December 5, 2025, 6:28 PM
26.7 C
Chennai

விமான கட்டணம் விண்ணை தொட்டது; பயணிகள் அதிர்ச்சி..!

AIRO - 2025

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் மற்றும் வெளி மாநிலத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர்.

இந்த நிலையில், ரெயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்து விட்டு ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிக அளவில் உள்ளது.

மேலும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

சொகுசு பயணம், பயண நேரம் குறைவு, பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது விமான சேவையை பலரும் விரும்பத் தொடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக விமான டிக்கெட் எடுப்பதிலும் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

இதனால் விடுமுறை காலம், பண்டிகை காலங்களில் பெரும்பாலானோர் பயணம் செய்வதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தி விமான நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன.

இதனால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

புத்தாண்டையொட்டி 30, 31-ந்தேதிகளில் பல விமானங் களில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்று விட்டன.

சென்னை யில் இருந்து தூத்துக்குடிக்கு விமான டிக்கெட் நேற்று மட்டும் ரூ.13 ஆயிரம் வரை கட்டணமாக இருந்தது.

வருகிற 28-ந்தேதி வரை ரூ.7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை டிக் கெட் கட்டணமாக உள்ளது

.மதுரை செல்வதற்கு கட்டணமாக ரூ.9,700 முதல் 15 ஆயிரம் வரையும், கோயமுத்தூருக்கு ரூ.3,700-ல் இருந்து ரூ.6 ஆயிரம் வரையும் டிக்கெட் கட்டணங்களாக வசூலிக்கப்படுகின்றன.

இதுபோல் கொச்சி, திருவனந்தபுரம், ஹுப்ளி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கான டிக்கெட்டுகளும் இருமடங்காக விற்கப்படுகிறது.

சாதாரணமாக மற்ற நாட்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடி, கொச்சி, திருவனந்தபுரத்துக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் வரையும் மதுரை, பெங்களூரு, கோவை ஆகிய நகரங்களுக்கு ரூ.2,500-ல் இருந்து ரூ.6 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 25 நாட்கள் இருப்பதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories