கால் மற்றும் டேட்டா கட்டணங்கள் உயர்வு.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டம்?

cell

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, மொபைல் டேட்டா மற்றும் கால் கட்டணங்கள் உயரக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் வருவாயில் குறிப்பிட்ட தொகையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.

மத்திய அரசுக்கு உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் என மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியுடன் பாக்கி செலுத்த வேண்டி உள்ளது.

இந்த தொகையை செலுத்துமாறு அந்த நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் ஜியோவின் வருகைக்கு பின்னர் பெரும் நஷ்டத்தில் இருந்த இந்த நிறுவனங்கள் அதனை செலுத்த முடியாமல் திணறி வந்தன.

எனவே நிலுவைத்தொகை செலுத்தாத தொலை தொடர்பு நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையின் போது தொலை தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத்தொகையை செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மத்திய தொலை தொடர்புத் துறை சார்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று முன் தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை கட்டுவதற்கு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொலை தொடர்பு நிறுவனங்கள் நிலுவை தொகையில் 10 சதவீதத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். நிலுவைத்தொகை தவணையை ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதிக்குள் கட்ட வேண்டும்- அவ்வாறு கட்டத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இதன் விளைவாக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டேட்டா மற்றும் கால் கட்டணங்களை உயர்த்தக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மொபைல் டேட்டா மற்றும் கால் கட்டண விகிதங்கள் மலிவானவையாக இருக்கும் ஒரு நாட்டில் தங்கள் வாடிக்கையாளர்களின் பைகளில் இருந்து அதிக பணம் பெற இந்த நிறுவனங்கள் திட்டமிடக்கூடும் என்றும் தெரிகிறது.

இதை ஈடுசெய்ய தொலை தொடர்பு நிறுவனங்கள் 10-27% வரை கட்டணங்களை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டண உயர்வை தவிர்க்க முடியாது என்றும், உடனடியாக இந்த கட்டண உயர்வை இந்த நிறுவனங்கள் அறிவிக்கக்கூடும் என்றும் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories