December 6, 2025, 4:09 AM
24.9 C
Chennai

ஊழியம் செய்ய பணமில்லையாம்! பைக் திருடராக மாறிய பாதிரியார்!

samuel madurai pastor
samuel madurai pastor

பைக் திருட்டில் ஈடுபட்ட பாதிரியாரை மடக்கிபிடித்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 11 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

மதுரை தனக்கன்குளம் அருகேயுள்ள பர்மாகாலனி பகுதியை சேர்ந்த விஜயன் (எ) சாமுவல் இவர் அதே பகுதியில் கிறிஸ்துவ பிரதர்ஸ் அசெம்ப்ளி என்ற அமைப்பை நடத்தி மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக போதிய வருமானம் இல்லாத நிலையில் வெளியில் சுற்றித் திரிந்த பாதிரியார், வீடுகளில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டி இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று திருடிய பைக் ஒன்றை மெக்கானிக் கடையில் கொடுத்த போது பைக் விவரங்கள் குறித்து முரண்பாடாக பதில் அளித்த நிலையில் மெக்கானிக் தரப்பில் இருந்து காவல்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை செய்த சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் பிரியா, துணை ஆய்வாளர் ஜெய்சங்கர், உதவி ஆய்வாளர்கள் கணேசன் மற்றும் பொத்தி ராஜா தலைமையிலான காவலர் ரமேஸ் மற்றும் அன்பு என்கின்ற காவலர்கள் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

samuel madurai pastor
samuel madurai pastor

இந்நிலையில் தகவலின் அடிப்படையில் அவரிடமிருந்து 11 பைக்குகளை சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

போலீசார் இதுகுறித்து கூறியபோது… தேனி மாவட்டம் கம்பத்தில் பாதிரியாரான படிப்பை முடித்த சாமுவேல் தனக்கன்குளத்தில் ஊழியம் செய்து வந்தார் இதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதி திடீரென நிறுத்தப்பட்டது 

samuel madurai pastor
samuel madurai pastor

இதனால் டூவீலர்களில் திருடி தலா ரூபாய் 10 ஆயிரத்துக்கு அடமானம் வைத்து வந்துள்ளார் சில நாள்களுக்கு முன் டூவீலர் ஒன்றை பைபாஸ் ரோடு மெக்கானிக்கிடம் சர்வீஸ் செய்ய கொடுத்துள்ளார். அப்போது சாமுவலின் அலைபேசி எண் ஆதார் அட்டை நகலை மெக்கானிக் வாங்கிக்கொண்டார் டூவீலரில் இருந்த ஆவணங்களை மெக்கானிக் சரிபார்த்த போது அது வேறு ஒரு வருகிறது என்று தெரிய வந்தது 

அதில் இருந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார் மெக்கானிக். உடனே டூவீலர் உரிமையாளர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சாமுவேல் கைது செய்யப்பட்டார் என்றனர்.

கொரோனா ஊரடங்கால் பாதிரியார் பைக் திருடராக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories