December 6, 2025, 6:05 PM
26.8 C
Chennai

விரைவில் நடமாடும் அம்மா உணவகம்! சென்னை மாநகராட்சி ஆணையர்!

amma unavakam 1 - 2025

அம்மா உணவகம் மூலம் வருவாயைப் பெருக்கும் வகையில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் நடமாடும் அம்மா உணவகம் என்னும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக கருதப்படுகிறது அம்மா உணவக திட்டம். தமிழக மக்கள் தன்னை அம்மா என்று அழைத்ததற்கு இணங்க அவர்களின் பசியை போக்க இத்திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

குறைந்த விலையில் உணவுகளை வழங்கி ஏழை, எளிய மக்களின் பசியாற்ற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். 2013ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் மலிவுவிலை உணவகங்கள், மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டன.

amma unvakam - 2025

சென்னையில் உள்ள 200 வார்டுகள், ராஜீவ் காந்தி மற்றும் ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், தமிழகத்தின் பிற மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் என மொத்தமாக 654 அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

இங்கு மூன்று வேலையும் மலிவு விலையில், இட்லி, சாம்பார், கலவை சாத வகைகள், சப்பாத்தி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அம்மா உணவகங்களுக்கு ஆண்டுக்கு 88 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், அதனை தொடர்ந்து செயல்படுத்துவதில் சிக்கல் உருவானது.

இப்படியான சூழலில் அம்மா உணவகங்களை மேம்படுத்த 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாநகராட்சி நிதியுடன், தமிழக அரசின் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதால் அம்மா உணவகங்களில் பல புதிய திட்டங்களை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்ததாவது, தமிழகத்தில் முக்கியமான தேவை இருக்கின்ற இடங்களில் விரைவில் நடமாடும் அம்மா உணவகங்கள் அமைக்கப்படும்.

விற்பனையை அதிகரித்து வருவாயை பெருக்க தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நடமாடும் அம்மா உணவகம் என்னும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது.

இதற்காக முதலில் 3 வேன்கள் ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளன. அந்த வேனில் உணவு பண்டங்களை வைத்து விற்பனை செய்ய வசதியாக மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 3 மண்டலங்களில் இந்த நடமாடும் அம்மா உணவக திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார். வருமாண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்நடவடிக்கையை வரவேற்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தனிவொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் புரட்சிக்கவி பாரதி. இந்த ரவுத்திர பாடலுக்கு இணங்க உணவின் முக்கியத்துவத்தை அறிந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்க்கப்பாக உள்ளது. தொடர்ந்து, இது தவிர 70 அம்மா உணவகங்களில் ரூபாய் ஆயிரத்திற்கும் குறைவாக விற்பனை நடக்கிறது. இதனை மூடாமல் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு மாற்றம் செய்யவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories