December 7, 2025, 12:24 AM
25.6 C
Chennai

கால் மற்றும் டேட்டா கட்டணங்கள் உயர்வு.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டம்?

cell

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, மொபைல் டேட்டா மற்றும் கால் கட்டணங்கள் உயரக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் வருவாயில் குறிப்பிட்ட தொகையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.

மத்திய அரசுக்கு உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் என மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியுடன் பாக்கி செலுத்த வேண்டி உள்ளது.

இந்த தொகையை செலுத்துமாறு அந்த நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் ஜியோவின் வருகைக்கு பின்னர் பெரும் நஷ்டத்தில் இருந்த இந்த நிறுவனங்கள் அதனை செலுத்த முடியாமல் திணறி வந்தன.

எனவே நிலுவைத்தொகை செலுத்தாத தொலை தொடர்பு நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையின் போது தொலை தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத்தொகையை செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மத்திய தொலை தொடர்புத் துறை சார்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று முன் தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை கட்டுவதற்கு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொலை தொடர்பு நிறுவனங்கள் நிலுவை தொகையில் 10 சதவீதத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். நிலுவைத்தொகை தவணையை ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதிக்குள் கட்ட வேண்டும்- அவ்வாறு கட்டத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இதன் விளைவாக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டேட்டா மற்றும் கால் கட்டணங்களை உயர்த்தக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மொபைல் டேட்டா மற்றும் கால் கட்டண விகிதங்கள் மலிவானவையாக இருக்கும் ஒரு நாட்டில் தங்கள் வாடிக்கையாளர்களின் பைகளில் இருந்து அதிக பணம் பெற இந்த நிறுவனங்கள் திட்டமிடக்கூடும் என்றும் தெரிகிறது.

இதை ஈடுசெய்ய தொலை தொடர்பு நிறுவனங்கள் 10-27% வரை கட்டணங்களை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டண உயர்வை தவிர்க்க முடியாது என்றும், உடனடியாக இந்த கட்டண உயர்வை இந்த நிறுவனங்கள் அறிவிக்கக்கூடும் என்றும் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories