
சாத்தான்குளம் விவகாரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகள் குறித்து அவதூறாகவும், போலீஸார் குறித்தும், இந்து மதத்தினர் குறித்தும் ஆபாசமாக திட்டியும் துர்பிரசாரம் செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் வி.எச்.பி., சார்பில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.
கோவில்பட்டியைச் சேர்ந்த சி.தம்பிராஜா என்பவர் அளித்த இந்த புகார் மனுவில், சிஜே ஜெபா என்பவர் முகநூல் கிறிஸ்துவ மீடியா பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாக எழுதியுள்ளார் என்றும் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் படியும் கோரி புகார் அளித்துள்ளார்.




