ட்ரோன் மூலம் போதைப் பாக்கு வாங்கிய இளைஞர் கைது!

dron 1 - 2026

ஆளில்லா குட்டி விமானத்தை அனுப்பி போதை பாக்கு வாங்கிய இளைஞரை போலிஸார் கைது செய்தனர்

ஆளில்லா குட்டி விமானத்தை அனுப்பி நண்பரின் கடையில் போதைப்பாக்கு வரவழைத்த ஒரு இளைஞரையும் அவருடைய நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே உள்ள மோர்பி என்ற நகரை சேர்ந்தவர் ரவி பதான்யா வயது 26 போதைக்கு அடிமையான இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் ஊரடங்கு அமலில் இருப்பதால் மது மற்றும் புகையிலையை விற்கும் கடைகள் அனைத்தும் மூடியே இருக்கின்றன
ரவியின் நண்பன் கிரண் கர்காரியா வெற்றிலை பாக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்

இவரின் கடைக்கும் ரவியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு 100 மீட்டர் தொலைவு இருக்கும் சிகரெட் புகையிலை பீடி போன்றவற்றை விற்பனை செய்துவரும் அவர் ஊரடங்கு காரணமாக கடையை திறக்க வில்லை

ரவிக்கு போதைப்பாக்கு தேவைப்பட்டது இதை தன் நண்பருக்கு தெரிவித்தாராம் தன்னிடமிருக்கும் ஆளில்லா குட்டி விமானத்தை அனுப்புவதாகவும் அதன் மூலம் பாக்கை தனக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார் அவரும் சம்மதம் தெரிவித்தார்

அதன்படி தனது அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்தபடியே அந்த விமானத்தை இயக்கினார் அது பறந்து சென்று அவருடைய நண்பரின் கடை அருகே சென்றது திட்டமிட்டபடி ஒரு சிறிய பையில் போதை பாக்கு எடுத்து அதை விமானத்தில் கட்டிவிட்டார்.

அந்த குட்டி விமானம் அதை சுமந்து கொண்டு ரவியின் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தது இத்துடன் இவர்கள் இந்த விளையாட்டை நிறுத்தி இருந்திருந்தால் பிரச்சனை எதுவும் இருந்திருக்காது இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர் அது வைரலானது

இதை அறிந்த காவல்துறையினர் ஊரடங்கை மீறி தடை செய்யப்பட்ட போதை பாக்கை பரிமாறிய குற்றத்திற்காக ரவி பதானியா கிரண் கர்காரியா ஆகிய இரு நண்பர்களையும் கைது செய்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories