Home Blog Page 5888

அதிஷ்டம் இருந்தா மட்டும் வெற்றி கிடைக்காது… சொல்கிறார் ஜெயம் ரவி!

24ஆம் தேதி வெளி வந்து உலகெங்கும் பெரும் வெற்றியை குவிக்கும் பூலோகம் 2015 ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜெயம் ரவி ஒரு குத்து சண்டை வீரராக, வட சென்னையின் பிரபலமான குத்து சண்டை பரம்பரையின் வாரிசாக வந்து அசத்தி இருக்கிறார்.

2015 ஆம் ஆண்டில் ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் ஆகிய படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து இப்போது பூலோகம் மூலம் இந்த வருடத்தை ஜெயத்துடன் நிறைவு செய்கிறார்.

இதுகுறித்து ஜெயம் ரவி கூறும்போது, ‘தொடர் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் மட்டும் வருவதல்ல. ஒருங்கிணைந்த உழைப்பும் திட்டமிடுதலும், பெரியவர்கள் ஆசியும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். வெற்றியோ தோல்வியோ அது என் கவனத்தை சிதறிடபதில்லை. என் கடமையில் மட்டுமே கருத்தாக இருக்கிறேன். இன்று பூலோகம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

படப்பிடிப்பின் போதே நாங்கள் இந்தப் படம் வெற்றி பெரும் என்றுக் கணித்தோம். படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றதில் எங்களுக்கு பெருமையே. ஒரு குத்து சண்டை வீரராகவே தெரிய வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருந்தேன். கடினமான பயிற்சியும் மேற்கொண்டேன். அந்த தீவிரத்தை திரையில் பிரதிபலிக்க வைத்த பெருமை இயக்குனர் கல்யாணுக்கு மட்டுமே சேரும்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானவர் ஜனா சார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் நான் பேசும் வசனங்களுக்கு கிடைக்கும் கைதட்டல்கள் அவருக்கு பெருமை சேர்க்கும். அவரது வசனங்கள் சமுதாயத்தின் மேல் உள்ள அவரது அக்கறையையும் காட்டுகிறது. அவரது வசனங்கள் பூலோகம் பாத்திர படைப்புக்கு மேலும் வலு சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் சதீஷ் என்னுடன் ஏற்கனவே பேராண்மை படத்தில் பணியாற்றியவர். பூலோகம் திரைப் படத்தில் அவரது அசாத்திய பணி ஹாலி வூட் நுட்பக் கலைஞர்களுக்கு இணையானது என்றால் மிகை ஆகாது.

இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இந்தப் படத்தின் மிக பெரிய பலம் எனலாம். வட சென்னையின் வாழ்வியலை இசை மூலம் சேர்த்த விதத்தில் இந்த வெற்றிக்கு அவரும் பெரிய காரணம் ஆவார். மாஸ் படங்கள் என்றால் ஸ்ரீகாந்த் தேவா என்றுக் கூறும் வகையில் அவர் நிச்சயம் ஜொலிப்பார்.

இந்த நேரத்தில் ‘பூலோகம்’ தயாரித்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் சாருக்கும் நான் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். ஒரு மாஸ் ஹீரோவாக என்னை திரைப்பட வர்த்தகத்தில் காட்டுவதில் ‘பூலோகம்’ படத்துக்கு பெரும் பங்கு இருக்கிறது.

ஊடக நண்பர்கள் எனக்கு அளித்த ஆதரவு சொல்லில் அடங்காது. அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எல்லாவற்றுக்கும் மேலே, எனக்கு உறுதுணையாக இருந்து என்றும் ஆதரவு தரும்என் ரசிகர்களுக்கும் கோடான கோடி நன்றி என்று கூறினார் உற்சாக புன்னகையோடு ஜெயம் ரவி.

பசங்க 2 படம் பார்த்து சிவகுமார் என்ன சொன்னார் தெரியுமா?

சூர்யாவின் தந்தை சிவகுமார் இன்று பசங்க 2 படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த அவர் கூறியுள்ளதாவது, நண்பர்களே இன்று பசங்க 2 படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன். உளவியல், உடலியல், பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விசயங்கள், தாயாக வேண்டியவர் நடந்துகொள்ள வேண்டிய தகவல்கள், கணவர் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள், இன்றைய காலகட்டத்தில் கணவரும், மனைவியும் எவ்வாறு வாழக்கை வாழ்கிறார்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுப்பது, கற்றலில் அதீத திறமை உடைய மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது உட்பட சமுகத்தின் பல்வேறு தகவல்களை புட்டு, புட்டு வைக்கின்றனர்.

கற்றலில் அதீத திறமை உள்ள மாணவர்கள் எவ்வாறு எல்லாம் புரிந்து கொள்ள படாமல் பெற்றோரிடமும், சமூகத்தினாலும், ஆசிரியர்களாலும் வதைக்கபடுகின்றனர், சக மாணவர்களால் எவ்வாறு மோசமாக நடத்த படுகிறார்கள், பள்ளிகள் அவர்களை எவ்வாறு நடத்துகின்றன, எவ்வாறு சரியாக நடத்த வேண்டும் உட்பட மிக அருமையாக சொல்லி உள்ளனர்.

பள்ளி முதல்வர்கள் மார்க் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து எவ்வாறு எல்லாம் சொற்களால் மாணவர்களை கொச்சை படுத்துகின்றனர், அவர்களது பெற்றோர்களை எவ்வாறு அசிங்கபடுத்துகிண்டறனர், 70 கிலோ உள்ள தந்தை, தாய் 15 கிலோ உள்ள ஒரு குழந்தையை அடிப்பது எவ்வளவு அராஜகமான செயல் என்று பெற்றோர் பிள்ளையை அடிக்கும் பகுதியை அழகாக எடுத்து கூறி அதன் வீரியத்தை தெளிவாக சொல்லி உள்ளனர்.

அனைத்து குழந்தைகளுக்கும் போட்டி போட ஆசை உள்ளதையும்,வெற்றி பெறும் பிள்ளையை மட்டுமே அனைத்து போட்டிகளுக்கும் அழைத்து சென்றால் மற்ற பிள்ளைகளுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதை அழகாக எடுத்து சொல்லி உள்ளதுடன், மேடையில் ஏறும் அனைவருமே வெற்றி பெற்றவர்கள்தான் என்பதும், மேடை ஏறுவது மட்டும்தான் நமது வேலை, வெற்றி பெறுவது பற்றி கவலை இல்லை என்பது சூப்பர். ஆனால் இன்றைய நிலையில் இப்படி பள்ளிகளை பார்ப்பது மிக அரிது.

கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இன்றைய மருத்துவர்களால் எவ்வாறு ஏமாற்ற படுகிறார்கள், அவர்கள் படும் வேதனை என்ன என்பதனை மிக தெளிவாக காட்டி உள்ளனர். சமுகத்தில் இது போன்ற கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகள் அனைவரையும் பெருவாரியான ஆசிரிர்களும், மற்றவர்களும் ஒதுக்கியே வைக்கின்றனர்.

அவர்களுக்குள்ளும் பல்வேறு திறமைகள் உள்ளது, அதனை எவ்வாறு சரி செய்வது என்பது உட்பட பிரட்சினைகளை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வினையும் இப்படம் தெளிவாக விளக்கி உள்ளதால் இதனை அனைத்து விதமான பள்ளி, கல்லூரிகளிலும் வெளிட்டால் கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகள் பாதுகாக்க படுவார்கள் என்பது உண்மை.

குழந்தை பிறக்க இருக்கும் கர்ப்பிணி பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவரது கணவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், 3 மாதம் முதல் குழந்தை எவ்வாறெல்லாம் தாயின் வயிற்றில் கேட்டு வளர்கிறது, படத்தின் ஆரம்பத்தில் எப்படி குழந்தை பெற்றோர் CNN தொலைக்காட்சி பார்த்து கொண்டே இருப்பதால் எவ்வளவு தவறான விசயங்கள் பிள்ளைகளுக்கு வயிற்றில் இருக்கும்போதே போய் சேர்கிறது, ஜாதகம் பார்த்து குழந்தையை மருத்துவர் உதவியுடன் அறுத்து எடுப்பது எவ்வளவு தவறான நடைமுறை சமுகத்தில் பரவி உள்ளது, பெரிய பதவியில் உள்ள ஒருவர் எவ்வாறு தன்னை அறியாமல் தனக்கு பிடித்தமான பொருளை திருடுகிறார் என்பது உட்படவும், வீட்டில் குழந்தைகள் பெற்றோர் பேசுவதை கேட்டு எப்படி எல்லாம் வார்த்தைகள் பேசுகிறார்கள், கணவர் போன் பேசிக்கொண்டே இருக்கும்போது குழந்தைகள் எவ்வாறு எல்லாம் பாதிக்க படுகிறார்கள், குழந்தைகளை பார்த்து கொள்வதில் தாய் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார் என்பதும், அவரது கணவற்கும் அதில் பொறுப்பு இருக்கிறது என்பதையும்,படத்தின் நிறைவாக எழுத்து ஓடும்போது யாரெல்லாம் கற்றலில் அதீத திறமை உடையவர்களாக இருந்து ஜெயித்து உள்ளனர் என்பது உட்பட அனைத்து விசயங்களும் சூப்பர்.

பெற்றோர் அவர்கள் என்னவாக நினைத்து இருந்தனரோ அதனை தங்கள் குழந்தைகளிடம் திணிப்பதை தவறு என்பதை அழகாக எடுத்து சொல்வதுடன், மதிப்பெண் மட்டுமே அவர்களது வாழ்க்கை இல்லை அவர்களது திறமை என்ன கண்டு அவர்கள் வாழ்க்கையில் ஜெய்க்க வைக்க வேண்டும் என்பதை நன்றாக எடுத்து கூறி உள்ளனர்.

படத்தின் ஆரம்பத்தில் முழு ஓட்டத்தையும் நிறைவு செய்யும் மாணவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதையும், அதன் அவர் வாழ்கையில் எவ்வாறு நல்ல சமூக அக்கறை உள்ளவராக மாறுகிறார் என்பதையும் மிக சிறப்பாக கூறி உள்ளனர்.

கற்றலில் அதீத திறமை உள்ள மாணவர்களை இந்த சமுதாயமும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் புரிந்து கொள்ள கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள சிறப்பான படம் இது. அனைவரும் காணவேண்டிய படம் இது என்று கூறியுள்ளார்.

கூவத்தாய் என்று ஜெயலலிதாவை அழைக்கலாமா? : விஜயகாந்த்

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூரில் இன்று ஜெயலலிதா படத்தை கிழிக்க கட்சியினருக்கு உத்தரவிட பதிலடியாக தேமுதிக பேனர்கள், கொடிகளை அதிமுகவினர் எரித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது மீத்தேன் திட்டத்துக்கு காரணமே கருணாநிதி அரசுதான் என்று வழக்கம்போல குற்றம் சாட்டினார் . மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கொண்டு வந்ததனால் ஜெயலலிதாவை காவிரித்தாய் என்று சொல்கிறார்கள். சென்னை வெள்ளத்திற்கு காரணமாக இருந்ததனால் அவரை ’கூவத்தாய்’ அல்லது ‘வெள்ளத்தாய்’ என்று அழைக்கலாமா?
 
நீங்கள் எனக்குகூட ஓட்டுப்போட வேண்டாம். உங்களுக்கு யார் நல்லவர்களாக தெரிகிறார்களோ அவர்களுக்கு நீங்கள் ஓட்டுப்போடுங்கள். ஜெயலலிதா உங்களுக்குத்தான் அம்மா. எனக்கு அவர் ஜெயலலிதாதான். மக்களுக்காக எந்த தமிழக அமைச்சரும் செயல்படவில்லை. ஊடக துறையினர் இது குறித்து பேச மாட்டார்கள். அவர்கள் அனைவரும் ஆளும் அமுதிக கட்சிக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர்கள்” என்று குற்றம் சாட்டினார் .
 

 

அழகிரியை புறக்கணித்த நாகை மாவட்ட தி.மு.க வினர்

 
 
நாகை மாவட்ட த்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க., பிரமுகர் ஷேக் தாவூத் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அழகிரியை, தி.மு.க.,வினர் புறக்கணித்னர் .
 
அந்த நிகழ்ச்சியில், தி.மு.க., பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
 
தி.மு.க., தலைகள் தென்படாததால் அப்செட்’ ஆன தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிமேடையில், 5 நிமிடம் மட்டுமே மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
 
அழகிரி பேசுகையில், நட்புக்கு இலக்கணமாக விளங்கக் கூடியவர்கள் ஒரு சிலர் தான். நான் பதவியில் இருந்தால் சிலர் வருவர். ஆட்சியில் இல்லாத போது போய் விடுவர். என் மீது அன்பு கொண்டவர்களிடம், நான் என்றும் மாறாத நட்பில் உறுதியாக இருப்பேன், என்றார்.
 
 
காரில் புறப்பட ஆயத்தமான அழகிரியிடம் பேட்டி காண சென்ற, செய்தியாளர்களிடம் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது; அப்போது பார்க்கலாம், நான் எதுவும் சொல்லா விட்டாலும், சொல்லியதாக நீங்கள் ஏதாவது எழுத தான் போகிறீர்கள். நீங்களே எழுதிக் கொள்ளுங்கள், என, விரக்தியுடன் கூறிச் சென்றார். அழகிரி புறப்பட்டுச் சென்ற தகவலை உறுதி செய்த பின்னர் தி.மு.க.,வினர், ஒவ்வொருவராக வந்து திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்திற்காக அரசியல் செய்யும் விஜயகாந்த் தேமுதிக கட்சியை பொது ஏலம் விடலாம் : நத்தம் விஸ்வநாதன்

 
 
பணத்திற்காக அரசியல் செய்து வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை ஏலம் விட்டு கூட்டணியை தேர்வு செய்யலாம் என்றும் தமிழக மின்துறை மற்றும் மது விலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சனம் செய்துள்ளார்.
 
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திஜி கலை அரங்கத்தில், அதிமுக அரசின் நான்கரை ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக மின்துறை மற்றும் மது விலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், விஜயகாந்த் திமுக, பா.ஜ.க, மக்கள் நல கூட்டணி போன்ற கட்சிகளுடன் பணம், தொகுதிகளுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
 
தேமுதிக கட்சியை பொது ஏலத்தில் விட்டு அதிக தொகை கேட்பவர்களுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்து கொள்ளலாம் என்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்ததார்.

விஜயகாந்த்தால் அதிமுகவினரிடம் தர்மஅடி வாங்கிய தேமுதிகவினர். !

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூரில் இன்று ஜெயலலிதா படத்தை கிழிக்க கட்சியினருக்கு உத்தரவிட பதிலடியாக தேமுதிக பேனர்கள், கொடிகளை அதிமுகவினர் எரித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது; மீத்தேன் திட்டத்துக்கு காரணமே கருணாநிதி அரசுதான் என்று வழக்கம்போல குற்றம் சாட்டினார் .
 
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற மரியாதைக்குரிய பொறுப்பு வகித்தாலும் அதற்கு மரியாதை அளிக்காமல் வாய்க்கு வந்தபடி பேசுவது, அடிப்பது, அநாகரிகமாக நடந்து கொள்வது என நிதானமற்ற நிலையில் உச்சத்தில் செயல்படுகிறார் விஜயகாந்த்.
 
இதனால்தான் விஜயகாந்த் சென்னையில் பத்திரிகையாளர்களை த்தூ…. என காறி துப்பினார்.
 
இதேபோல் இன்று தஞ்சாவூரில் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
கலந்து விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தார்.
 
அப்போது திடீரெனமன நிலைதடுமாறி, பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஜெயலலிதா படம் இருக்கிறது.. அதை கிழிங்கடா என தேமுதிகவினருக்கு உத்தரவிட்டார்.
 
தேமுதிக தொண்டர்கள் .உடனடியாக அந்த படத்தை கிழித்து எறிந்தனர். ஜெயலலிதா படத்தை கிழித்த செய்தியை கேள்விபட்ட அதிமுகவினர் அங்கு திரண்டு தேமுதிகவின் ஆர்ப்பாட்டத்துக்கான பேனர், கொடிகள் அனைத்தையும் தடுக்க வந்த காவல் துறையினரை விரட்டிவிட்டு ஒன்றுவிடாமல் தேமுதிக கொடிகளுக்கு கிழித்து தீ வைத்து எரித்தனர்.
 
இதனிடையே ஜெயலலிதா படம் கிழிக்கப்பட்ட செய்தி காட்டுத் தீயாக பரவ, கும்பகோணத்தில் தேமுதிகவினர் சென்ற வாகனத்தை அதிமுகவினர் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் 20க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் படுகாயமடைந்தனர்.
 
 
இதனால் தஞ்சாவூரில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூரில் விஜயகாந்த் இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
 
 

 

ஏர்வாடியில் கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வரின் பாரபட்ச செயல்பாட்டுக்கு இந்துமுன்னணி கண்டனம்

சென்னை:

தனிப்பட்ட விரோதத்தில் ஏர்வாடியில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கும் தமிழக முதல்வரின் பாரபட்சமான செயல்பாட்டை கண்டிப்பதாக இந்துமுன்னணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் பாரபட்ச செயல்பாட்டை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கை:

சமீபத்தில், ஏர்வாடியில் காஜாமைதீன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் அவர்கள் இறந்த காஜாமைதீன் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் அட்வகேட் ராஜகோபால் முதல் பாடி சுரேஷ் வரை நூற்றுக்கணக்கான இந்துக்கள் பயங்கராவதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு எந்தவிதமான ஆறுதலும் சொல்லவில்லை, குடும்பத்திற்கு நிதி உதவியும் செய்ய முன்வரவில்லை. பாடி சுரேஷ்க்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுடைய எதிர்காலம் கேள்விக் குறியாக இருந்தபோதும் அரசாங்கம் எந்தவிதமான உதவியும் செய்ய முன்வரவில்லை. பெங்களூரில் வெடிகுண்டில் பலியான சென்னை கஸ்தூரி என்ற பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறவதற்குக் கூட தமிழக அரசு பிரதிநிதிகள் வரவில்லை.
ஆனால், கர்நாடாகவில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் கொலையுண்ட தமிழ்ப் பெண்ணின் உடல் சென்னை வர நேரில் வந்து உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் பல்வேறேு காரணங்களாலும், முஸ்லீம் இயக்கத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையாலும் கொல்லப்பட்டவர்களுக்கும்கூட ஓடோடி சென்று தமிழக அரசு நிதி உதவி செய்கிறது. இராமநாதபுரம் காவல்நிலையத்தில் ஆய்வாளரைத் தாக்கியபோது தற்காப்புக்கு சுட்டதில் இறந்த செய்யது முகமது என்பவருக்கும், ஆம்பூரில் திருமணமான பெண்ணை கடத்திய வழக்கில் காவல்துறை விசாரணை செய்து அனுப்பி 20 நாட்கள் கழித்து இறந்த ஷமிலுக்கும் உதவி நிதி வழங்கினார் தமிழக முதல்வர் அவர்கள். ஆனால் இதுவரை காவல்துறை விசாரணையிலும், சிறையிலும் இறந்த இந்துக்களுக்கு எந்த நிதியும் தமிழக அரசு அளித்தது இல்லை.

இதுபோன்ற செயல் ஒருதலைபட்சமானதாகும். மதச்சார்பற்ற அரசாங்கம் முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த மட்டும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது. இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டபோது அவர்களது குடும்பத்திற்கு எந்தவித உதவியும் செய்ய தயாராக இல்லை.

முசாபூர் கலவரத்தின் போது உத்திரபிரேதேச அரசு, முஸ்லீம்களுக்கு மட்டும் நிவாரணத்தை ஒருதலைபட்சமாக அறிவித்ததை அந்த மாநில உயர்நீதிமன்றம் தடை செய்ததுடன், மாநில அரசு நடுநிலையோடு செயல்பட வலியுறுத்தியதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

ஒரு நல்ல அரசாங்கத்தின் செயல்பாடா இது? என்பதை நடுநிலையான பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 87% இந்துக்களின் வரிப்பணத்தை முஸ்லீம்களுக்கு மட்டும் கொடுப்பது எந்தவிதத்தில் நியாயம்? தமிழக ஜெயலலிதா அரசின் இந்த ஒருதலைப்பட்சமான, இந்து விரோதமான செயல்களை இந்துக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். முஸ்லீம் ஓட்டுக்காக பாரபட்சமாக செயல்படும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிற்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தங்களது ஓட்டு சக்தியை பயன்படுத்தி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

ஊரையெல்லாம் திருடன் என பேசும் விஜயகாந்திற்கு மனநிலை பாதிப்பா ? தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்

 
விஜயகாந்தின் செயல்பாடுகள் அவர் நல்ல மனநிலையில் தான் உள்ளாரா? அவருக்கு மனநிலை பாதிப்பா? என்பதை சந்தேகிக்க வைத்துள்ளது என தேமுதிக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை,மத்திய கைலாஷ் பகுதியில் நேற்று தேமுதிக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அதற்கு வந்த விஜயகாந்த் செய்தியாளர்கள் ஒருவர் கேட்ட கேள்வியால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், செய்தியாளர்களை நோக்கி காரித் துப்பி, தரக்குறைவாக பேசினார். விஜயகாந்தின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் எதிர்ப்பும், கண்டனமும் வலுத்து வருகின்றன.
 
இந்நிலையில், விஜயகாந்தின் இந்த நடவடிக்கை குறித்து தேமுதிக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,விஜயகாந்தின் செயல்பாடுகள், அவர் நல்ல மன நிலையில் தான் உள்ளாரா என, சந்தேகிக்க வைத்துள்ளது. எனவே, நல்ல மன நல நிபுணரை வைத்து, அவர் மன நிலையை சோதிக்க வேண்டு்ம்.
 
விஜயகாந்த், மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. காரணம், அவர் தன் வீட்டில் மிருகங்களை தான் வளர்க்கிறார். அதனால், அவருக்கு அந்த குணம் ஏற்பட்டு விட்டது என நினைக்கிறேன்.
 
ஊரையெல்லாம் திருடன் என பேசும் விஜயகாந்தின் ஒவ்வொரு நடத்தையும் எனக்குத் தெரியும். அவர் தொடர்ந்து இதே போல பேசிக் கொண்டிருந்தால், அவரின் கடந்த கால செயல்பாடுகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் விமர்சிக்க வேண்டியிருக்கும்.
 
இப்படிப்பட்ட மனிதரை, அரசியல் ரீதியில் வளர்த்து விட்ட பாவத்தை, எந்த காரியம் செய்து துடைப்பது என தேடிக் கொண்டிருக்கிறேன் என தேமுதிக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
 

 

அரசுப் பணிகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் : கருணாநிதி வலியுறுத்தல்

 
 
 
மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கு உரிய சதவீதப்படி நியமனங்கள் நடைபெறுவதை அமல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
 
இட ஒதுக்கீட்டு தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
 
 
மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கி 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்ற விவரப்படி, 12 சத விகிதத்திற்கும் குறைவான பிற்படுத்தப்பட்டோரே 1-1-2015 அன்றைய நிலையில் மத்திய அரசின் அமைச்சகங்களிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றுகிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது
 
மத்திய அரசின் துறைகளில் ஏ, பி, சி, மற்றும் டி ஆகிய பிரிவுகளிலான பதவிகளில் பணியாற்றும் மொத்தம் 79,483 பேரில், 9,040 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
 
யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9 சதவிகிதத்திற்கு குறைவாகவும், டி.ஓ.பி.டி. எனப்படும் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையில் 6.67 சதவிகிதத்திற்குக் குறைவாகவும் தான் பிற்படுத்தப்பட்டோர் அமர்த்தப்பட்டுப் பணியாற்றி வருகிறார்கள்.
 
பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையில் மொத்தம் 6,879 பேர் பணியாற்றுவதில், தாழ்த்தப்பட்டோர் 12.91 சதவிகிதத்தினரும், பழங்குடியினர் 4 சதவிகிதத்தினரும் பணியாற்றுகிறார்கள்.
 
இந்தியக் குடியரசுத் தலைவரின் செயலகத்தில் பணி புரியும் ஏ பிரிவு அலுவலர் களிடையே பிற்படுத்தப்பட்டோர் யாரும் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும்.
 
மத்திய அரசின் உயர்கல்வித் துறையில் “ஏ” பிரிவு அலுவலர்களில் 5 சதவிகிதத்தினர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் பணியாற்றுகிறார்கள். மற்ற பிரிவு ஊழியர்களில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் என ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விபரங்களிலிருந்து, மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகும் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கோ, தாழ்த்தப்பட்டோருக்கோ வரையறை செய்யப்பட்டுள்ள உரிய சதவிகிதப்படி பணிகள் வழங்கப்படவில்லை என்பதும், மிகக் குறைந்த சதவிகிதத்தினருக்கே பணிகள் வழங்கப்பட்டு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
 
திராவிட முன்னேற்றக் கழகம் தனது 2014-ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், “சமூக நீதி” என்ற தலைப்பில் குறிப்பிடும்போது, “மண்டல் குழு பரிந்துரை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், சமூக நீதிக் கொள்கை முழுமை அடைவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இடஒதுக்கீடு அதிகபட்சம் ஐம்பது சதவிகிதம் தான் இருக்க வேண்டும் என்பதும், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் என்று கருதப்படுவோர்க்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதும் சமூக நீதிக்குப் புறம்பானவை என்பதால் அதனை மாற்ற சட்டத்திருத்தம் கொண்டு வர தி.மு.க. வலியுறுத்தும்” என்றெல்லாம் சொல்லியிருந்தோம்.
 
ஆனால் நாமும், நம்மைப் போன்ற சமூக நீதி ஆர்வலர்களும் நீண்ட காலமாக படாத பாடுபட்டு கொண்டு வந்து நிறைவேற்றிய மண்டல் குழுவின் பரிந்துரைகளுக்கு மாறாக நிலைமை தற்போது வளர்ந்து வருகிறது என்பதைப் பார்க்கும்போது பெரும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.
 
இந்த வேதனைகள் நீங்கவும், மண்டல் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் முழு அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படவும் “கிரீமி லேயர்” என்ற பாகுபாட்டுப் பிரிவினை நீக்கிடத் தேவையான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.
 
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர்க்கு இதுவரை துறைவாரியாக வழங்கப்பட்டுள்ள பணியிடங்களைப் பற்றிய விபரங்களைத் தொகுத்து வெள்ளை அறிக்கை ஒன்றினை வெளியிடவேண்டும்.
 
நிரப்பப்படாமல் விடுபட்டுப் போன பின்னடைவுப் பணியிடங்களை கணக்கிட்டு, சிறப்புத் தேர்வுகளுக்கும் நியமனங்களுக்கும் திட்டமிட்டு நிறைவேற்றிடவும்; இனி வருங்காலத்தில் மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கு உரிய சதவீதப்படி நியமனங்கள் நடைபெறுவதை உறுதி செய்திடக் கண்காணிப்பு அமைப்பு ஒன்றினை உருவாக்கிடவும்; மத்திய அரசு உடனடியாக ஆவண செய்திட வேண்டுமென்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சார்பாகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருகின்ற சமூக நீதி இயக்கங்களின் சார்பாகவும் மத்திய அரசை, குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஊழல் விசாரணை அறிக்கையில் ஜெட்லி பெயரில்லை?

 
 
 
டில்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த கெஜ்ரிவால் அரசு அமைத்த குழு, தனது விசாரணை அறிக்கையில் ஜெட்லி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என கூறப்படுகின்றது.
 
ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதில் கூறப்படுவதாவது :-
 
டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக ஜெட்லி 13 வருடம் இருந்த போது, தவறு எதுவும் செய்ததாக எதுவும் குறிப்பிடப் படவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஜெட்லி தலைவராக இருந்த போது நிதி முறைகேடு நடந்தது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என கூறப்படுகிறது.
 
ஆனால் கிரிக்கெட் சங்க ஊழல் சர்ச்சையை கிளப்பிய ஆம் ஆத்மியினர் இதை மறுக்கின்றனர். அதிகாரப்பூர்வமற்ற முறையில் அக்கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், ஜெட்லியை குறிப்பிட்டு பல ஆவணங்கள் உள்ளன. தற்போது ஒரு அறிக்கை தான் வெளியாகியுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் பல முறைகேடுகள் நடந்துள்ளது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நிச்சயம் ஜெட்லி தப்பிக்க முடியாது என்றார்.
 
இதனையடுத்து பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கிரிக்கெட் சங்க முறைகேடு குறித்து ஜெட்லி மீது குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், பொது மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தற்போது உண்மை வெளிவந்துள்ளது. அறிக்கையில் ஜெட்லி பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே கெஜ்ரிவால் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்பதுடன், கோர்ட்டில் தனது தவறை ஒத்துக்கொள்ள வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.