முதல் முறையாக அரசு பள்ளி மாணவா்களின் விமான பயணம் .!

ARO 1 - 2026

சிவகாசி அரசு பள்ளி மாணவர்களின் விமான பயண ஆசை: தீர்த்து வைத்த தொண்டு நிறுவனங்கள். பொதுமக்கள் பாராட்டு.!

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிவகாசி அரசு பள்ளி மாணவ – மாணவிகள், முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து செல்லப்பட்டனா்.

விமானத்தில் பறக்க வேண்டும் என்ற அவர்களது நீண்ட நாள் ஆசையை தன்னார்வ தொண்டு நிறுவனங்களான ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்கில் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து நிறைவேற்றியுள்ளனர்.

புதன்கிழமை சிவகாசியில் உள்ள தங்களது பள்ளியில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்ட இம்மாணவர்கள், காலை 6.30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

அதன் பின்னர் மதுரை விமான நிலையத்தை சுற்றிப்பார்த்த மாணவர்கள், அங்கு புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் விமானம் ஏறிய மாணவர்கள், சுமார் 1.15 மணி நேர பயணத்திற்கு பின் சென்னை வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரவுண்ட் டேபில் மற்றும் லேடீஸ் சர்கில் குழுவினரால் மாணவா்கள் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து பேருந்து மூலம் ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் மீதம் உள்ள நேரத்தை விஜிபி யுனிவர்சல் கிங்டம் பகுதியில் அம்மாணவர்கள் செலவழித்தனர்.
இது குறித்து மாணவா்கள் கருத்து தெரிவித்தபோது

எங்களை போன்ற ஏழை, எளிய அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியா்களுக்கு விமான பயணம் என்பது எட்டாத உயரத்தில் இருந்து வருகிறது.

எங்களது நீண்ட நாள் கனவான விமானத்தில் பறக்கும் ஆசையினை தீர்த்து வைத்த ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்கில் குழுவினருக்கு எங்கள் நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்கிறோம் என நெகிழ்ச்சியுடன் கூறினா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories