வீட்டு உரிமையாளரை தாக்கி… வாடகை கொடுக்காமல் டபாய்த்த… பியூஷ் மானுஷ் கைது!

piyush manush - 2026
file picture

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் சேலத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார். தனது வீட்டை அபகரித்துக் கொண்டு காலிசெய்ய மறுப்பதாக வீட்டு உரிமையாளர் ஆஷாகுமாரி என்பவர் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, தங்களது வீட்டை அபகரிக்க திட்டமிட்டு மிரட்டி வருவதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பியூஸ் மானுஷ்(49 வயது). இவரது பெற்றோர் சேலத்துக்கு தொழில் புரிய வந்த நிலையில் இவர் தமிழகத்தில் பிறந்துள்ளார். சேலம் கொண்டப்ப நாயக்கன் பட்டியில் வசிக்கும் இவர் சேலம் குரல் கொடு, சேலம் மக்கள் குழு என்ற அமைப்புகளை தொடங்கி நடத்தி வருகிறார்.

அதே நேரத்தில் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவர் செயல்படுவதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதன் பேரில் இவர் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ஆஷா குமாரி (வயது 53) இவர் சேலத்தில் வசிக்கிறார். நேற்று முன்தினம் மகள், மருமகனுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் சேலம் கோரிமேடு கொண்டப்பநாயக்கன்பட்டியில் எங்கள் வீடு உள்ளது.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன் சமூக ஆர்வலர் ஒப்பந்த அடிப்படையில் எங்கள் வீட்டில் குடியேறினார். பதினோரு மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. கடந்த 2013 ஏப்ரல் மாதம் என் கணவர் இறந்ததால் சொந்த வீட்டில் குடியேற முடிவு செய்தோம்.

piyushmanush - 2026

வீட்டை காலி செய்ய அறிவுறுத்தி 2018ல் நாங்கள் ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. ஆனால் அவர் காலி செய்ய மறுத்ததுடன் எங்களை மிரட்டினார். ஆகஸ்ட் முதல் மூன்று மாத வாடகை தராமல் போக்கு காட்டினார். வாடகை கேட்டு போனபோது அனுமதியின்றி கட்டடம் கட்டி முன்புறத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து ஷெட் அமைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன்.

முதல்வர் தனிப்பிரிவு பிரதமர் வரை புகார் அனுப்பினேன். உதவி கமிஷனர் அழைத்து நிலுவைத் தொகையை வசூலித்து கொடுத்து சிவில் பிரச்சனையில் தலையிட முடியாது என ஒதுங்கிக் கொண்டார். கடந்த 2019 மே மாதம் முதல் இதுவரை வாடகை தரவில்லை. நேற்று முன்தினம் வீட்டுக்குச் சென்று காலி செய்யுமாறு கூறினேன். அவர் முடியாது உன்னால் முடிந்ததை செய் என்று கூறி என்னை தாக்கி தள்ளி விட்டார் என்று அவர் புகார் கூறியிருந்தார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

சேலத்தில் முகாமிட்டுள்ள முதல்வர் எடப்பாடி இடம் நேற்று மாலை அவர் புகார் வழங்கினார். இதையடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பியூஸ் மானுஷ் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். சேலத்தில் முகாமிட்டுள்ள முதல்வர் எடப்பாடி இடம் நேற்று மாலை அவர் புகார் வழங்கினார். இதையடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பியூஸ் மானுஷ் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். சேலத்தில் முகாமிட்டுள்ள முதல்வர் எடப்பாடி இடம் நேற்று மாலை அவர் புகார் வழங்கினார். இதையடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பியூஸ் மானுஷ் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து ஆஷாகுமாரி கூறிய புகார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories