என்று தான் ஊடகங்கள் உண்மையைப் பேசியிருக்கின்றன?: மிரட்டும் மீராமிதுன்!

meera mithun - 2026

தன்மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எல்லாம் பொய் என நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் கடந்த சனிக்கிழமை சென்னை எக்மோரில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் டிவி ஒரு ரூபாய் கூட இதுவரை தனக்கு பேமென்ட் தரவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற அவர் தனக்கு இங்கு பாதுகாப்பு இல்லாததால்தான் மும்பையில் குடியேறியதாகவும் தெரிவித்தார். மும்பைதான் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் சென்னை போலீஸார் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிபுரிவதாகவும் தெரிவித்தார். 10000 ரூபாய் கொடுத்தால் யார் மீது வேண்டுமானாலும் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்றும் சாடினார்.

இதனை கேட்ட ஹோட்டல் நிர்வாகத்தினர் இதுபோன்று இங்கு பேசக்கூடாது என கூறியதாகவும், அதற்கு ஹோட்டல் நிர்வாகத்தினரை தகாத வார்த்தையால் திட்டிய மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திகள் இன்று அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.

இதனை தொடர்ந்து மீரா மிதுனின் ரசிகர்கள் இதுகுறித்து அவர்களிடம் கேட்டனர். அதற்கு எல்லாமே ஃபேக் நியூஸ் என்று கூறியுள்ள மீரா மிதுன், தன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் ஊடகம் என்பது பவர்ஃபுல் மீடியா அதில் இவ்வாறு தவறான செய்திகளை பரப்பலாமா?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அது போல இதுவரை இவர்கள் என்னை பற்றி கூறியதெல்லாம் பொய் என்பது இதனால் தெரிகிறது. எப்பொழுதும் என்னைப் பற்றி செய்தி வெளியிடுவதே இவர்களுக்கு வேலையாக போய்விட்டது.

உங்கள் டிஆர்பி ரேட்டிங்காகவும் விளம்பரத்திற்காகவும் இது போல் செய்வது நல்லது இல்லை. அனைத்து மக்களும் பார்க்கக் கூடிய ஒரு செய்தி சேனலில் இது போல் பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் நான் எச்சரிக்கிறேன்.

இன்று என் மீது வழக்கு பதிவு செய்தார்கள் என வெளியிட்ட எல்லா ஊடகங்களின் மீதும் நான் வழக்கு தொடர வேண்டிவரும். தொடர்ந்து இதுபோன்ற அவதூறு செய்திகளை பரப்பினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories