ஒரு வெளிநாட்டு பெண்ணொருவர் கங்கை நதியருகே தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்தபோது அங்குள்ள பொது மக்கள் கொடுத்த புகாரில் போலீசால் கைது செய்யப்பட்டார் .
ரிஷிகேஷில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு பிரெஞ்சு நாட்டை சேர்ந்த இளம் பெண்ணொருவர் அங்குள்ள கங்கை நதி மீது நிர்வாணமாக நின்று வீடியோவும் போட்டோவும் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள பொது மக்களும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் அந்த பெண்ணிடம் இது தவறு என்று எடுத்து கூறியும் அந்த பெண் துணியே இல்லாமல் ரிஷிகேஷுல் பல இடங்களில் நின்று போட்டோ எடுத்தபடியே இருந்தார்.
பிறகு அந்த வீடியோவினை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார் .இந்த வீடியோவையும் ,போட்டோவையும் சமூக ஊடகத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த ஊர் கவுன்சிலர் ஒருவர் போலீசில் புகார் தந்தார் .பிறகு போலிஸார் வழக்கு பதிவு செய்து அந்த பிரெஞ்சு நாட்டு பெண்ணை தேடினார்கள்
அப்போது அந்த பகுதி மக்கள் அந்த பெண் ஒரு ஹோட்டலில் பல மாதங்களாக தங்கியிருப்பதை கூறினார்கள்.
பிறகு போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது தாம் கொரானா ஊரடங்கால் தங்கள் நாட்டுக்கு போக முடியாமல் ஐந்து மாதங்களாக இங்கு இருப்பதாகவும், இப்படி நிர்வாண போட்டோ எடுப்பது இந்தியாவில் தவறு என்று தனக்குத் தெரியாது என்றும் கூறினார் .இருந்தாலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.