அம்பாசமுத்திரத்தை அடுத்த சேரன்மாதேவியில் விவசாய கூட்டமைப்பினருடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய விவசாய பிரதிநிதிகள், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய நதிகளிலிருந்து உரிய நேரத்தில் கடந்த 4 வருடங்களாக தண்ணீர் திறந்துவிடவில்லை, அதனால் விவசாயம் செய்ய முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக தெரிவித்தனர். அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் உள்ள குளங்கள, ஏரிகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்படாமல் உள்ளதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பெற முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், உங்கள் தேவைகளை நிறைவேற்றும் இந்த மாற்றத்தை திமுகவால் தான் கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்துருக்கீறீர்கள். அதே நம்பிக்கையோடு அனைவரிடத்திலும் எடுத்துக்கூறுங்கள் நிச்சயமாக அனைத்து நலத்திட்டங்களையும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
விஷச் செடி
“விஷச்செடி”
(மீ.விசுவநாதன்)
இப்போதெல்லாம்
நம்
நாட்டில் அதிகமாக,
மிக வேகமாக வளர்வது
இரண்டே இரண்டுதான்
ஒன்று
கருவேல மரம்
மற்றது
ஊழல் பேர்வழிகள் !
கருவேலமரம்
பூமியின் நீராதாரத்தை
உறிஞ்சித் தானும்,
தன் குடும்பமுமாகப்
புறம்போக் கெங்கும் வளரும் !
அது விஷச் செடி
அதை அழிக்கவேண்டுமாம் !
ஊழல் பேர்வழிகள்
நாட்டின் பொருளாதாரத்தையே
உறிஞ்சித் தானும்,
தன் குடும்பமுமாக
மட்டுமே வளரும் புறம்போக்குகள் !
தேசத்தின் தீய சக்திகள்
வெளியே தெரியாத விஷச் செடிகள் !
அட..கருவேல மரமாவது
ஏழைக்கு
அடுப்பெரிக்க உதவும்..
இப்பச் சொல்லுங்க
எரிக்க வேண்டிய
“விஷச்செடி”
கருவேல மரங்களா?
இல்லை
தீய சக்திகளா?
ம.தி.மு.க விழித்துக் கொண்டது; தி.மு.க வை பின்னுக்கு தள்ளியது: வை.கோ
முதல் பால் சிக்ஸர் அடித்தார் – மாவட்ட செயலாளர் தி.மு.க விற்கு செல்வதை அறிந்த வை.கோ – அவர் என்ன தி.மு.க விற்கு செல்வதை கட்சியை விட்டு நான் விலக்குகிறேன் – வை.கோ – அதிரடி
வரும் சட்டமன்ற தேர்தலையடுத்து தி.மு.க வினர் தற்போது ம.தி.மு.க வினரை குறி வைத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தங்களது கட்சிகளுக்கு இழுக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தல் செலவு தி.மு.க தரப்பில் இருந்து ரூ 50 ஆயிரம் கோடி என கணக்கிடப் பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எல்லாம் 2 ஜி மற்றும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் தான் என்கின்றனர். மற்ற கட்சியினர்.
இப்படி இருக்க ஒவ்வொரு மாவட்ட செயலாளரையும் தங்கள் கட்சிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தி.மு.க வினர் மத்தியில் கரூர் மட்டும் விதிவிலக்கல்ல, கரூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் பரணி தி.மு.க விற்கு தாவலா ? என கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் பரவலாக வலம் வந்த நிலையில் தற்போது ம.தி.மு.க பொதுச்செயலாளர் விழித்துக்கொண்டுள்ளார். உடனடியாக அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அவரே தூக்கியுள்ளார். கட்சி விட்டு கட்சி மாறும் படலம் நிகழ்ச்சியில் கட்சியை விட்டு தூக்கிய முதல் நிகழ்ச்சி இது.
இந்நிலையில் தூங்கிக்கொண்டிருந்த வை.கோ வை முழித்துக்கொள்ள வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளதாக மற்ற கட்சியினர் பேசி வரும் நிலையில், தற்போது பொதுச் செயலாளர் பம்பரம் போல் செயல்பட்டு வருகிறார் என ம.தி.மு.க வினரே புகழாரம் சூட்டி வருகின்றனர். எது எப்படியோ தி.மு.க சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தாரம் ஆண்டி என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தி.மு.க, ம.தி.மு.க வை பம்பரம் போல் சுழல வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடந்த சில மாதங்களாக கட்சி பணியில் தொய்வு ஏற்படும் வகையில் செயல்பட்டதாகவும், தி.மு.க விற்கு சப்போட்டாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சி.ஆனந்தகுமார் கரூர்
A self-aware, organised and active society is the remedy for all the misconceptions in the society: Sri Bhayyaji Joshi
A two day seminar was held on secularism for columnists in Chennai, Tamil Nadu on September 19th and 20th. The event, organised by Prachar Vibagh of RSS was inaugurated by Sri Suresh ‘Bhaiyyaji’ Joshi (Sarkaryavah, All India General Secretary of RSS) on 19th September and attended by more than 80 columnists from Southern states of India.
Eminent personalities such as Sri Balbir Punj (Vice President of BJP), Sri Prafulla Ketkar (Editor of Organiser), Sri N K Singh (Senior Journalist), Smt. Madhavi Diwan (Senior Advocate, Supreme Court), Sri K G Suresh (Editorial Advisor, Doordarshan), Dr. Makkhan Lal (Founder Director, Delhi Institute of Heritage Research and Management) and Sri S Gurumurthy (Auditor and Columnist) presented their views on various aspects of Secularism within their respective domains such as politics, media, constitutional law and education.
Dr. Manmohan Vaidya, while summarising the deliberations wondered, why the word ‘Secularism’ was included in the Preamble of our Constitution during the dark period of emergency. The constitution makers discussed and deliberated on this point in detail and decided that it was not necessary to include the same. He requested the legal luminaries and political experts to ponder over this issue and to see whether the intention was to initiate divisive communal politics in our country.
Sri Bhiyyaji Joshi delivered the valedictory address today. He spoke about the confusions that prevail in the society such as the name of the nation (India Vs Bharat), Country Vs State Vs Nation, Citizen Vs National, Patriot Vs Friend of nation, Anti-national Vs Enemy of the nation, Invader Vs Native Ruler etc. Many of these confusions were infused by people with divisive interests including British and shallow political discourse. Current day democratic set up assumes to have absolute right over the public discourse which was not the case in pre-independent Indian society. There was a clear distinction between the rights and responsibilities of both the ruler and society. The same is needed now, for example government can impart education while the character building has to be done by the society.
He also said that a secular state should not allow any sects or community to infringe upon the rights of other sects or communities. However, in Bharat today, the religious minorities are given preferential treatment. For example in Nagaland, Mizoram and Kashmir though the minority community is in majority, they enjoy all the privileges available to minorities. He concluded saying that a democracy is only successful if the people are self-aware, organised and active.
இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வதா? ஆர்.எஸ்.எஸ் கருத்து மிகவும் ஆபத்தானது: ராமதாஸ்
சென்னை:
இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வது குறித்த ஆர்.எஸ்.எஸ் கருத்து மிக ஆபத்தானது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அந்த இயக்கத்தின் ‘ஆர்கனைசர்’ இதழுக்கு அளித்த நேர்காணலில் இந்தியாவில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யும்படி வலியுறுத்தியுள்ளார். இது மிகவும் ஆபத்தானது; முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது ஆகும்.
அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வேண்டும், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெளிப்படையான திட்டங்கள் என்றால், இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது மறைமுகமான திட்டம் ஆகும். இதை கடந்த காலங்களில் மற்றவர்களின் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தி வந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இப்போது நேரடியாகவே இக்கருத்தை முன்வைத்திருக்கிறது. ‘‘ இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வதற்காக ஒட்டு மொத்த நாட்டு நலனில் அக்கறை கொண்ட, சமூக, சமத்துவத்தில் உறுதிப்பாடு கொண்ட சிலரை உள்ளடக்கிய குழு அமைக்க வேண்டும். எந்தெந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தேவை, எவ்வளவு காலம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை அக்குழு தீர்மானிக்க வேண்டும். இதை செயல்படுத்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட, அரசியல் கலப்பில்லாத ஆணையம் அமைக்கப்பட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவில் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆயத்தமாகி விட்டது என்பதையே மோகன் பாகவத்தின் இந்த நேர்காணல் உணர்த்துகிறது. இந்தியாவில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படாது என்று மத்திய அமைச்சர்களும், பாரதிய ஜனதா தலைவர்களும் கூறியிருக்கும் போதிலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலிமை என்ன? பாரதிய ஜனதாக் கட்சியின் வலிமை என்ன? யார் சொல்வதை யார் கேட்பார்கள்? என்ற வினாக்களுக்கு விடை அறிந்தவர்களால் நடக்கபோவது என்ன? என்பதை தெரிந்து கொள்ள முடியும். இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, முதலில் குஜராத் மாநிலத்தில் படேல் சமுதாயத்தினர் மூலமாக, ‘‘கொடுத்தால் அனைவருக்கும் இட ஒதுக்கீடு தரவேண்டும்; இல்லாவிட்டால் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்த வைத்தது. அடுத்து ஆர்.எஸ்.எஸ். தலைவரே களமிறங்கியுள்ளார். இவை அனைத்துமே ஆழம் பார்க்கும் செயல்கள். முதலில் இத்தகைய கருத்துக்களைப் பரப்பி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்பது, பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாவிட்டால் திட்டத்தை அப்படியே செயல்படுத்துவது தான் ஆர்.எஸ்.எஸ்.சின் உத்தியாகும்.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய துணையாக இருப்பது இட ஒதுக்கீடு தான். இது எந்தெந்த பிரிவினருக்கு தேவை என்பது அவர்களின் சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. அதை எந்த வகையிலும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் எழவில்லை. அதேபோல், ஒரு சமுதாயத்திற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு தொடர வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு காலம் காலமாக இழைக்கப்பட்ட துரோகங்கள், அநீதிகள் ஆகியவற்றின் காரணமாகத் தான் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த அநீதியை ஒரு சில பத்தாண்டுகள் மட்டும் இட ஒதுக்கீடு அளிப்பதன் மூலம் சரி செய்து விடலாம் என்று நினைப்பது அறியாமையாகவே இருக்கும். இட ஒதுக்கீடு பெறும் சமுதாயத்தில் உள்ள கடைசி குடிமகன் அதிகாரம் பெறும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இந்த உண்மைகள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறியாதது அல்ல. ஆனால், பாகவத்தின் நோக்கம் வேறு என்பதால் தான் இப்படியெல்லாம் அவர் பேசி வருகிறார்.
இன்றைய நிலையில் சமூகத்தின் தேவை முழுமையான சமூக நீதி தான். இதற்காக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் வாழும் பல்வேறு சமுதாய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆகும். ஆர்.எஸ்.எஸ். தலைவர் முன்வைக்கும் திட்டத்தை கைவிட்டு, வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். அதற்காக நாடு முழுவதும் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணிகளை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
பொட்டு சுரேஷ் கொலைக்கும் என் கணவருக்கும் தொடர்பில்லை: தயாளு
பொட்டு சுரேஷ் கொலை வழக்கிற்கும் எனது கணவருக்கும் தொடர்பில்லை – அட்டாக் பாண்டி மனைவி தயாளு அம்மாள் பேட்டி – 2013 ஆம் ஆண்டு பொட்டு சுரேஷ் கொல்லப்பட்ட நிலையில் எனது கணவன், 2011 ஆம் ஆண்டே மும்பைக்கு சென்றுவிட்டார் : தயாளு
அவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றம்
தமிழக சட்டசபையில், அவைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை, சபாநாயகர் தனபால், சபையிலிருந்து வெளியேற்ற சபைக்காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடும் எதிர்ப்பு: வாட்ஸ்அப் மீதான கண்காணிப்பு திட்டத்தை அரசு கைவிட்டது
======================= நவீனகால தந்தி சேவையாக மாறிப்போன வாட்ஸ்அப் தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரைவு திட்டம் பயன்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பையடுத்து உடனடியாக கைவிடப்பட்டது. வாட்ஸ்ஆப் மூலம் மொபைல் வழியாக தகவல்கள், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கும் வசதி உள்ளதால், நல்லதோ, கெட்டதோ.., அவை நொடிப் பொழுதில் பலருக்கும் பரவி விடுகிறது. இவை குற்றச் செயல்களை கண்டுபிடிப்பதற்கு முக்கிய ஆதாரமாகவும், சில குற்றச் செயல்களுக்கு தூண்டுகோலாகவும் இது விளங்குகிறது வாட்ஸ்அப் மூலம் பரிமாறப்படும் அனைத்து விஷயங்களையும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் ஒழுங்குப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கென புதிய வரைவு கொள்கையும் உருவாக்கியது. இதுதொடர்பாக, மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையதளத்தில் ஒரு புதிய திட்டவரைவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த திட்டவரைவின்படி வாட்ஸ் அப், ஆப்பிளின் ஐ-மெசேஜ் போன்ற சேவைகளை பயன்படுத்துபவர்கள் தாங்கள் அனுப்பும் அனைத்து செய்திகளையும், புகைப்படங்கள், வீடியோக்களை (தனிப்பட்ட உரையாடல்கள் உட்பட) கண்டிப்பாக 90 நாட்களுக்கு சேமித்து வைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விசாரணைக்காக அரசு கேட்கும்பட்சத்தில் அவற்றை வழங்க வேண்டியதும் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களும் பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் வசதிகளை ஏற்படுத்துவதும் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. வரைவுநிலையில் மட்டுமே இருந்த இத்திட்டம் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த கண்காணிப்பு திட்டத்துக்கு இணையதள பயனாளர்கள் மற்றும் மொபைல்களில் வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், வாட்ஸ்அப் வாயிலாகவும் இந்த முடிவை கண்டித்து கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டிருந்தனர். இதனையடுத்து, தனது நிலைப்பாட்டில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. வாட்ஸ்அப்க்கு விதிக்க இருந்த கட்டுப்பாட்டை உடனடியாக தளர்த்தியுள்ளது.
பூஜை அறையில் பின்பற்ற வேண்டிய குறிப்புகள்
சிவமயம் சிவாயநம நமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டிய குறிப்புகள் பற்றிப் பார்ப்போம் நாம் நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் செய்ய வேண்டியனவும் , செய்ய கூடாதனவும் யாவை என்று பார்ப்போம் 1. தினசரி காலையும், மாலையும் தூய ( நல்ல சிந்தனையுடன்) மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் ( பரம்பொருள் – சிவபெருமான்) பெயரை உச்சரித்தல் வேண்டும். 2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள். 3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும். 4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். 5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும். 6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும். 7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது தான் துவாதசன தரிசனம் எனப்படும். 8. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது. 9. அமாவாசை, பௌவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது. 10. பொதுவாக பெண்கள் நெற்றிக்கு திலகமிடாமல் ( குங்குமம்) பூஜை செய்யக்கூடாது. 11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது. 12. கர்ப்பிணி ( பிரசவ காலங்களில்) பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம். 13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் ( மலர்களை) சூடக்கூடாது. 14. வீட்டின் நிலைகளில் ( வாசற்காள்கள்) குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது. 15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது. 16. அதிகாலை ( 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் இது பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்) நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது. 17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும். 18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது. 19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும். 20. ஓம் ( பிரணவம்) என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது. 21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும். 22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது. 23. ருத்ரம், சமகம் கந்த சஷ்டி கவசம், சிவபுராணம், கோளாறு பதிகம், திருநீற்றுப் பதிகம், போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது. 24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும். 25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது. 26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம். 27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும். 28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும். கிழக்குப் பார்த்து வைக்க வேண்டும் 29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது. 30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது. 31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உடுத்தலாம். 32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேலையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது. 33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடனும் இரவு தூங்குவதற்கு முன்ன்னும் சிவபெருமானையும் அவரின் திருநாமத்தையும் ( நமசிவாய, சிவாயநம, சிவயசிவ, சிவசிவ, சி, ) நினைக்க வேண்டும். 34. கஷ்டங்கள் ( துன்பங்கள்) நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம். 35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும். 37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது. 38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது. 39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது. 40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது. 41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது. 42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது. 43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது. 44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. 45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது. 46. தெய்வப் படம், குத்து விளக்குகளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது. 47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார். 48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் திருநீறு கையில் வைத்துக் கொண்டு என் அடியார்கள் எங்கு சென்றாலும் நான் அவனைப் பின் தொடர்ந்து செல்வேன் என்று பரம்பொருள் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் திருநீறு இருக்கும் வரை சிவபெருமானின் துணை அவருக்கு தோன்றாய் துணையாய் உண்டு. 49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும். 50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும். 51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு. 52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும். 53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள். 54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது. 55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது. 56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். 57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள். 58. வெள்ளிக் கிழமையன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது. 59. வீட்டில் அரளி பூச்செடி வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் அரளி பூச்செடியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது அரளி தானம் கொடுக்க வேண்டும். அரளியோடு தரப்படாத தானம் வீண். 60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும். 61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும். 62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும். 63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும். 64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள். 65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும். 66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள். 67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும். 68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்களுக்கு செல்வத்தை வாரி கொடுப்பவரே பரம்பொருள் ( சிவபெருமான்) ஒருவரே ஆவார் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது. 69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும். 70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது. 71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும். 72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது. 73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம். 74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது. 75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது. 76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது. 77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது. 78. சிவாலயங்களை வணங்கி வீடு திரும்பும்போது பார்வதி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே சிவன் கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது. 79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம். 80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் கண் திருஷ்டி விநாயகரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது திருச்சிற்றம்பலம் இப்படிக்கு சிவனடிசீரே பரவுவார் சிவ சுப்பிரமணி சைவ சித்தாந்த சபை ஒசூர்
அகில பாரத பிராமணர் சங்க கூட்டம்
20.09.2015. அன்று அகில பாரத பிராமணர் சங்கம் வீர வாஞ்சிநாதன் பூமி செங்கோட்டையில் அற வாழி அந்தணர்களின் உண்ணாவிரத போராட்டம் வரலாறு காணாத வெற்றியுடன் நிகழ்ந்தது . தேசியத் தலைவர் குமரி எஸ் . சங்கரநாராயணன் தலைமையில், மூத்த துணைத் தலைவர் நடராஜய்யர், திருநெல்வேலி மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், குமரி மாவட்ட தலைவர் கணேஷ், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், மதுரை வேத பாடசாலை மாணவர்களும், வேதப் பண்டிதர்கள் வன்னிநாத சர்மா, மணிகண்ட வாத்தியார் தென்காசி சுந்தரராஜன் , பாஸ்கர வாததியார் வேத கோஷம் முழங்க , தேசிய மகளிர் அணி செயலர்கள் சாந்தி சந்திரசேகர் நாராயணீ பத்மஜா அனந்தராமன் நடிகை பத்மினி குத்துவிளக்கு ஏற்ற , மதுரை மூத்த வக்கீல் ரமேஷ் அவர்கள் துவக்கி வைக்க தமிழ் மாநில கட்சி தலைவரும் தமிழ்நாடு புதுவை வழக்கறிஞர் சங்கத் தலைவருமான உயர்திரு பால் கனகராஜ் , அகில இந்திய தலித் சம்மேளன கட்சி தலைவர் சௌரிராஜன் , தியாகிகள் குடும்ப நல அமைப்பு சங்கத் தலைவர் தக்கலை சந்திரன் , க்ஷத்ரிய நாடார் சங்கத் தலைவர் சந்திரன் ஜெயபால் , தேசிய பொது செயலாளர் பாலாஜி சாஸ்த்ரிகள் , தேசிய இளைஞர் அணி செயலாளர் கண்ணன் இராமலிங்கம், துணைப் பொது செயலாளர் சதீஷ்குமார் , வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பர்வதராஜன் , தேசிய கொள்கை பரப்பு செயலாளர் SRS , தேசிய அமைப்பு செயலர்கள் க.இரவி, கவிஞர் முத்துராமன், N .வெங்கட்ராமன் , தேசிய செயலர்கள் ASR பாலாஜி, ஆனந்த், iyswarya கணேஷ் , கல்லிடைக்குறிச்சி விசுவநாதன் , தேசிய ஆலோசகர் கிருஷ்ணசாமி , சென்னை மாவட்ட தலைவர் ரவிசங்கர், காஞ்சி மாவட்ட தலைவர் சுந்தரம் , திருச்சி மாவட்டத் தலைவர் சௌந்தரராஜன் , சேலம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அனந்தபத்மநாபன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் சந்திரமௌலி, கோவை மாவட்ட செயலாளர் வெங்கடரமணி, கு 20.09.2015. அன்று அகில பாரத பிராமணர் சங்கம் வீர வாஞ்சிநாதன் பூமி செங்கோட்டையில் அற வாழி அந்தணர்களின் உண்ணாவிரத போராட்டம் வரலாறு காணாத வெற்றியுடன் நிகழ்ந்தது . குமரி மாவட்ட செயலாளர் விவேகாநந்தன் , தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஐய்யப்பன், சேலம் மாவட்டப் பொருளாளர் ஆனந்த தீர்த்தன், செங்கோட்டை ஸ்ரீராம் சிறப்புரை ஆற்ற , கடயநல்லூர் ராஜகோபால் பஜனை மண்டலியின் நாம சங்கீர்த்தனம் நிகழ, தேசியப் பொருளாளர் TP குளத்துமணி iyer அவர்களின் நன்றியுரையுடன் பழரசம் அருந்தி நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது . நமது நீண்ட நாள் கோரிக்கையான வீரவாஞ்சிநாதன் நினைவு நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்வர் அம்மா அறிவித்தது நமக்குக் கிடைத்த வெற்றி ஆகும் ..

