December 6, 2025, 4:00 AM
24.9 C
Chennai

இரவு நேரம்.. நடுச்சாலை.. தாய் மடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை! அதிர்ச்சி வீடியோ!

baby - 2025

நள்ளிரவில் காரில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று சாலையில் தவழ்ந்து திரியும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரளாவின் இடுக்கி பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பழனி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்துவிட்டு காரில் சொந்த ஊர் சென்று கொண்டிருந்தது.

ஜீப்பில் அனைவரும் தூங்கிய நிலையில், திறந்திருந்த ஜன்னல் வழியாக குழந்தை வெளியே விழுந்துவிட்டது. என்ன செய்வதென அறியாத அந்த பச்சிளங் குழந்தை சாலையில் அங்குமிங்கும் தவழ்ந்து சென்றது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அனைத்தும் அங்கியிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில் அவரது தந்தை சதீஷ் மற்றும் குடும்பத்தினர் காம்பிலிகண்டத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து குழந்தையை காணவில்லை என்பதை உணர்ந்தனர்.

45 கிலோமீட்டர் தூரம் செல்லும் வரை பெற்றோர் இந்த விபத்தை உணரவில்லை. பின்னர் குழந்தை இல்லை என்பதை அறிந்த பெற்றோர் பதறி தேடத் தொடங்கியுள்ளனர். வனத்துறை எச்சரிக்கையாக இருந்து அதிர்ஷ்டவசமாக குழந்தையை காப்பாற்றியது. முதலுதவிக்காக ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

அதற்குள் ராஜ்மாலா சுங்கச்சாவடி அருகே குழந்தையை போலீசார் மீட்டனர். சிறு காயங்களுடன் இருந்த குழந்தை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சோதனைச் சாவடியில் பணிபுரியும் ஊழியர் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு அதனை பார்க்க அருகில் சென்று உள்ளார். அது ஒரு குழந்தை என்பதை உணர்ந்த ஊழியர், வனவிலங்குகளின் வார்டன் உள்ளிட்ட வனத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

மூணாறில் உள்ள ராஜமலா சோதனைச் சாவடியில் டிக்கெட் கவுண்டருக்கு குழந்தை ஊர்ந்து சென்றபோது இரவு 10 மணியளவில் இருக்கும். நான் சென்றபோது, குழந்தையின் தலை மற்றும் நெற்றியில் சிறு காயங்களும், மூக்கில் இரத்தமும் இருந்தன. நாங்கள் போலீசை அழைத்தோம், குழந்தையை முதலுதவிக்காக பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். குழந்தை ஒரு சங்கிலி மற்றும் வளையல்களும் அணிந்து இருந்தது. வெளிச்சத்தைப் பார்த்து குழந்தை டிக்கெட் கவுண்டரை நோக்கி வந்திருக்க வேண்டும் என கூறினார்.

அதிகாரிகள் முதலில் குழந்தையை தவறி விட்டதாக நினைத்தார்கள், ஆனால் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, குழந்தை ஜீப்பில் இருந்து விழுந்ததைக் கண்டனர். இரவு 9.42 மணியளவில், ஜீப் ஒரு திருப்பத்தில் திரும்பும் போது குழந்தை தூங்கிய தாயின் மடியில் இருந்து விழுந்து உள்ளது.

சிறு காயங்களுடன் இருந்த குழந்தை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories