அதிர்ச்சி: ஐந்து லட்சம் இந்தியர்களின் டெபிட், கிரடிட் கார்டுகள் இணையத்தில் விற்பனை!

credit card - 2026

சுமார் 5 லட்சம் இந்தியர்களின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பற்றிய விபரங்கள் இணையத்தில் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டார்க் வெப் எனப்படும் அனாமதேய இணையத்தில் இந்தியர்கள் பயன்படுத்தும் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள், அவற்றின் ரகசியக் எண்கள் உள்ளிட்ட விபரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் சுமார் 5 லட்சம் இந்தியர்களின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டு பற்றிய விபரங்கள் வெளியாகி வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகள் மூலமாகவே இந்த விபரங்கள் கசிந்துள்ளதாகக் கூறும் அந்த நிறுவனம், ஒவ்வொரு அட்டையைப் பற்றிய முழு விபரங்களும் இந்திய மதிப்பில் 700 ரூபாய்க்கும் குறைவாகக் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அட்டைகளின் விபரங்களுடன் அதனைப் பயன்படுத்துவோரின் மின்னஞ்சல் முகவரிகள் கூட வெளியாகி உள்ளதாகவும், சிங்கப்பூர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கடந்த ஆண்டு அறிக்கையின்படி, கிரடிட், டெபிட் கார்டுகள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக கடந்த ஆண்டு ஆயிரத்து 866 மோசடிகள் நடந்துள்ளதாகவும், இதன் மூலம் சராசரியாக 20 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

debit - 2026

இந்நிலையில் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விபரங்கள் வெளியானது குறித்து ரிசர்வ் வங்கியின் இணைய பாதுகாப்புத்துறை விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தத் தகவல்கள் எப்படித் திருடப்பட்டன என்று தங்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இ காமர்ஸ் முறையைப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து ஹேக்கர்கள் மூலம் திருட வாய்ப்பிருக்கலாம் என்று ஐயம் எழுப்பியுள்ளனர்.

மற்ற இணையதளங்களைப் போல் அல்லாமல் டார்க் வெப் எனப்படும் அனாமதேய இணையத்தில் குற்றவாளிகளைத் தேடுவது என்பது இயலாத காரியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories