February 21, 2026, 3:06 PM
30.4 C
Chennai

தலையணை பறித்தால் கிரீடம் தேடி வரும்; நாற்காலி பறித்தால் சிம்மாசனம் ஓடி வரும்…!

p chidambaram - 2026

தலையணை பறித்தால் கிரீடம் தேடி வரும்; நாற்காலி பறித்தால் சிம்மாசனம் ஓடி வரும்…! -இப்படி ஒரு டிவிட்டர் பதிவு இப்போது வைரலாகி வருகிறது. அதற்குக் காரணம், இது சிதம்பர ரகசியமாகிவிட்டதால்தான்!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நேற்று மீண்டும் திகார் சிறைக்கு அனுப்பப் பட்டார். சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிபிஐ.,யின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் இரு வாரங்களுக்கு திகார் சிறை வாசம் என காவலை நீட்டித்து சிறைக்கு அனுப்பி விட்டார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, தனக்கு நாற்காலி அளிக்கவில்லை, இருக்கை இல்லாமல் தாம் மிகவும் சிரமப் பட வேண்டியுள்ளது. 74 வயது கடந்த நிலையில், சிறையில் வசதிகள் போதவில்லை, காவலர்களுக்கு வைத்திருந்த நாற்காலியைக் கூட எடுத்துச் சென்றுவிட்டனர் என்றெல்லாம் புகார் கூறினார்.

ஆனால் அதற்கு அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிதம்பரம் அங்கே வரும் முன்னர் எந்த வசதிகள் இருந்தனவோ அப்படியே தான் உள்ளது.. என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், சிதம்பரம் தமக்கு சிறை அறைக்கு வெளியில் அமர்வதற்கு இருக்கை வேண்டும் என்று கேட்டது சமூக வலைத்தளங்களில் பெரிதாகப் பேசப் பட்டது. இதனை குறிப்பிடும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தின் ரசிகர் ஒருவர், “தலையணை பறித்தால் கிரீடம் தேடி வரும்; நாற்காலி பறித்தால் சிம்மாசனம் ஓடி வரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதனை கார்த்தி சிதம்பரம் டிட்வீட் செய்திருந்தார். எனவே கார்த்தி சிதம்பரம் சொல்லி இவ்வாறு டிவிட் போடப் பட்டிருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன. மேலும், #WeStandwithPChidambaram என்ற ஹேஷ்டாக்கும் பகிரப்பட்டுள்ளது.

https://twitter.com/GauthamKPC/status/1174650881033134080

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories