தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 5684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோனா காரணமாக ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று 5684 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,74,940 ஆக உயர்வு கண்டுள்ளது
சென்னையில் இன்று 988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,43,602 ஆக உயர்ந்துள்ளது!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 87 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8012 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6,599 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் .. இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 4,16,715 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: