வானத்தில் இருந்து விழுந்த கற்கள்! கிடைத்தவர்களுக்கு கொட்டும் பணம்!

bresil

வறுமையில் வாழ்ந்து வரும் ஒரு நகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பொத்துக்கொண்டு வந்திருக்கிறது.

பிரேசில் நாட்டில் அமைந்துள்ள Santa Filomena நகரத்தில் வாழும் 90 சதவிகிதம் மக்களும் விவசாயிகள்.

சரியான வருமானமின்றி எப்படி இந்த மாத தேவைகளை சந்திப்பது என்று கலங்கியிருந்த மக்களுக்கு வானத்திலிருந்து பணமழை பெய்துள்ளது.

ஆம், Edimar da Costa Rodrigues (20) என்ற மாணவர், திடீரென வானம் புகை மூட்டத்தால் சூழ்ந்துள்ளதை கவனித்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது நண்பர்கள் அவருக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார்கள், அந்த செய்தியில் வானிலிருந்து பாறைகள் விழுவதாக அவர்கள் தெரிவிக்க, வெளியே சென்ற Rodriguesக்கு 164 கிராம் எடையுள்ள ஒரு கல் கிடைத்துள்ளது.

அவரைப்போலவே மக்கள் ஆங்காங்கு விழுந்துள்ள கற்களை சேகரித்துள்ளார்கள். அதிக பட்சமாக ஒருவருக்கு 40 கிலோ எடையுள்ள ஒரு கல் கிடைத்துள்ளது. அந்த கற்கள் சாதாரணமானவை அல்ல! அவை அபூர்வ விண்கற்கள், அதுவும் பூமி உருவாகுவதற்கு முன்பே சூரியக்குடும்பத்தில் காணப்பட்ட ஒரு வகை கற்கள் அவை.

ஆகவே, அவற்றை ஆயிரக்கணக்கான பவுண்டுகள் கொடுத்து வாங்க பலர் தயாராக இருக்கிறார்கள்.

இந்த மாத மளிகை பாக்கியை கொடுப்பது எப்படி என்று கலங்கியிருந்த ஏழை மக்கள், ஒரே நாளில் பணக்காரர்களாகிவிட்டார்கள்.

Rodrigues, தனக்கு கிடைத்த கல்லை 1,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்துள்ளார். மற்றொருவர் தனக்குக் கிடைத்த 2.8 கிலோகிராம் எடையுள்ள கல்லை 15,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்துள்ளார்.

அந்த 40 கிலோ கல்லை விற்க பேரம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், அந்த நகரத்திலுள்ள தேவாலயம் ஒன்றின் அருகில் பல பெரிய விண்கற்கள் கிடைத்துள்ளதால், இது கடவுள் அனுப்பிய பரிசு என மக்கள் கருதுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories