திருப்பரங்குன்றம் மலை உச்சி கோயிலில் தீபம் ஏற்றிய இந்து முன்னணியினர் இருவர் கைது!

thirupparankundram-deepam-lighted-hindumunnani-activists-arrested
thirupparankundram-deepam-lighted-hindumunnani-activists-arrested

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பாரம்பரியமான கைலாசநாதர் கோவில் அருகே தடையை மீறி கார்த்திகை தீபம் ஏற்றிய இந்து முன்னணியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கே இந்துக்களின் விழாக்களுக்கு தடை ஏற்படுத்தும் நோக்கில் பின்னாளில் சிக்கந்தர் பாவா தர்கா அமைக்கப் பட்டதாகக் கூறப் படுகிறது. இங்குள்ள கைலாச நாதர் கோவிலில், 1967 ஆம் ஆண்டு வரை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது.

அதன் பின், திட்டமிட்டவகையில், இரு பிரிவினரிடையே தகராறு ஏற்படுத்தப் பட்டது. இதன் காரணமாக கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்து அமைப்புகள் உயர் நீதிமன்றம் சென்று மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி பெற்றனர்.

ஆனால் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு காரணங்களைக் காட்டி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்ற அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி அளவில் இந்து முன்னணியை சேர்ந்த சிலர் மலை உச்சியில் உள்ள கைலாசநாதர் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றினர். உயர் நீதிமன்ற உத்தரவு இருந்தும் அதனை அமல்படுத்ததாக காவல்துறை, கைலாசநாதர் கோவில் தூணில் தீபம் ஏற்றியது குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப் பட்ட நபர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் வில்லாபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் கீரை துறையை சேர்ந்த அரசுப் பாண்டி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மலைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இருவரையும் கைது செய்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories