உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு தர வேண்டும்; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.!

Rajanndarbalaji - 2026

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு தர வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லி என்ற இடத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற அமைச்சார் ராஜேந்திரபாலாஜி இதனைக் கூறினார்.

ராஜேந்திரபாலாஜியின் இந்தக் கருத்து அதிமுகவில் உள்ள இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் வராத நிலையில், அதிமுக சார்பில் மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவில் அதிகளவில் இளைஞர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் எனவும் கட்சித் தலைமைக்கு கோரிக்கை விடுத்து பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று இருந்த இளைஞர்கள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்தக் கருத்தை பலத்த கைதட்டலுடன் வரவேற்றனர்.

அண்மைக்காலமாக அதிமுகவில் சேருவதற்கு இளைஞர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது.

இந்த சூழலில் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே மற்ற மாவட்டங்களில் எப்படியோ, ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் புது முகங்களையும், இளைஞர்களையும் உள்ளாட்சித் தேர்தலில் களம் இறக்க உள்ளாராம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அதிமுக இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories