குழந்தைகளுக்கு ‘தமிழ்’ப் பெயர் சூட்டுங்க… ‘கருணாநிதி’யின் மகன் ‘ஸ்டாலின்’ அறிவுரை!

Published:

stalin karunanidhi - 2026

திமுக., பொருளாளர் துரை முருகன் பொருள் பொதிந்த வகையில் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள் என்று சொல்லி, ஆரவாரம் ஓய்ந்துவிடாத நிலையில், இப்போது ஆரவாரத்தைக் கூட்டியிருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்!

தாம் ரஷ்யா சென்ற போது, ஸ்டாலின் என்ற தனது பெயரால் சில சங்கடங்கள் ஏற்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசியபோது, திமுக ஆட்சியில் முதலீட்டாளர்களை ஈர்க்க வெளிநாடு செல்லவில்லை. மெட்ரோ திட்டம், ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றிற்கு நிதி திரட்டத் தான் சென்றோம். 2 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது..?

tamilnames - 2026

ஸ்டாலின் என்ற பெயர் தமிழ்ப் பெயராக இல்லாததால் பல சங்கடங்களை உணர்ந்தேன். நான் ரஷ்யா சென்ற போது எனது பெயரால் சில சங்கடங்கள் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள் என்று ஸ்டாலின் அறிவுரை கூறினார்.

மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சு இப்போது சமூகத் தளங்களில் பெரும் விமர்சனங்களை அள்ளிக் குவித்து வருகிறது. டிவிட்டர் பதிவுகளில் அதிகம் பேர் இதனை டிவிட் செய்து வருகின்றனர்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

தமிழ் பெயரை வெச்ச உடனேயே காப்பாத்திடலாம். இதெல்லாம் மொழியை வைத்து மறைமுகமாக அரசியல் செய்வது. இதை இசுலாமியா, கிறித்தவர்களிடம் சொல்லமாட்டான் இந்த சில்லறை @mkstalinQuote Tweet

https://twitter.com/prasathzlatan/status/1172030249514754049

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img