சாலைப் பள்ளத்தில் ஸ்கூட்டியில் சென்று தடுமாறி விழுந்த தாயும் மகனும்! பிறகு என்ன செய்தாங்க தெரியுமா…?!

road filled gujarat boy mother - 2026

சாலைகளில் பள்ளங்கள் இருப்பது சாதாரணமானது என்ற நிலை நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளது. அவற்றை எவரும் பெரிதாக கண்டு கொள்வதும் இல்லை.

நாம் பல நேரங்களில் சாலைகளில் பயணித்து இருக்கிறோம். நாம் செல்லும் சாலையில் தடுப்போ, குழி அல்லது தடையோ இருந்தால் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல், அந்த நேரத்தில் கடந்து சென்றுவிடுவோம்! அது குறித்து நாம் கவலைப் படுவதில்லை.

காரணம் சாலையில் பள்ளம் ஏற்பட்டால் அதை சரி செய்வது நெடுஞ்சாலை துறை அல்லது சாலை நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் என்று அவர்கள் மீது சுமையை போட்டுவிட்டு நாம் கடந்து சென்றுவிடுவோம்!

ஆனால்… தேசப்பற்று அல்லது தேசபக்தி என்றால் என்ன என்பது குறித்து ஒரு விளக்கப்படம் எடுத்திருக்கிறார்கள் குஜராத்திலுள்ள தாயும் மகனும்.

குஜராத் மாநிலம் பரூச் நகரில் பிரதான சாலையில் ஒரு ஸ்கூட்டியில் பள்ளிக்கு சென்ற மகனுடன் தாய் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த குழியில் ஸ்கூட்டி இறங்கி ஏறி அவர் சற்றே தடுமாறி பேலன்ஸ் இன்றி சாலையில் சரிந்தார். பின்னர் ஒருவாறு எழுந்து தனது வாகனத்தை தள்ளிச் சென்று, சாலை ஓரமாக நிறுத்தி வைத்தார். பின்னர் கீழே விழுந்த பையை எடுத்துக்கொண்டு திரும்பினார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

அதே நேரம் மற்ற அனைவரையும் போல் அப்படியே அவர் சென்று விடவில்லை; தனக்கு ஏற்பட்ட இந்த சிறு விபத்து போல் வேறு யாருக்கும் நேர்ந்து விடக் கூடாது என்ற நல்ல எண்ணம் அவருக்கு ஏற்பட்டது!

பள்ளிச் சிறுவனான தனது மகனின் துணையுடன் சாலையோரத்தில் இருந்து சிறு சிறு கற்கள் மணல் ஆகியவற்றை ஒரு துணியில் போட்டு எடுத்து வந்து நடு சாலையில் அதனைக் கொட்டி அந்தக் குழியை நிரப்பினார். பிறகு தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்றார்.

இந்த காட்சியை ஒருவர் படமாக்கி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது மனம் திறந்த பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

இந்த தாய்க்கும் மகனுக்கும் அரசு விருது அளித்து கௌரவப்படுத்த வேண்டும்; சாலையையும் தமது சொந்த இடத்தைப் போல் கருதி சிறிது நேரம் அதற்காக செலவழித்து பிறர் சிரமத்தை சந்திக்க கூடாது என்ற எண்ணத்தை வெளிப்படுத்திய இவர்களைப் போல் சமூகத்துக்கு பயன் உள்ளவர்களை அடையாளம் கண்டு கௌரவிக்க வேண்டும் என்ற கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories