March 27, 2025, 7:59 PM
28.9 C
Chennai

தலைமை ஆசிரியருக்கு ரூ.1000 அபராதம்! கலெக்டர் அதிரடி!

மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்ட கலெக்டராக இருப்பவர் சோட்டி சிங். பிந்த் மாவட்டத்தை சேர்ந்த 57 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், வனத்துறையினருடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழாவை நடத்தினர்.

மாவட்ட கல்வி அதிகாரி, டிஎப்ஓ ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலெக்டர் சோட்டி சிங் அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பு விருந்தினரை வரவேற்பதற்காக வாங்கி வந்த மாலையை, பள்ளி தலைமையாசிரியரான பி.எஸ்.சவுகான், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பையில் எடுத்து வந்தார்.

இதனால் கோபமடைந்த கலெக்டர், தலையாசிரியரை கடிந்து கொண்டதுடன் அதே இடத்தில் ரூ.1000 அபராதம் விதித்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி கலெக்டர் கூறுகையில், மாலையை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் எடுத்து வந்ததுடன், விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஆனது. நூற்றுக் கணக்கான மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இது போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தவறு இது தவறான முன்னுதாரணம் ஆகி விடக்கூடாது என்பதற்காகவே அபராதம் விதித்தேன். அதே இடத்தில் அவரிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது என்றார்.

இது பற்றி தலைமையாசிரியர் சவுகான் கூறுகையில், இந்த விழாவை நடத்தியது, வனத்துறை.விழாவிற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தான் செய்தனர். பாலிதீன் பைகளில் மாலைகள் வாங்கி வந்ததற்காகவே அபராதம் விதிக்கப்பட்டது.

எங்கள் பள்ளி வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறும் வகையில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தானே பொறுப்பு என்பதால் அபராதம் விதித்ததாக கலெக்டரும் என்னிடம் கூறினார் என்றார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

Entertainment News

Popular Categories