இராமர் கோவிலுக்கு 1 கோடி! குகையில் வாழும் துறவி நன்கொடை!

ramar-kovil-1
ramar-kovil-1

ரிஷிகேஷில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குகையில் வசித்து வரும் துறவி ஒருவர், ராமர் கோயில் கட்டுமான பணிக்கு தனது பங்களிப்பாக ரூ.1 கோடி கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் ஒரு குகையில் வசித்து வரும் 89 வயதான துறவி சுவாமி சங்கர் தாஸ் என்ற பக்காட் பாபா. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த குகையில் சுவாமி சங்கர் தாஸ் வசித்து வருகிறார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு நன்கொடை திரட்டப்படும் செய்தியை அறிந்த துறவி சங்கர் தாஸ், ராமர் கோயில் கட்டுமான பணியில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் விரும்பினார்.

இதனையடுத்து ரிஷிகேஷில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு சென்று ராமர் கோயிலுக்கு ரூ.1 கோடியை காசோலை வடிவில் நன்கொடை வழங்கினார்.

துறவி ரூ.1 கோடி நன்கொடை வழங்குவதை பார்த்து வங்கி ஊழியர்கள் பிரமித்து விட்டனர். உடனே வங்கி அதிகாரிகள் அந்நகர விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கு தகவல் கொடுத்து வங்கிக்கு அவர்களை வரவழைத்தனர். அதன்பிறகு துறவி சங்கர் தாஸ் ரூ.1 கோடிக்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அதற்கான ரசீதை துறவி சங்கர் தாஸிடம் வழங்கியது.

இது தொடர்பாக சுவாமி சங்கர் தாஸ் கூறுகையில், நான் இப்போது 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குகையில் வசித்து வருகிறேன். இந்த முயற்சியை (நன்கொடை திரட்டும் திட்டம்) பற்றி நான் கேள்விப்பட்டேபோது, என் வாழ்நாள் கனவாக இருந்த ஒரு காரணத்திற்காக ஏன் நன்கொடை வழங்கக்கூடாது என்று நினைத்தேன் என்று தெரிவித்தார்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறுகையில், ராமர் கோயில் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளிக்க கோரிய சுவாமி சங்கர் தாஸ் குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் வங்கிக்கு சென்றோம். பணத்தை நேரடியாக நன்கொடையாக வழங்க முடியாததால், அவர் எங்களிடம் காசோலையை ஒப்படைத்தார். நாங்கள் அவருக்கு ரசீது கொடுத்தோம். வங்கி மேலாளர் பணத்தை அறக்கட்டளையில் சமர்ப்பிப்பார் என்று தெரிவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories