December 5, 2025, 4:36 AM
24.5 C
Chennai

நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு..! போட்டியில் முந்தும்… தமிழக பாஜக., தலைவர் யார்?

bjp leaders - 2025

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் முதலிடத்தில் உள்ளனர். நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பெயர் நாளை அறிவிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.

தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவரின் உத்தரவு இன்று வெளியானது முதல், தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் அடுத்த பாஜக., மாநிலத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ண, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் என பலர் இருந்தாலும், முதலிடத்தில் இருப்பவர் ஹெச்.ராஜா என்று தெரிகிறது.

தமிழக பாஜக., தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் 2 முறை பதவி வகித்து விட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிகிறது.

இந்நிலையில், தமிழக பாஜக., தலைவராக யார் நியமிக்கப்படுவார் என கட்சியில் தொண்டர்களிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் எதிர்பார்ப்பும் விவாதங்களும் எழுந்துள்ளது.

அடுத்த மாநிலத் தலைவர் ஆக வருவதற்கு தேசியச் செயலராக இருக்கும் ஹெச்.ராஜாவுக்கு பெரும் வரவேற்பு காணப் படுகிறது. தமிழகத்தில் திமுக., அதிமுக., என திராவிடக் கட்சிகளுக்கு ஏற்ற சரியான அணுகுமுறையை ஹெச்.ராஜா பாரம்பரிய மிக்க பாஜக.,வின் தரப்பில் இருந்து வெளிப்படுத்த முடியும் என்று நம்புகின்றனர். ஹிந்து தர்ம போராளி என்று பேர் எடுத்தவர். பாஜக., அல்லாத திராவிட இயக்கத்தவர்களால் அதிகம் விமர்சிக்கப் படுபவர். சமூக வலைத்தளங்களில் அதிகம் இவர்களால் வறுபடுபவர். தமிழக அரசியலில் ஓய்வறியாமல் பல்வேறு கூட்டங்களுக்குச் சென்று பேசி, பாஜக.,வினர் உற்சாகம் குறையாமல் தக்க வைத்திருப்பவர் என இவருக்கு இருக்கும் பெயர், தலைமைப் பொறுப்புக்கு பரிசீலிக்கப் பட வாய்ப்பு ஏற்படுத்தக் கூடும்.

bjpcard - 2025

அதே நேரம் அதிமுக.,வில் இருந்து பாஜக.,வுக்கு வந்த நெல்லை மண்ணின் மைந்தர், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கும் ஆதரவு அதிகம் உள்ளது. தென் தமிழகத்தில் தேவர் சமுதாய மக்களின் ஆதரவைத் தேட இவரது வரவு சரியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

இந்தப் போட்டியில், ஏற்கெனவே தலைவர்களாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் என சில பழைய முகங்கள் இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்பு குறைவுதான். மேலும், பாஜக.,வின் பழகிய முகங்களான வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், முருகானந்தம் என சில பெயர்களும் கூறப்பட்டு வருகிறது.

அதே நேரம், மத்திய அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டு, தமிழக அரசியலுக்கு அனுப்பப் படுவார் என்று கூறப் படுகிறது. வரும் 2021 தேர்தலை எதிர்கொள்ள முதல்வர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப் படக் கூடும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories