தலைமை ஆசிரியருக்கு ரூ.1000 அபராதம்! கலெக்டர் அதிரடி!

plastic 1 - 2026

மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்ட கலெக்டராக இருப்பவர் சோட்டி சிங். பிந்த் மாவட்டத்தை சேர்ந்த 57 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், வனத்துறையினருடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழாவை நடத்தினர்.

மாவட்ட கல்வி அதிகாரி, டிஎப்ஓ ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலெக்டர் சோட்டி சிங் அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பு விருந்தினரை வரவேற்பதற்காக வாங்கி வந்த மாலையை, பள்ளி தலைமையாசிரியரான பி.எஸ்.சவுகான், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பையில் எடுத்து வந்தார்.

இதனால் கோபமடைந்த கலெக்டர், தலையாசிரியரை கடிந்து கொண்டதுடன் அதே இடத்தில் ரூ.1000 அபராதம் விதித்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி கலெக்டர் கூறுகையில், மாலையை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் எடுத்து வந்ததுடன், விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஆனது. நூற்றுக் கணக்கான மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இது போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தவறு இது தவறான முன்னுதாரணம் ஆகி விடக்கூடாது என்பதற்காகவே அபராதம் விதித்தேன். அதே இடத்தில் அவரிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது என்றார்.

இது பற்றி தலைமையாசிரியர் சவுகான் கூறுகையில், இந்த விழாவை நடத்தியது, வனத்துறை.விழாவிற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தான் செய்தனர். பாலிதீன் பைகளில் மாலைகள் வாங்கி வந்ததற்காகவே அபராதம் விதிக்கப்பட்டது.

எங்கள் பள்ளி வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறும் வகையில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தானே பொறுப்பு என்பதால் அபராதம் விதித்ததாக கலெக்டரும் என்னிடம் கூறினார் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories