December 6, 2025, 9:50 AM
26.8 C
Chennai

அவரு ‘தல’ இவரு ‘மலை’ வேற யாரும் இல்ல இணை: ராஜேந்திர பாலாஜி!

rajendra balaji - 2025

அஜித், ரஜினி இருவரும் ஜல்லிக்கட்டுக் காளைகள் எனவும், அஜித் ‘தல’, ரஜினி ‘மலை’ எனவும், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (பிப்.15) விருதுநகரில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ.57,000 கடன் சுமத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட் குறித்து விமர்சிக்கப்படுகிறதே?

rajinikanth - 2025

நிதிப் பற்றாக்குறை பிரச்சினை காலம் காலமாக இருக்கிறது. திமுக ஆட்சியிலும் கடன் இருந்தது. ஒவ்வொரு ஆட்சியிலும் கடன் சுமை இருந்திருக்கிறது.

சமூக நலத்திட்டங்கள் கொண்டு வரும் நேரத்தில், வரிச்சுமை இல்லாமல் பட்ஜெட்டை உருவாக்கும் போது கடன் சுமை இருக்கும். மக்கள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார மேதைகளுக்கு இதுகுறித்து தெரியும்.

இந்த பட்ஜெட் யாருக்கும் வரியில்லாத பட்ஜெட். யாரையும் பாதிக்காத பட்ஜெட். இந்த பட்ஜெட் பட்டான, முத்தான பட்ஜெட்.

ajith 1 - 2025

திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் பட்ஜெட் போடத் தெரியவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் விமர்சித்துள்ளாரே?

அதிமுக, திமுக இரண்டுக்கும் பட்ஜெட் போடத் தெரியவில்லை என்று சொல்லி விட்டாரா? பஞ்சாயத்தில் கமல்ஹாசன் பட்ஜெட் போடட்டும். அதைப் பார்த்து விட்டுத்தான் அவரின் கருத்தை ஏற்கலாமா என்பதை முடிவு செய்ய முடியும்.

தமிழகத்தில் 6 கோடி பேருக்கு மேல் வாக்காளர்களே இருக்கின்றனர். 8 கோடிக்கும் மேல் மக்கள்தொகை இருக்கிறது. மிகப்பெரிய நாட்டுக்கு இணையான ஒரு மாநிலம் தமிழ்நாடு. அதற்கு முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

vijay 1 - 2025

இது இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட், 10-வது பட்ஜெட். அடுத்த ஆட்சியின் அறிமுக பட்ஜெட்டாக இதனைக் கருத வேண்டும். திமுகவுக்கு மக்கள் வாய்ப்பளிக்கத் தயாராக இல்லை. அதிமுக ஆட்சியில் உள்ள பிரச்சினைகள் யாரால் உருவாக்கப்பட்டன என்பது மக்களுக்குத் தெரியும்.

காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததால், டெல்டா மாவட்ட மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை முதல்வர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.

தூத்துக்குடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் பல திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இதனைப் பொறுக்க முடியாமல், அவர்கள் ஆட்சியில் பாலும் தேனும் ஓடியது போன்று ஸ்டாலின் பேசுகிறார். அவர்கள் ஆட்சியில் மின்சாரமே கிடையாது. 16 மணிநேரம் மின்சாரம் இல்லாத ஆட்சிதான் திமுக ஆட்சி.

கிராமங்களுக்குள் திமுக அமைச்சர்கள் நுழைய முடியாமல் மக்கள் விரட்டினர். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. மக்கள் சுபிட்சமாக இருக்கின்றனர். பிரச்சினையில்லாத நல்லாட்சியை முதல்வர் நடத்துகிறார்.

நல்லவர்கள் இந்த பட்ஜெட்டை வாழ்த்துகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வசைபாடாமல் பட்ஜெட்டை வாழ்த்தவா செய்வார்?

அரசியல் காரணங்களுக்காகவே விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாகவும், ரஜினிக்கு இணையாக விஜய் வளர்வதை தடுக்க முயற்சிகள் நடப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளதே?

வருமான வரித்துறை அதிமுகவினர் வீடுகளில் கூடத்தான் சோதனை நடத்தியது. அதற்கு குற்றம் சாட்ட முடியுமா? கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சோதனை செய்கின்றனர். அதில் ஏதாவது கிடைத்தால் நடவடிக்கை எடுக்கின்றனர்.

வருமான வரித்துறை தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதில் அரசியல் தலையீடு கிடையாது. ரஜினிக்குச் சமமாக இப்போதுள்ள எந்த நடிகரும் கிடையாது. ரஜினிக்குச் சமமான நடிகர் என்றால் அஜித் ஒருவர்தான் இருக்கிறார். இருவரும் ஜல்லிக்கட்டு காளைகள். அஜித் ‘தல’, ரஜினி ‘மலை’.இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories