ரயில் நிலைய மேனேஜரை சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்க வைத்த ஹெச்.ராஜா?

ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவராக ஹெச்.ராஜா உள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் சென்னை செண்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழு சார்பாக அதன் தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆசீர்வாதம் ஆச்சாரி, இர்பான் அஹமது (தில்லியைச் சேர்ந்தவர். பாஜக., சிறுபான்மை அணி தேசிய துணைத் தலைவராக இருந்தவர்) மற்றும் உறுப்பினர்கள் தமிழகத்தில் நேற்று திருச்சிராப்பள்ளி, மற்றும் காரைக்குடியிலும் இன்று மதுரை, ராமேஸ்வரத்திலும் ரயில் நிலையங்களில் ஆய்வு நடத்தினர்.

இதில் நேற்று திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்திய போது நடந்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. நேற்று காலை திருச்சிராப்பள்ளி ரயில் நிலைய ஆய்வில், 6வது நடைமேடைக்குச் சென்று அங்கிருந்த பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். அப்போது, அங்கிருந்த பயணிகள் அனைவரும் இங்கே உள்ள குடிநீர்க் குழாயில் வரும் தண்ணீர் மிகவும் அசுத்தமாக உள்ளதாகக் கூறினர். இதைக் கேட்ட ஹெச்.ராஜா, இர்பான் அகமது ஆகியோர், குடிநீர்க் குழாயைத் திறந்து, நீரைக் கையில் பிடித்துப் பார்த்தனர். அந்த நீர், மிகவும் அழுக்காகவும் துர்நாற்றத்துடனும் இருந்தது. இதை அடுத்து, அருகில் இருந்த ஸ்டேஷன் மேனேஜரை, அந்தத் தண்ணீரைக் குடிக்கச் சொல்லியுள்ளனர். அவரும் அதைக் கையில் பிடித்துப் பார்த்து, சற்று தயங்கியுள்ளார். இருப்பினும், இருவரும் வலியுறுத்தியதும், தன் வாயில் தண்ணீரை ஊற்றிய அடுத்த நொடி நாற்றமும், அருவருப்பும் தாங்காமல் துப்பிவிட்டார்.

பின்னர் விடாமல் மீண்டும் குடிக்கச் சொல்லியும் தயங்கிய அதிகாரியை இர்பான் வலுக்கட்டாயமாகக் குடிக்கச் செய்தார். ஒரே ஒரு வாய், துர்நாற்றம் மிகுந்த இந்தத் தண்ணீரைக் குடிக்க மறுக்கும் நீங்கள், பயணிகளுக்கு மட்டும் தினசரி இந்த நீரை குடிக்கக் கொடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். தன் தவறை திருத்திக் கொள்வதாகக் கூறிய அதிகாரி, அதற்காக வருத்தம் தெரிவித்தார்.

இந்தியன் பட பாணியில் அதிரடியாக செயல் பட்ட இக் குழுவின் செயல் அங்கிருந்தோரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories