ஆச்சி மிளகாய்த் தூள் – பூச்சி கொல்லி பொடி ஆனதால்… கேரளத்தில் தடை! தமிழகத்தில் தாராளம்!

aachi chilli powder - 2026

பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடிக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது!

தமிழகத்தைச் சேர்ந்த ஆச்சி மசாலா தூள் தயாரிப்பு நிறுவனம் கேரளாவிலும் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. திருச்சூரில் இந்த நிறுவனத்தின் மசாலாப் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றி கொச்சியில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்!

அங்கே நடத்திய ஆய்வில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடியில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆச்சி மசாலா மிளகாய்ப் பொடிக்கு தடைவிதித்து கேரள உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளத்தின் உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய சட்டம் 2006ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆச்சி மசாலா மிளகாய்த் தூள், கட்ட மிளகாப் பொடி என்று தமிழகத்தில் அதிகம் பேரால் வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது! இது கேரளத்தில் பூச்சிகொல்லி மருந்தின் அளவு அதிகமிருப்பதாகத் தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் பலரும் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

source: https://www.mangalam.com (കീടനാശിനികളുടെ സാന്നിധ്യം: ആച്ചി മുളകുപൊടി നിരോധിച്ചു)

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories