தந்தையை போலீசாரிடம் சிக்க வைத்த 5 வயது சிறுவன்

Published:

IMG 20191120 WA0003 - 2026

தந்தையை போலிசில் ஒப்படைத்த 5 வயது சிறுவன்.

அமெரிக்காவில் ஒரு சிறுவன் தனக்கு தெரியாமலேயே ட்ரக்ஸ் சப்ளை செய்யும் தந்தையை போலீசாரிடம் ஒப்படைத்தான்.

5 வயது சிறுவன் வியாழன் அன்று பள்ளிக்கு ஒரு பையை எடுத்து வந்துள்ளான். அந்த பையில் ஒரு பவுடர் இருக்கிறது என்றும் அதனைத் தின்றதும் தான் ஸ்பைடர்மேன் போல் மாறிவிட்டதாகவும் தன் சக மாணவர்களிடம் கூறினான்.

அந்த பையை பரிசோதித்த ஆசிரியர் அதில் டிரக்ஸ் இருப்பதை கவனித்தார். உடனே போலீசில் புகார் செய்தார். பள்ளிக்கு வந்த போலீசார் சிறுவனை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர் .

பின்னர் சிறுவனை அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரை பார்த்த சிறுவனின் தாய் கவலை அடைந்தாள். சிறுவனின் தந்தை பென்னீ கார்சியோ (29) படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அதே அறையில் போலீசாருக்கு சுமார் 200 பைகள் நிறைய ட்ரக்ஸ் அகப்பட்டன. உடனே பென்னீ கார்சியோவை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img