயன்படுத்தி பராமரிப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை முடக்குவதற்கான சதி திட்டத்தின் ஓர் அங்கமாகவே கேரள அரசு இப்போது புதிய காவல் நிலையத்தை திறக்கிறது. அந்த காவல்நிலையத்திற்கு ஒரு துணை கண்காணிப்பாளர், 3 ஆய்வாளர்கள், 4 சார்பு ஆய்வாளர்கள் உட்பட 185 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உண்மையாகவே பரந்து விரிந்து கிடக்கும் அணைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் இதை விட அதிக காவலர்கள் தேவை. ஆனால், கேரள அரசின் நோக்கம் அணையை பாதுகாப்பது அல்ல; மாறாக தமிழக அதிகாரிகளை அச்சுறுத்த வேண்டும் என்பது தான். அணை பராமரிப்பு பணியில் தமிழக அதிகாரிகள் 8 பேர் மட்டும் தான் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களை எளிதாக மிரட்டி பணிகளை தடுத்து விடலாம் என்பது கேரளத்தின் திட்டம். இதற்காகவே, ஓர் ஆய்வாளர், 2 சார்பு ஆய்வாளர்கள் உள்பட 20 காவலர்கள் என்ற புதிய காவல்நிலையத்தின் பணியாளர்கள் எண்ணிக்கையை 185 ஆக கேரள அரசு உயர்த்தியிருக்கிறது.

மற்றொரு புறம், முல்லைப்பெரியாறு அணைக்கு மத்தியப் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்த ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் வலுவாக இருந்ததால், அதை முறியடிக்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அங்கு தனிக் காவல் நிலையத்தை அமைக்கப்போவதாக கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில் அறிவித்த கேரள அரசு அதே தகவலை ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், மத்தியப் படைகளின் பாதுகாப்பு வழங்கப்படுவதை தடுப்பதற்காக புதிய காவல்நிலையத்தை கேரள அரசு திறக்கிறது. இந்த விஷயத்தில் உண்மை நிலவரத்தை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய காவல்நிலையத்தை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் கேரள அரசின் இந்நடவடிக்கையை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. உடனடியாக இதில் தலையிட்டு புதிய காவல்நிலையத்தை முடக்குவதுடன், மத்திய படைகளை காவலுக்கு நிறுத்தவேண்டும்.

கரும்பு கொள்முதல் விலை போதாது: ராமதாஸ்

 கரும்பு கொள்முதல் விலை போதாது; உழவர்கள் வயிற்றில் அடிக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர்  ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

2015&16 ஆம் ஆண்டிற்கான கரும்புக் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2850 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இந்த விலை கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த விலை கசக்குமே தவிர ஒருபோதும் இனிக்காது.

நீலகிரியில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நான், நடப்பாண்டில் கரும்பு அரவைப் பருவம் தொடங்கி 3 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இதுவரை கரும்புக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்காதது உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என கூறியிருந்தேன். மாலையில் கரும்புக்கு கொள்முதல் விலையை ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். ஆனால், அவ்விலை உழவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கும் என்று தோன்றவில்லை. 2011 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்தே ஜெயலலிதா அரசு உழவர்களுக்கு செய்து வருவது துரோகம் மட்டுமே. 2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால்  ஒரு டன் கரும்புக்கு ரூ.2500 கொள்முதல் விலை வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு ஒரு டன் கரும்புக்கு ரூ.2100 மட்டுமே கொள்முதல் விலையாக அறிவித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஜெயலலிதாவின் துரோகங்கள் தொடர்ந்தன.

பொதுவாக மத்திய அரசு அறிவிக்கும் நியாயவிலையுடன் தமிழக அரசின் சார்பில் ரூ.650 பரிந்துரை விலை சேர்த்து கரும்புக்கான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். ஆனால், 2013 ஆம் ஆண்டில் மாநில அரசின் பரிந்துரை விலையை 650 ரூபாயிலிருந்து ரூ.550 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் 450 ரூபாயாகவும் குறைத்து விவசாயிகளின் வயிற்றில் அதிமுக அரசு அடித்தது. இதனால் கடந்த ஆண்டில்  ரூ.2850 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டிய கரும்பு விலை ரூ.2650 ஆக அறிவிக்கப்பட்டது. அதன்பின் நடப்பாண்டில் பரிந்துரை விலையில் குறைக்கப்பட்ட தொகையில் ஒரு பாதியை ஏற்றி ஒரு டன்னுக்கு ரூ.2850 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலோட்டமாக பார்ப்பதற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொள்முதல் விலை ரூ.200 உயர்த்தப்பட்டிருப்பது போல தோன்றினாலும் உண்மை அதுவல்ல.  கடந்த 5 ஆண்டுகளில் மாநில அரசின் பரிந்துரை விலை ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக 2011&ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததை விட ரூ.100 குறைக்கப்பட்டிருப்பது தான் உண்மை.

2011&ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஆதார விலை ரூ.850 உயர்த்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி 2011&ஆம் ஆண்டில் கரும்பு கொள்முதல் விலை ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டிருந்தால் இப்போது கரும்புக்கான விலை டன்னுக்கு ரூ.3350 ஆக உயர்ந்திருக்கும். இது விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை இல்லை என்றாலும் கூட ஓரளவு லாபம் கிடைக்கும் விலையாக இருந்திருக்கும். ஆனால், இந்த விலை கிடைக்காமல் போனதற்கு முழுக்க முழுக்க ஜெயலலிதா தான் காரணம். இப்போதும் கூட கொள்முதல் விலையாக ரூ.2850 அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சர்க்கரை ஆலைகள் எவ்வளவு கொடுக்கும் என்பது தெரிய வில்லை. கடந்த ஆண்டு ஒரு டன்னுக்கு ரூ.2250 மட்டுமே கொடுத்த சர்க்கரை ஆலைகள் மீதமுள்ள தொகையை தராமல் நிலுவையில் வைத்துள்ளன. இந்த ஆண்டில், கடந்த ஆண்டை விட குறைவாக ரூ.2150 மட்டும் தான் தர முடியும் என்று சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கூறியிருப்பதாக தெரிகிறது.

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் மேற்கொண்ட மதிப்பீட்டின்படி, 2013-&14 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய ரூ.2120 செலவாகிறது. அதன்பின் இரு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அது ரூ.2600 ஆக வைத்துக் கொண்டாலும் கூட லாபமாக 50%, அதாவது ரூ.1300 வாகன வாடகை ரூ.100 சேர்த்து ஒரு டன்னுக்கு ரூ.4,000 கொள்முதல் விலை நிர்ணயிப்பது தான் சரியானதாக இருக்கும்.  எனவே, ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ.4,000 நிர்ணயித்து அந்தத் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் ஏற்கனவே உள்ள நிலுவைத்தொகையையும் உடனடியாக பெற்றுத்தர வேண்டும்

Cookie Policy

Cookie Policy for dhinasari.com

 

What Are Cookies


As is common practice with almost all professional websites this site uses cookies, which are tiny files that are downloaded to your computer, to improve your experience. This page describes what information they gather, how we use it and why we sometimes need to store these cookies. We will also share how you can prevent these cookies from being stored however this may downgrade or ‘break’ certain elements of the sites functionality.

For more general information on cookies see theWikipedia article on HTTP Cookies…

How We Use Cookies


We use cookies for a variety of reasons detailed below. Unfortunately is most cases there are no industry standard options for disabling cookies without completely disabling the functionality and features they add to this site. It is recommended that you leave on all cookies if you are not sure whether you need them or not in case they are used to provide a service that you use.

Disabling Cookies


You can prevent the setting of cookies by adjusting the settings on your browser (see your browser Help for how to do this). Be aware that disabling cookies will affect the functionality of this and many other websites that you visit. Disabling cookies will usually result in also disabling certain functionality and features of the this site. Therefore it is recommended that you do not disable cookies.

The Cookies We Set


This site offers newsletter or email subscription services and cookies may be used to remember if you are already registered and whether to show certain notifications which might only be valid to subscribed/unsubscribed users.


Third Party Cookies


In some special cases we also use cookies provided by trusted third parties. The following section details which third party cookies you might encounter through this site.

This site uses Google Analytics which is one of the most widespread and trusted analytics solution on the web for helping us to understand how you use the site and ways that we can improve your experience. These cookies may track things such as how long you spend on the site and the pages that you visit so we can continue to produce engaging content.

For more information on Google Analytics cookies, see theofficial Google Analytics page.

The Google AdSense service we use to serve advertising uses a DoubleClick cookie to serve more relevant ads across the web and limit the number of times that a given ad is shown to you.

For more information on Google AdSense see theofficial Google AdSense privacy FAQ.

We also use social media buttons and/or plugins on this site that allow you to connect with your social network in various ways. For these to work the following social media sites including; Facebook, Twitter, Google Plus, will set cookies through our site which may be used to enhance your profile on their site or contribute to the data they hold for various purposes outlined in their respective privacy policies.


More Information


Hopefully that has clarified things for you and as was previously mentioned if there is something that you aren’t sure whether you need or not it’s usually safer to leave cookies enabled in case it does interact with one of the features you use on our site. However if you are still looking for more information then you can contact us through one of our preferred contact methods.

Email:dhinasarinews@gmail.com

ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம்

1. பொய்கையாழ்வார்

 ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை

ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்!  – எப்புவியும்

பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்

தேசுடனே தோன்று சிறப்பால்.

அவதரித்த ஊர்:  திருவெஃகா (காஞ்சிபுரம்)

மாதம்:  ஐப்பசி

நட்சத்திரம்:  திருவோணம்

அம்சம்:  பாஞ்சஜன்யம் (சங்கு)

அருளிச் செய்த பிரபந்தம்:  முதல் திருவந்தாதி

***

2.  பூதத்தாழ்வார்

எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்

வண்மை மிகு கச்சி மல்லை மாமயிலை  – மண்ணியில் நீர்

தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்

ஓங்குமுறையூர் பாணனூர்.

.

அவதரித்த ஊர் : திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்)

மாதம்: ஐப்பசி

நட்சத்திரம்: அவிட்டம்

அம்சம்: கதாயுதம்

அருளிச் செய்த பிரபந்தம்: இரண்டாம் திருவந்தாதி.

***

3.  பேயாழ்வார்

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து

நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த – பெற்றிமையோர்

என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு

நின்றது உலகத்தே நிகழ்ந்து.

அவதரித்த ஊர்:  திருமயிலை (மயிலாப்பூர்)

மாதம்: ஐப்பசி

நட்சத்திரம்:  சதயம்

அம்சம்: நந்தகம் (வாள்)

அருளிச் செய்த பிரபந்தம்: மூன்றாம் திருவந்தாதி.

***

4. திருமழிசையாழ்வார்

தையில் மகம் இன்று தாரணியீர்! ஏற்றம் இந்தத்

தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன்  – துய்ய மதி

பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று

நற்றவர்கள் கொண்டாடும் நாள்.

அவதரித்த ஊர்:  திருமழிசை

மாதம்: தை

நட்சத்திரம்: மகம்

அம்சம்: ஸ்ரீசக்ரம்

அருளிச் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி,  திருச்சந்த விருத்தம்.

 ***

5.  நம்மாழ்வார்

 ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை

பாரோர் அறியப் பகர்கின்றேன்  – சீராரும்

வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை

நாதன் அவதரித்த நாள்.

அவதரித்த ஊர்:  திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)

மாதம்: வைகாசி

நட்சத்திரம்:  விசாகம்

அம்சம்:  சேனை முதலியார்

அருளிச் செய்த பிரபந்தங்கள்:   திருவிருத்தம்,  திருவாசிரியம்,  பெரிய திருவந்தாதி,  திருவாய்மொழி.

 ***

6.  மதுரகவியாழ்வார் :

ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்து உதித்த

சீராரும் சித்திரையில் சித்திரை நாள் – பாருலகில்

மற்றுள்ள ஆழ்வார்கள் வந்து உதித்த நாள்களிலும்

உற்றது எமக்கு என்று நெஞ்சே ! ஓர்.

அவதரித்த ஊர்:  திருக்கோளூர்

மாதம்:  சித்திரை

நட்சத்திரம்:  சித்திரை

அம்சம்:  குமுத, வைநதேயம்

அருளிச் செய்த பிரபந்தம்:  கண்ணிநுண்சிறுத்தாம்பு.

***

7.  குலசேகராழ்வார்

 மாசிப் புனர்ப்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர்

தேசு இத்திவசுத்துக்கு ஏது என்னில்  – பேசுகின்றேன்

கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்

நல்லவர்கள் கொண்டாடும் நாள்.

அவதரித்த ஊர்:  திருவஞ்சிக்களம்

மாதம்:  மாசி

நட்சத்திரம்:  புனர்ப்பூசம்

அம்சம்: கௌஸ்துபம்

அருளிச் செய்த பிரபந்தம்: பெருமாள் திருமொழி.

***

8.  பெரியாழ்வார்

இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே !

இன்றைக்கு என்ன ஏற்றம் எனில் உரைக்கேன்  – நன்றிபுனை

பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த

நல் ஆனியில் சோதி நாள்.

அவதரித்த ஊர்:  ஸ்ரீவில்லிபுத்தூர்

மாதம்: ஆனி

நட்சத்திரம்: சுவாதி

அம்சம்: கருடன்

அருளிச் செய்த பிரபந்தம்:  பெரியாழ்வார் திருமொழி.

***

9. ஆண்டாள்

இன்றோ திருவாடிப் பூரம்  எமக்காக

அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத

வாழ்வான வைகுந்தவான் போகம் தன்னை இகழ்ந்து

ஆழ்வார் திருமகளா ராய்

அவதரித்த ஊர்:  ஸ்ரீவில்லிபுத்தூர்

மாதம்: ஆடி

நட்சத்திரம்: பூரம்

அம்சம்: பூதேவி

அருளிச் செய்த பிரபந்தங்கள் :  திருப்பாவை,  நாச்சியார் திருமொழி.

***

 10.  தொண்டரடிப்பொடியாழ்வார்

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர்

என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் – துன்னு புகழ்

மாமறையோன் தொண்டரப்பொடியாழ்வார் பிறப்பால்

நான்மறையோர் கொண்டாடும் நாள்.

அவதரித்த ஊர்:  திருமண்டங்குடி

மாதம்:  மார்கழி

நட்சத்திரம்:  கேட்டை

அம்சம்:  வநமாலா.

அருளிச் செய்த பிரபந்தங்கள்:  திருப்பள்ளியெழுச்சி, திருமாலை.

***

11.  திருப்பாணாழ்வார்

கார்த்திகையில் உரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்!

வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால்  – ஆத்தியர்கள்

அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின்

நன்குடனே கொண்டாடும் நாள்.

அவதரித்த ஊர்:  உறையூர்

மாதம்:  கார்த்திகை

நட்சத்திரம்:  ரோஹிணி

அம்சம்:  ஸ்ரீவத்ஸம்

அருளிச் செய்த பிரபந்தம்:  அமலனாதிபிரான்.

***

12. திருமங்கையாழ்வார்

பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ

ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் – ஓதுகின்றேன்

வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த

கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.

அவதரித்த ஊர்:  திருவாலி திருநகரி

மாதம்: கார்த்திகை

நட்சத்திரம்: கார்த்திகை

அம்சம்: சாரங்கம் (வில்)

அருளிச் செய்த பிரபந்தங்கள்:  பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,  திருநெடுந்தாண்டகம்,  சிறிய திருமடல்,  பெரிய திருமடல்,  திருவெழுகூற்றிருக்கை.

***

 தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்?

அருளிச் செயலை அறிவார் ஆர் ? – அருள் பெற்ற

நாதமுனி முதலான நம் தேசிகரை அல்லால்

பேதை மனமே ! உண்டோ பேசு.

 .

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி

தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்

உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி

செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.

சேவா பாரதியின் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

 சென்னை:

மழை வெள்ளத்தால் உடைமைகளை இழந்த எளியோரது இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், தொழில்வளத்தைச் சீரமைக்கவும் அவர்களுக்கான தொழில்முறை உபகரணங்களை சேவாபாரதி தமிழ்நாடு அறக்கட்டளை வழங்கி வருகிறது.

ஜன.10 ஞாயிற்றுக்கிழமை மாலை மணலி பெரிய மாத்தூர் விவேகானந்தா வித்யாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் சேது மாதவன் ஜி, சென்னை கோட்டத் தலைவர் கல்யாண் ஜி, சேவை ஒருங்கிணைப்பாளர் ராம ராஜசேகர் ஜி, சேவாபாரதி தமிழ்நாடு அறக்கட்டளையின் மாநிலப் பொதுச் செயலாளர் ராஜேஷ் விவேகானந்தன், மாநில அலுவலகச் செயலாளர் திருமதி இந்துமதி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இஸ்திரிப் பெட்டி, மாவரைக்கும் எந்திரம், தண்ணீர்த் தொட்டி, தள்ளு வண்டி, மூன்று சக்கர வண்டி, மின் உபகரணப் பெட்டி, சவர நாற்காலி, ப்ளாஸ்டிக் மேஜை நாற்காலி உள்ளிட்டப் பல லட்சம் பெறுமானமுள்ள 26 வகையானப் பொருட்கள் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

மண்ணில் தெரியுது வானம்- நாவல் மறுபதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி

சென்னை:

எழுத்தாளர் சிதம்பர சுப்ரமணியம் எழுதிய மண்ணில் தெரியுது வானம் நாவலின் மறுபதிப்பு வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது.
ந.சி.சு அறக்கட்டளை சார்பில் ந.சிதம்பர சுப்ரமணியம் எழுதிய மண்ணில் தெரியுது வானம் என்ற இந்த நாவலின் மறுபதிப்பை எழுத்தாளர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட, எழுத்தாளர் சாரு நிவேதிதா பெற்றுக் கொண்டார். தீபம் இதழின் பொறுப்பாசிரியர் செங்கோட்டைஸ்ரீராம், சென்னை வானொலி முன்னாள் இயக்குனர் விஜய திருவேங்கடம் ஆகியோர் நாவலைக் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினர்.

 

ந.சி.சு குடும்பத்தினர் சார்பில் நடேசன், கிருஷ்ணன், சுந்தரம், தியாகராஜன், திருமதி பாலா, வத்சலா, கிரிஜா, உஷா, சாரதா ஆகியோருடன் வாசக அன்பர்கள் பலர் கலந்து கொண்னர். சுந்தரம் நன்றி கூறினார்

தேவருலகான வானகத்து ராம ராஜ்யத்தை மண்ணுலகில் நிலவச் செய்த ராமனின் ஆட்சியைப் போன்று தனது கிராம ராஜ்யக் கனவை இந்த மண்ணில் பரப்ப எண்ணிய காந்திஜியின் கால ஓட்டத்துடனே செல்லும் நாவல் இந்த மண்ணில் தெரியுது வானம்.

தகவல்: வல்லிபுரம் சுபாஷ் சந்திரன்

 

 

ந.சி.சு அறக்கட்டளை சார்பில் ந.சிதம்பர சுப்ரமணியம் எழுதிய மண்ணில் தெரியுது வானம் என்ற நூலினை மறுபதிப்பு செய்து வெ…

Posted by Subashchandran Vallipuram on Sunday, January 10, 2016

இந்தியாவில் 13 இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்

புது தில்லி:

இந்தியாவில் 13 இடங்களில் பங்கரவாத தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் பங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பதான்கோட்டில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்க பங்கரவாதிகள் தங்களது இயக்கத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள். ஒரு பெண்கள் பிரிவையும் உருவாக்குகிறார்கள் என்ற நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததும், இந்திய உளவுத்துறையினர் உஷார் ஆனார்கள். அவர்கள் ஜெய்ஷ் இ முகமது பங்கரவாத இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்க காரணமான அந்த இயக்கத்தின் தளகர்த்தர்கள் யார், யார் என்ற தகவலை திரட்டினார்கள். அதைத் தொடர்ந்து அவர்களது தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்டு பதிவு செய்யத் தொடங்கினார்கள்.

அப்போதுதான் பதன்கோட் தாக்குதலுக்கு முன்பாக, அந்தத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட 4 பங்கரவாதிகளில் ஒருவரான ஜெய்ஷ் இ முகமது பங்கரவாத இயக்கத்தின் தலைவன் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ராவுப் அஸ்காரின் தொலைபேசி உரையாடல் என்று நம்பப்படுகிற ஒரு உரையாடலை இந்திய உளவுத்துறையினர் இடைமறித்துக் கேட்டு பதிவு செய்துள்ளனர்.

அதில் அவர், ‘‘ஜெய்ஷ் இ முகமது இயக்கம், புதிய போராளிகளை பெற்றிருக்கிறது. (பாராளுமன்ற தாக்குதல் பங்கரவாதி) அப்சல் குரு 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததற்கு பழி வாங்கும் விதத்தில் 13 இடங்களில் பங்கரவாத தாக்குதல்கள் நடத்துவோம். இதற்கு அனைத்து தரப்பிடமிருந்தும் எங்களுக்கு ஒப்பற்ற ஆதரவு கிடைத்துள்ளது’’ என கூறி உள்ளார்.

மற்றொரு தொலைபேசி உரையாடலில் ஒருவர், ‘‘பாகிஸ்தானில் உள்ள 300 போராளிகள் தாக்குதல்கள் நடத்த தயார் நிலையில் உள்ளோம். எங்கள் சகாக்களில் சிலரை இந்தியாவில் ஊடுருவ செய்துள்ளோம். அவர்கள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருக்கிறார்கள்’’ என கூறி உள்ளார்.