தலைமை ஆசிரியருக்கு ரூ.1000 அபராதம்! கலெக்டர் அதிரடி!

plastic 1 - 2026

மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்ட கலெக்டராக இருப்பவர் சோட்டி சிங். பிந்த் மாவட்டத்தை சேர்ந்த 57 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், வனத்துறையினருடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழாவை நடத்தினர்.

மாவட்ட கல்வி அதிகாரி, டிஎப்ஓ ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலெக்டர் சோட்டி சிங் அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பு விருந்தினரை வரவேற்பதற்காக வாங்கி வந்த மாலையை, பள்ளி தலைமையாசிரியரான பி.எஸ்.சவுகான், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பையில் எடுத்து வந்தார்.

இதனால் கோபமடைந்த கலெக்டர், தலையாசிரியரை கடிந்து கொண்டதுடன் அதே இடத்தில் ரூ.1000 அபராதம் விதித்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி கலெக்டர் கூறுகையில், மாலையை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் எடுத்து வந்ததுடன், விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஆனது. நூற்றுக் கணக்கான மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இது போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தவறு இது தவறான முன்னுதாரணம் ஆகி விடக்கூடாது என்பதற்காகவே அபராதம் விதித்தேன். அதே இடத்தில் அவரிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது என்றார்.

இது பற்றி தலைமையாசிரியர் சவுகான் கூறுகையில், இந்த விழாவை நடத்தியது, வனத்துறை.விழாவிற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தான் செய்தனர். பாலிதீன் பைகளில் மாலைகள் வாங்கி வந்ததற்காகவே அபராதம் விதிக்கப்பட்டது.

எங்கள் பள்ளி வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறும் வகையில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தானே பொறுப்பு என்பதால் அபராதம் விதித்ததாக கலெக்டரும் என்னிடம் கூறினார் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories