பிரிந்த காதலர்கள்: விமானநிலையத்தில் ஒன்று சேர்ந்த காட்சி!

Published:

Screenshot_2020_0817_123825

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து ஒருசில நாடுகளில் ஊரடங்கும் தளர்த்தப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ஜெர்மனியில் ஊரடங்கால் பிரிந்த காதலர்கள் ஆறு மாதத்திற்கு பின்னர் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த Florian Mehle மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த Renata Alves ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவ்வப்போது நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர்

Screenshot_2020_0817_115650

இந்த நிலையில் ஜெர்மனியில் ஊரடங்கால் பிரிந்த காதலர்கள் ஆறு மாதத்திற்கு பின்னர் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த Florian Mehle மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த Renata Alves ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவ்வப்போது நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர்

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இருவரும் நேரில் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ஜெர்மன் அரசு சமீபத்தில் அனுமதி அளித்ததை Florian Mehle தனது காதலியை பார்க்க பிரேசில் நாட்டில் உள்ள பிரான்கோ வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் 6 மாதங்களுக்குப் பின்னர் காதலர்கள் சந்தித்து கட்டிப்பிடித்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Related articles

Recent articles

spot_img