நான் லஞ்சம் வாங்க மாட்டேன்!- போர்டு வைத்த மின்வாரிய அதிகாரி! மேலதிகாரி சொன்னாலும் “நோ!”தான்!

no bribe2 - 2026

“நான் லஞ்சம் வாங்கமாட்டேன்!” போர்டு வைத்த கரீம்நகர் மின்சார வாரிய அதிகாரி. மேலதிகாரிகள் சொன்னாலும் “நோ!”தான்!

எடுத்துக்காட்டாக வாழவேண்டும் என்றும் ஆதர்ச கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் நடைமுறையில் ஒரு சிலருக்கே சாத்தியம் ஆகிறது. அப்படிப்பட்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

தான் நம்பும் கொள்கையை 14 ஆண்டுகளாக எழுத்துக்கு எழுத்து அப்படியே கடைப்பிடித்து வருகிறார் அசோக். ‘போடேடி’அசோக், மின்சார வாரிய அதிகாரி. கரீம்நகர் என்பிடிசிஎல் சர்கிள் அலுவலகத்தில் அசிஸ்டன்ட் டிவிஷனல் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

அலுவலகத்தில் இவருடைய நாற்காலியின் பின்னால் சிவப்பு போர்டில் வெள்ளை எழுத்துக்களில் “நான் லஞ்சம் வாங்க மாட்டேன்”, என்று தெலுங்கிலும் “ஐ ஆம் அன்கரப்டட்” என்று ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறது. மொழி வேறானாலும் பொருள் ஒன்றுதான்.

தலையைச் சொரிவது, கூழைக் கும்பிடு போடுவது… இதெல்லாம் இவருக்குப் பிடிக்காது. எந்த வேலையானாலும் முறைப்படிதான் செய்வார்.

மக்கள் அளிக்கும் விண்ணப்பங்களில் நியாயம் இருந்தால் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவையின்றியே இவரிடம் வேலை நிறைவேறிவிடும். அக்கிரமமான வழியில் மேலதிகாரிகளிடம் இருந்து அழுத்தம் கொடுத்து வேலையை சாதித்துக் கொள்ள நினைத்தாலும் இவரிடம் நடக்காது.

no bribe1 - 2026

மேல் அதிகாரிகளிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக உத்தரவு வந்தால்தான் செய்வார். “2005இல் வேலையில் சேர்ந்த போதிலிருந்து யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் வேலை செய்து வருகிறேன்” என்று தெரிவிக்கிறார் அசோக் .

இது போன்ற போர்டு வைக்க வேண்டும் என்ற யோசனை எவ்வாறு வந்தது என்று கேட்ட போது “என்னிடம் வருபவர்கள் வேலை முடிந்ததும் பணத்தை நீட்டுவார்கள். நான் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள். எனக்கு மிகவும் தொல்லையாகப் போய்விடும். அதனால் போர்டு தயாரித்து வைக்க முடிவு செய்தேன். இது குறித்து மேல் அதிகாரிகளோடு பேசி கடந்த மாதம்தான் போர்டு வைத்தேன். அப்போதிலிருந்து தொந்தரவு குறைந்துவிட்டது” என்று விவரித்தார்.

நேர்மையாக வேலை செய்வதே தன் லட்சியம் என்று கூறும் அசோக்கும் அவருடைய நாற்காலியின் பின்னால் இருக்கும் போர்டும் இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories