December 6, 2025, 8:18 AM
23.8 C
Chennai

இப்போ பிறந்த குட்டி.. மின்சார கம்பிக்கு பயந்து.. வைரல் வீடியோ!

elephant 1 - 2025

கோவை மாவட்டம் ஆனைகட்டி மற்றும் மாங்கரை பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது இங்கு ஏராளமான யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

இப்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்படுவதால், சாப்பாடு, தண்ணீர் தேடி ஊருக்குள் யானைகள் வந்து விடுகின்றன. அப்படி வரும் இரவு நேரங்களில் கிளம்பி கிராமத்துக்குள் வரும் யானைகள் சுற்றித்திரிந்து தேவையான தண்ணீர், உணவு கிடைத்தவுடன் காலையில் காட்டுக்குள் சென்றுவிடுவது வழக்கம்.

இந்நிலையில் பெண் யானை ஒன்று எல்லையில் குட்டி ஒன்றினை நேற்றிரவு ஈன்றுவிட்டது.. இதனையடுத்து இன்று காலை வனப்பகுதிக்குள் செல்ல முயன்றபோது… பிறந்து சில மணி நேரங்களே ஆன குட்டியால் எழுந்து நடக்க முடியவில்லை.

அதனால் தாய் யானை அங்கேயே காத்திருந்தது.. பிறகு அந்த குட்டி யானை எழுந்து நின்றது. அதன்பிறகு அதனை அழைத்து கொண்டு காட்டுக்குள் செல்ல முயன்றது. ஆனால் காட்டுக்குள் போக முடியாத அளவுக்கு மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்ததும் தாய் யானை குட்டியை எச்சரித்து தூரமாக நிறுத்தி கொண்டது.

பிறகு வேறு வழி இருக்கிறதா என்று சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர்கிறது. மின் வேலியில் படாதவாறு குட்டியை அழைத்துக்கொண்டு பெண்யானை செல்லும் காட்சியை அங்கிருந்த நபர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனை சோஷியல் மீடியாவிலும் இப்போது பதிவிட, அது வேகமாக வைரலாகி வருகிறது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இன்றுதான் உலக வன உயிரின பாதுகாப்பு தினம்.

இன்று நடந்த இந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.. யானைகள் வலசை பாதையில் தொடர் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தி வருவதால் அதன் வலசை பாதைகள் மாறி யானைகள் கிராமப்பகுதிக்குள் புகுவது அதிகரித்து விடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தாய் யானை குட்டி யானையை பத்திரமாக அழைத்து செல்லும் இந்த வீடியோ கண்கலங்க வைத்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories