பள்ளியை சீரமைக்ககோரி 2ஆம் வகுப்பு மாணவி எடுத்த அதிரடி முடிவு.!

Mutharasi - 2026

பள்ளியை சீரமைக்க வலியுறித்தி 2ஆம் வகுப்பு மாணவி உயா்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடா்ந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தெற்கு தொடக்க பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் 6 வயது மாணவி பள்ளியை சீரமைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

மீஞ்சூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் அதிகை முத்தரசி (வயது 6). இவர் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தெற்கு தொடக்க பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி அதிகை முத்தரசி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் படிக்கும் தொடக்க பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருக்கிறது. சுவரில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிகிறது.

மேலும் பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் சமூக விரோத செயலால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இப்பள்ளி 2.21 ஏக்கரில் இருக்கிறது. இதில் 3 ஆயிரத்து 200 சதுர அடியில் பழைய மற்றும் பாழடைந்த கட்டிடத்தில் பள்ளி கட்டிடம் செயல்பட்டு வருகிறது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இது மாணவ-மாணவிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. பள்ளி வளாகத்தில் மாலை வேளையில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது.

HIG COURT CHANNAI - 2026

எனவே பாழடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்கவும், வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல்களை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ஷேசாயி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறும்போது, “மாணவி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு திருவள்ளூர் கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீஞ்சூர் வட்டார கல்வி அலுவலர் பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் நேரில் ஆஜராகி வருகிற 16-ந் தேதி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

மாணவியின் தந்தை பாஸ்கரன் வக்கீலாக உள்ளார்.

அவர் கூறும்போது, “எனது மகள் படிக்கும் அரசு பள்ளியின் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருப்பதையும், சுகாதாரம் இல்லாமல் இருப்பதையும் பார்த்ததும் உண்மையிலேயே வேதனை ஏற்பட்டது.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

இந்த தொடக்க பள்ளி 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இப்பகுதியில் தனியார் பள்ளிகள் வரும்வரை அரசு தொடக்க பள்ளியில் 700 மாணவர்கள் படித்து வந்தனர்.

ஆனால் அதிகாரிகள் பள்ளியில் கல்வி தரத்தையும், கட்டிடத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க தவறி விட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளோம்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories