Home Blog Page 5862

தமிழக அமைச்சர் அலுவலகத்தில் குண்டு வீச்சு

 
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லுார் ராஜூவின் மேற்குத் தொகுதி சட்டமன்ற அலுவலகம் நேற்று இரவு 12 மணியளவில் இரண்டு மர்மநபர்கள் அலுவலகத்தின் மீது அடுத்தடுத்து குண்டு வீசியுள்ளனர்.
நாகேந்திரன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை ஆணையாளர்கங்காதர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதில் அலுவலகத்தின் கதவு தீ பிடித்து சேதம் அடைந்தது .மேலும் அலுவலகம் முன் கண்ணாடி துகள்கள் சிதறி கிடக்கின்றது.
இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் அலுவலகத்தின் கதவு சேதமடைந்ததுள்ளதாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது .
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியதில் கோயில் அருகே உள்ள சுவர் சேதமடைந்தது. இந்நிலையில் அமைச்சர் அலுவலகத்தின் மீதும் அதிமுக அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

போலி இறப்பு சான்றிதழ் மூலம் கணவனின் சொத்தை மோசடி செய்த மனைவி, மகன் சிறையில் அடைப்பு !

 
சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (55). இவரது மனைவி டயானா பாபு (53), மகன் சாம்சன் நிர்மல் குமார் (24). கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்துதாசுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையை தனது கணவர் இறந்து விட்டதாக டயானா பாபு போலியான இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழை தயார்செய்து வேறு ஒருவருக்கு டயானா பாபுவும், அவரது மகனும் விற்பனை செய்து விட்டனர்.
மேற்படி விபரத்தை கேள்விப்பட்டு கிறிஸ்துதாஸ் அதிர்ச்சி அடைந்து சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் லலிதா லட்சுமி தலமையிலான காவல் துறையினர் கணவன் உயிரோடு இருக்கும் நிலையில் இறந்து விட்டதாக போலி ஆவணம் தயார் செய்து மோசடி செய்த மனைவி டயானா பாபு, சாம்சன் நிர்மல் குமார் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட தமிழக காவல் துறையினர்!

 
சென்னை கோயம்பேடு பகுதியில் தமிழக காவல் துறையில் பணியாற்றும் 3 காவலர்கள் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல் துறையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் ரகளையில் ஈடுபட்ட குடிகாரக் காவலர்களை பொதுமக்கள் பலர் தட்டி கேட்டதிற்கு அவர்கள் அதிகார தோரணையில்அநாகரீகமான வார்த்தைகளால் பொதுமக்களைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.
நடைபெற்ற சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் அந்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து குடிகாரக் காவலர்கள் மூன்று பேரையும் பத்திரமாக பொதுமக்களிடம் இருந்து மீட்டு சென்றனர்.
அப்போது தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களே ரகளையில் ஈடுபட்டு காவல் துறைக்கு மிகவும் பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவது வெட்கக்கேடானது என பொதுமக்கள் காவல் துறையை திட்டித் தீர்த்தனர்.
மேலும் தமிழக காவல் துறையில் பணியாற்றும் ஊழியர் பெரும்பாலானோர் பணி நேரத்திலும் குடிபோதையில் உள்ளதாகவும், அவர்களை யார் தட்டிக் கேட்கமுடியும்? அவர்கள் மீது யாராவது நடவடிக்கை எடுக்க முடியுமா? என பொதுமக்கள் புலம்பிக் கொண்டு உள்ளனர் .
அரசாங்கப் பணியில் பணியாற்றுபவர்கள் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குற்ற செயல்களில் ஈடுபடும்போது அந்த கருப்பு ஆடுகள்மீது துறைரீதியான நடவடிக்கை எனும் பெயரில் பேருக்காக உடனடி நடவடிக்கை எனும் பெயரில் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்வதை அரசாங்கம் முதலில் ரத்து செய்யவேண்டும்.
மாறாக அந்த கருப்பு ஆடுகள்மீது சட்டரீதியாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். மேலும் குற்ற செயலில் ஈடுபட்டவரின் வழக்கு நீதிமன்றத்தில் முடிந்து தீர்ப்பு வரும் வரை அவரை அரசாங்கப் பணியில் அமர்த்தக் கூடாது.
நீதிமன்றத்தில் அவர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அந்த கருப்பு ஆட்டை மீண்டும் அரசாங்கப் பணியில் பணியாற்ற முடியாதபடி அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமே.
அரசாங்கத்தில் பணியாற்றும் கருப்பு ஆடுகள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல !
குடிபோதையில் ரகளை செய்த காவலர்கள் மூன்று பேரையும் பத்திரமாக பொதுமக்களிடம் இருந்து மீட்டுச் சென்றபோது எடுக்கப்பட்ட காணொளி தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: கவிஞர் வைரமுத்து அறிக்கை!

தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது.

ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த உரிமைக்காகப் போராடியவர்களுக்கும் மீட்டுத் தந்த பெருமக்களுக்கும் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன்.

இது நிரந்தரமான உரிமையாக வேண்டுமென்றால் முறைப்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களையும் அனுமதி அளித்த பிரதமர் பிரதமர் மோடி அவர்களையும் தமிழ் இன உணர்வாளர்கள் பாராட்டுகிறார்கள் இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

நடிகர் சங்க உறுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கப்படும்: பொன்வண்ணன் பேட்டி

நடிகர் சங்க உறுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளாதாக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். பொன்வண்ணன் அளித்த பேட்டி:

நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து சுமார் 9௦ நாட்கள் ஆகிவிட்டது. வந்த தேதியில் இருந்து இன்று வரை நினைவுகூர்ந்து பார்த்தால் இந்த 9௦ நாட்களும் நாங்கள் சரியான அளவில் நிறைய வேலைகள் பார்த்துள்ளோம் என்றே சொல்லலாம். பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து அலுவலகம் சார்ந்த நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளை முதலில் சீர்செய்துள்ளோம்.

சென்னையில் திரைப்படங்களையே நம்பி வாழ்கின்ற துணை நடிகர்கள் வேலை செய்ததற்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. அது பல நிறுவனங்களிலும், ஏ.ஆர்.ஓ எனப்படும் நியமன பொறுப்பாளர்களிடமும் நிலுவையில் இருந்தது. இதையெல்லாம் ஒழுங்குப்படுத்தி இருக்கிறோம், அந்த உறுப்பினருக்கான பணங்களை வாங்கி கொடுத்துள்ளோம். பிறகு ஏ.ஆர்.ஓ என்பவர்களுக்கான பொறுப்பு என்ன அவர்கள் திரைத்துறையில் எப்படி அணுகி படங்களை பெற வேண்டும், அதே போல அவர்கள் திரைத்துறையில் பணியாற்றும் போது அவர்கள் உறுப்பினர்களை எப்படி வழிநடத்த வேண்டும், எப்படி வேலை வாய்ப்பு வாங்கி தரவேண்டும், அவர்களுக்கான ஊதியத்தை எப்படி பெற்று தரவேண்டும் இப்படி எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி அந்த ஒழுங்குமுறைக்குள் வருகிறவர்களை பொறுப்பில் அமர்த்தியுள்ளோம். இது ஒருவிதமான செயல்பாடு.

நாங்கள் பொறுப்புக்கு வந்து இதுவரை மூன்று செயற்குழு நடத்தியுள்ளோம், ஒன்று மாதாந்திர செயற்குழு, மற்றொன்று சிறப்பு செயற்குழு. மூன்று செயற்குழுவிலும் அனைத்தும் முறைப்படி விவாதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள உறுப்பினர்கள் 2,5௦௦ -பேருக்கு தீபாவளி பரிசு பொருட்களை நாங்கள் அனுப்பிவைத்தோம். அந்த மிகப்பெரிய வேலையை நமது, செயற்குழு உறுப்பினர்களும், நடிகர்களும் வெளிமாவட்டங்களுக்கு சென்று உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து பரிசு பொருட்களை வழங்கிவந்தனர்.

தீபாவளி முடிந்த ஒருவார இடைவேளையில் மழையினுடைய வெளிப்பாடு தீவிரம் அடைந்து கடலூர் மிகவும் பாதிக்கப்பட்டது. நாங்கள் நடிகர் சங்கத்தின் சார்பாகவும், நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் சார்பாகவும் அங்குள்ள ஒரு கிராமத்துக்கு அனுப்பிவைத்தோம். அம்மழையின் தொடர்ச்சியாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்து சென்னை பாதிக்கப்பட்டது, கடலூர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் சங்கம், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து தொடர்ந்து 15 நாள் நிவாரண பணியில் நடிகர் சங்கம் ஈடுபட்டது.

அது முடிவடைந்தவுடன் தற்போது நிர்வாகத்தினுடைய தேவைகள் என்ன என ஆராய்ந்து இடைவேளை ஏதும் இல்லாமல் நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய குருதட்சணை திட்டம் எனப்படும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளோம். குருதட்சனை திட்டம் என்றால் ஒரு செயலை செய்வதற்கு நாம் கற்றுக்கொள்ளும் குருவுக்கு தட்சணை வைத்து நாம் அவருக்கு செலுத்தும் முதல் மரியாதைக்கு பெயர் தான் குருதட்சணை.

குருதட்சனை திட்டத்தால் பயன் அடைபவர்கள் இரண்டு வகைப்படுவர். அதில் ஒரு வகை வசதிபடைத்தவர்கள் நடிகர் சங்கத்துக்கு குருதட்சணையாக செய்வது, மற்றொன்று வசதி இல்லாதவர்களுக்கு குருதட்சணையாக நடிகர் சங்கம் செய்வது என்று இருவகைப்படுகிறது. இப்படி இரண்டு விதமான தன்மையில் இந்த குருதட்சனை திட்டம் உள்ளது.

எந்த திட்டம் தொடங்கினாலும் அதில் முதலில் நமக்கு தேவை ஒழுங்குபடுத்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களை பற்றிய விவரம் முதலியவை ஆகும். ஏனென்றால் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று நமக்கு தெரிந்தால் தான் நம்மால் ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிகிறது. நாங்கள் பொறுப்பில் இருக்கும் இந்த மூன்று வருட காலத்தில் இந்த நடிகர் சங்கத்துக்கு எவ்வளவு செய்துவிட முடியுமோ அவ்வளவையும் செய்துவிட வேண்டும் என்று முடிவுசெய்துள்ளோம், எங்களுடைய கனவும் அதுதான். அதற்க்கான முயற்ச்சியையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.

எங்களுடைய உறுப்பினர்கள் யார் ?? அவர்களுக்கு என்ன தேவை, அவர்கள் வீட்டில் யாருக்கும் கல்வி தேவையா ?? அல்லது வயதானவர்களுக்கு மருத்துவம் தேவையா ?? மருத்துவம் தேவை என்றால் என்னவிதமான மருத்துவம் தேவை ?? எத்தனை பேருக்கு தேவை ?? முதியோருக்கு ஓய்வூதியும் வழங்கவுள்ளோம், அது எத்தனை பேருக்கு தேவை என்ற விவரங்கள் எங்களிடம் இருந்தால் தான் நாங்கள் சிறப்பாக பணியாற்ற முடியும்.

இனி நாங்கள் நடிகர் சங்கம் மூலமாக எதை செய்வதாக இருந்தாலும் எங்களுக்கு தேவை உறுப்பினர்களின் கணக்கெடுப்பு, அது தான் குருதட்சணை திட்டம். சென்னையில் மட்டும் 15௦௦ உறுப்பினர்கள் உள்ளனர், அதே போல் வெளியூரில் 1௦௦௦ உறுப்பினர்கள் உள்ளனர் இதுபோக வாழ்நாள் உறுப்பினர்கள் என்ற பிரிவில் நாடக நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் 5௦௦ பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இப்படி எல்லாம் சேர்த்து 275௦ பேர் உள்ளனர்.

இந்த உறுப்பினர் கணக்கெடுப்பை சென்னையில் இருந்து ஆரம்பிக்க முடிவெடுத்தோம். முதலாவதாக சென்னையில் 7 நாளாக இந்த கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தோம். ஒரு நாளைக்கு 25௦ என்று பிரித்து, ஒவ்வொரு பகுதியாக சென்று கணக்கெடுப்பை நடத்த முடிவுசெய்தோம். பகுதி வாரியாக 25௦ பேரை பிரித்து அவர்களுக்கு எந்த தேதியில் எங்கே வரவேண்டும் என்ற விவரத்தோடு கடிதம் எழுதி அனுப்பி, பின்னர் அப்பகுதிகளுக்கு சென்று குருதட்சனை திட்டத்தின் கீழ் அவர்களை சந்தித்தோம்.

இந்த நிகழ்வை துவக்கி வைத்து சிறப்பித்தவர் எங்களுடைய மூத்த கலைஞர் நடிகர் சிவகுமார் அவர்களும், திருமதி.சச்சு அம்மா, திருமதி.மேனகா அவர்கள். நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அந்த இடத்தில் தான் நாங்கள் இந்நிகழ்வை துவக்கினோம். நாங்கள் இந்த நிகழ்வுக்காக இயக்குநர் சங்கத்திடம் பேசி இருபது உதவி இயக்குநர்களை வரவழைத்திருந்தோம் அவர்கள் தான் இந்த விண்ணப்பபடிவத்தை எல்லாம் சரி பார்ப்பது முதலிய வேலைகளை செய்தனர்.

அதோடு வருகிற 25௦ உறுப்பினர்களும் பயனடையும் வகையில் அவர்களுக்கு உணவு, தேனீர், மருத்துவ முகம் போன்ற பல்வேறு விஷயங்களை செய்திருந்தோம். இந்த விண்ணப்படிவத்தை பார்த்தவுடனேயே, அவர்களுக்கு மருத்துவ முகாமில் ஒரு செக்அப் செய்து, கண்பார்வை பிரச்சனைகள் இருந்தால் உடனே அவர்கள் கண்ணாடி வழங்குவது போன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

மிகப்பெரிய குறைபாடு உள்ளவர்களை குறிப்பெடுத்து கொண்டு. சாதரணமான பிரச்சனை உள்ளவர்களுக்கு சாதாரண வாசிப்பு கண்ணாடி வாங்கி கொடுத்தோம். தினமும் 5௦ல் இருந்து 75 பேருக்கு இந்த கண்ணாடியை நாங்கள் வழங்கியுள்ளோம். வந்தவர்கள் அத்தனை பேருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

வேல்ஸ் பல்கலைகழகத்தில் இருந்து விஸ்காம் படிக்கும் 1௦ மாணவர்கள் 1௦ கேமராவுடன் வந்திருந்தார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சின்ன சின்ன அரங்கங்கள் தயார் செய்து, கேமராமேன் வேல்ராஜ் அவர்கள் வழங்கிய லைட்ஸ்-உடன் உதவியாளர்களையும் அனுப்பி வைத்து முறைப்படி லைட்ஸ் செட்டிங்க்ஸ் எல்லாம் தயார் செய்து, வந்த உறுப்பினர்கள் அத்தனை பேரையும் அப்படி லைட்ஸ் செய்யப்பட்ட அந்த இடத்தில் வைத்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அதுபோக வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவின் உபயோகம் யாதெனில் “தாங்கள் நடித்ததற்கான பதிவேதும் இல்லாத துணை நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் சரியாக லைட் செய்யப்பட்ட அழகான இடத்தில் வைத்து அவர்கள் திறமையை வெளிப்படுத்தும்படி கூறி அவர்களுக்கு தோணுவதை அதாவது பாடுவது, பேசுவது போன்ற விஷயங்களை செய்ய சொல்லி அவர்களுடைய குரல், முகம், பாவனைகள் போன்றவற்றை பதிவு செய்யும் வகையில் இதை அமைத்தோம்.

அதை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இணையதளத்தில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். இணைய தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த பதிவை தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இங்கே உள்ள இயக்குநர்கள் போன்றவர்கள் பார்க்கும் வகையில் நாங்கள் அதை அமைத்துள்ளோம். அவர்களுக்கு தேவைப்படும் வித்தியாசமான முகஅமைப்பு, குரல் ஆகிவற்றை இதன் மூலம் தேர்ந்தெடுத்து பயன்பெற்றுக்கொள்ள வாய்ப்புகளை நாங்கள் ஏற்ப்படுத்தியுள்ளோம்.

சென்னையில் இந்த நிகழ்வானது 7 நாட்கள் நடைபெற்று முடிவடைந்துவிட்டது. வெளியூரில் இருப்பவர்கள் அனைவரும் திரைப்பட துறையில் உள்ளவர்கள் அல்ல அவர்கள் அனைவரும் முழுக்க முழுக்க நாடகத்தையே வாழ்க்கையாக கொண்டவர்கள்.

நாடக கலைஞர்களையும் திரைப்பட நடிகர்களையும் ஒன்றாக்கி ஒரு நாடகத்தை நடத்த உள்ளோம் இது எதிர்கால திட்டமாக எடுத்துள்ளோம். வெளிமாவட்டங்களில் இருப்பவர்களுக்கு இந்த கணக்கெடுப்பின் மூலம் உதாரணமாக புதுகோட்டையில் 150 நாடக நடிகர்கள் உள்ளனர். அங்கு உள்ள முதியவர்கள் எத்தனைபேர் ? அவர்களுள் எத்தனை பேருக்கு ஓய்வூதியம் தேவைப்படுகிறது. எத்தனை பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது.. என்று பார்த்து அவர்களுக்கு அருகில் இருக்கக் கூடிய மருத்துவமனையில் பேசி ஒரு சலுகை பெற்று தரப்படும்.

படிக்கிற குழந்தைகளுக்கு புதுக்கோட்டையை சுற்றி உள்ள கல்லூரிகளில் நுழைவு சீட்டு பெற்று தர முடியும். என பல வழிகளில் கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் குருதட்சனை திட்டம் என்று பெயர் வைத்தோம். இந்த ஜனவரி இறுதிக்குள் அனைத்து கலைஞர்களின் குடும்ப கணக்கெடுப்பு எடுத்து முடிக்கப்படும். அதற்க்கு பிறகு சென்னையில் இருக்க கூடிய பெரிய நடிகர்களுக்கு விண்ணப்பங்களை அவரவர் PRO மூலமாக அனுப்ப உள்ளோம்.

இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் ஏற்கனவேயுள்ள உறுப்பினர்களுடைய எண்ணிக்கை தொடர்ச்சியாக இல்லாமல் விடுபட்டு உள்ளது. இது எப்படி நடக்கிறது என்றால் முதிய உறுப்பினர்கள் காலமாவதினால் எண்கள் விடுபட்டு இருக்கின்றன. இதை ஒழுங்கு படுத்தி உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் தொடர் எண்கள் கொடுக்கப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு ஆனது நிர்வாகங்களின் மூலம் திட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டு கல்வி, மருத்துவம், என எல்லா அவசர கால உதவிக்கும் பயன்படுத்தப் படுவதே இந்ததிட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று கூறியுள்ளார்.

தமிழக காவல் துறையின் மானத்தை கப்பல் ஏற்றிய காவல் ஆய்வாளர்

தமிழக காவல் துறையில் திருவண்ணமலை மாவட்டத்தில் ஆய்வாளராக பணியாற்றும் பழனி என்று கூறப்படுவர் ஒரு குற்ற வழக்கில் இருந்து குற்றவாளியை சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் வழக்கறிஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டும் கைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவு ஒன்று வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் காவல் ஆய்வாளர் கைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவை சி.டி யில் பதிவிட்டு அந்த ஆடியோவை அவரால் பாதிக்கப்பட்டவர்கள் உளுந்தூர்பேட்டை பகுதியில் பொதுமக்களிடம் இலவசமாக வினியோகம் செய்து வருவதாக வாட்ஸ் ஆப்பில் தகவல் வைரலாக பரவிவருகிறது..
அந்த ஒலிப்பதிவில் காவல் ஆய்வாளர் அநாகரீகமான கீழ்த்தரமான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
வாட்ஸ்ஆப்பில் வெளியான ஆய்வாளர் ஒலிப்பதிவுடன் கூறப்படும் இருவிதமான தகவல்களாவது :-
1) பணம் கொடுத்தால் கொலை செய்யகூட ரூட் போட்டு கொடுப்பாரு போல ஆய்வாளர் பழனி. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் திருவண்ணாமலை தாலுக்கா காவல் ஆய்வாளர் பழனி.
டுபாக்கூர் வக்கீல்…லஞ்சப் பணத்தை அருமையாக பிரித்து கொடுக்கும் அழகு…கீழ்த்தரமான வார்த்தைகள் நாக்கில் நடனம்…எஸ்.பி க்கு நெருக்கம்…..கேடி புத்தி…..கிரிமினல் சகவாசம்….⁠⁠⁠⁠
2) மேற்கண்ட இன்ஸ்பெக்டர் உளுந்தூர்பேட்டை யில் பல்வேறு புகாரின் அடிப்படையில் தான் திருவண்ணாமலை இடமாற்றம் செய்யப்பட்டார் .
தமிழக காவல் துறையில் உயர்ந்த பதவி அதிகார இருக்கையில் நேர்மையாகவும் நியாயமாகவும் பணியாற்றும் சில அதிகாரிகள் இருக்கின்றனர். ஆனால், பலர் காட்டுதர்பார் செய்து கொண்டு பண பேரம் செய்து வருகின்றனர் என்பது இது போன்று வெளியாகும் ஆடியோக்களால் வெளியில் தெரிகிறது.
தன்னிச்சையாக பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பண வேட்டை நடத்த சட்டத்திற்கு புறம்பான செயல்களில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வேதனை தரக்கூடியது.
மக்களின் வரி பணத்தை சம்பளமாக பெற்று கொண்டு அரசாங்க பணியில் பணியாற்றுபவர்கள் பொது மக்களின் நலனில் அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு .
காவல் ஆய்வாளர் மிரட்டிய கைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவு புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளியாக வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்கும் ஆய்வாளரின் உரையாடல்! எனும் தலைப்பில் www.dhinasari.com
இணைய தமிழ்ச் செய்தித் தளத்தில் இன்று வெளியிப்பட்டுள்ளது.

மதுரையில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி INGENIOUS’ 2K16 : தங்கும் வசதி உணவு இலவசம்

 
நீர் வழிச் சாலை திட்டம் குறித்த மாநில அளவிலான INGENIOUS’2K16 எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி மதுரை அழகர் கோவில் அருகேயுள்ள லதாமாதவன் தொழில்நுட்பக் கல்லூரியில் வருகிற ஜனவரி 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருப்பதாக நீர் வழிச் சாலை திட்டக் குழு உறுப்பினரும், நாவாட் டெக் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் ஏ.சி.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
மேலும் பேராசிரியர் ஏ.சி.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது :-
 
 
நீர் வழிச் சாலை திட்டம் குறித்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை நவாடு எனும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையமும், லதாமாதவன் கல்வி குழுமமும் இணைந்து நடத்துகிறது.தமிழ்நாட்டில் படிக்கும் அனைத்து பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் கண்காட்சி மாநில அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மாணவர்களின் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளையும், அவர்களது திறமையையும் ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான போட்டிகளும் நடைபெறவுள்ளன. போட்டிகளில் பங்குபெற எவ்விதமான கட்டணமும் இல்லை .மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் எந்த மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் வேண்டுமானாலும் பங்குபெறலாம். அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கல்லூரியில் தங்கும் வசதியும், உணவும் இலவசமாக அளிக்கப்படும்.
 
அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் என்ற மூன்று தனிப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மூத்த மாணவ அறிவியலாளர், இளம் அறிவியலாளர், வளரும் அறிவியலாளர், எனும் மூன்று விருதுகள் தனித்தனியே வழங்கப்பட உள்ளது.
 
மேலும் அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்புமிக்க பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார் பேராசிரியர் ஏ.சி.காமராஜ் .
 
 
மாணவர்கள் அவர்களுடைய அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை நடைபெறும் கண்காட்சியில் இடம் பெறச் செய்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கலாம். நீர் வழிச் சாலையால் ஏற்படும் நன்மைகள் குறித்து இளைஞர்கள் அனைவருக்கும் விளக்கம் அளிக்கும் பொருட்டு இந்த கண்காட்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
நாளைய இந்தியா வளம் பெறவும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்யவும், நீர் வழிச் சாலை திட்டத்தை உடனே அரசு செயல்படுத்த வலியுறுத்தியும், அனைவருக்கும் இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த அறிவியல் கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைச் செல்வங்களை அவர்களுடைய கண்டுபிடிப்புகளுடன் பங்கேற்கச் செய்ய வேண்டுமென நீர் வழிச் சாலை திட்டக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஏ.சி.காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்பது குறித்தான மேலும் விபரங்களுக்கு மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரப்படி கண்காட்சி குழுவினரை அவர்களது கைபேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என பேராசிரியர் ஏ.சி.காமராஜ் அறிவித்துள்ளார்.
 
 
பள்ளி மாணவர்கள்:-
 
S. தமிழ்சோலை 98420 06058
பெரிய பாண்டி 88838 70539
 
பாலிடெக்னிக் மாணவர்கள்:-
 
K. மோகன் 95004 82667
S. பிரபு 99429 03933
 
பொறியியல் மாணவர்கள்:-
 
S. சதீஸ் குமார் 99655 03934
T.K சிவகுமார் 80569 94854
 
கலை மற்றும் அறிவியல் மாணவர்கள்:-
 
U. ஹரி சுதன் 96261 38881
M. முருகன் 98656 50377
 
ஐடிஐ மற்றும் ஐடிஎஸ் மாணவர்கள்:-
 
A. செல்வராஜ் 97509 44663
மயில்வாகனன் 98420 17872
 
அறிவியல் கண்காட்சி குறித்தான மற்ற விபரங்களுக்கு :
 
நாவாட் டெக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள்:
 
D. மணிகண்டன் 81484 60751
M. கார்த்திகேயன் 96008 07016

தைப் பூசத்துக்கு அரசு விடுமுறை விட வேண்டும்: நாம் தமிழர் சீமான்

மதுரை:
தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தினார்.
மதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது…

தமிழ் கடவுளான முருகனுக்கு கொண்டாடப்படும் தைப்பூசம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் இதை கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் பிறமொழி திருவிழாக்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே போல் தமிழர் திருநாளான தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை வரவேற்கிறோம். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தி.மு.க.,வுடனான கூட்டணி தொடரும்: முஸ்லிம் லீக் காதர் மொய்தீன்

சென்னை:
திமுக.,வுடனான கூட்டணி தொடரும் என்று முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை இந்தியன் யூனியன் முஸ்லிம் ‘லீக்’ மாநில தலைவர் காதர் மொய்தீன் இன்று சந்தித்துப் பேசினார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.

விழுப்புரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் ‘லீக்’ மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பிதழ் கொடுப்பதற்காக கருணாநிதியை சந்தித்தார். அதற்கு, மு.க.ஸ்டாலினை மாநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கருணாநிதி உறுதி அளித்தார்.

இதன் பின்னர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசியபோது,

சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் தொடர்வோம். அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க. தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்று சேர வேண்டும். தி.மு.க. கூட்டணியை தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறினார்.

ஜல்லிக்கட்டு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

புது தில்லி:

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிராணி நல சங்கத்தினர் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். அவ்வாறு வழக்கு தொடரப்பட்டாலோ, அல்லது இடைக்காலத் தடை கோரினாலோ, அதன் மீது முடிவெடுக்க, தமிழக அரசின் தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டும். தமிழக அரசை விசாரிக்காமல் எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்று கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து கடந்த 7ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இதனை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பு வழக்குத் தொடர திட்டமிட்டிருக்கிறது. இதனால், தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.