February 9, 2025, 1:50 PM
29.8 C
Chennai

இராமர் கோவிலுக்கு 1 கோடி! குகையில் வாழும் துறவி நன்கொடை!

ramar-kovil-1
ramar-kovil-1

ரிஷிகேஷில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குகையில் வசித்து வரும் துறவி ஒருவர், ராமர் கோயில் கட்டுமான பணிக்கு தனது பங்களிப்பாக ரூ.1 கோடி கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் ஒரு குகையில் வசித்து வரும் 89 வயதான துறவி சுவாமி சங்கர் தாஸ் என்ற பக்காட் பாபா. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த குகையில் சுவாமி சங்கர் தாஸ் வசித்து வருகிறார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு நன்கொடை திரட்டப்படும் செய்தியை அறிந்த துறவி சங்கர் தாஸ், ராமர் கோயில் கட்டுமான பணியில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் விரும்பினார்.

இதனையடுத்து ரிஷிகேஷில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு சென்று ராமர் கோயிலுக்கு ரூ.1 கோடியை காசோலை வடிவில் நன்கொடை வழங்கினார்.

துறவி ரூ.1 கோடி நன்கொடை வழங்குவதை பார்த்து வங்கி ஊழியர்கள் பிரமித்து விட்டனர். உடனே வங்கி அதிகாரிகள் அந்நகர விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கு தகவல் கொடுத்து வங்கிக்கு அவர்களை வரவழைத்தனர். அதன்பிறகு துறவி சங்கர் தாஸ் ரூ.1 கோடிக்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அதற்கான ரசீதை துறவி சங்கர் தாஸிடம் வழங்கியது.

இது தொடர்பாக சுவாமி சங்கர் தாஸ் கூறுகையில், நான் இப்போது 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குகையில் வசித்து வருகிறேன். இந்த முயற்சியை (நன்கொடை திரட்டும் திட்டம்) பற்றி நான் கேள்விப்பட்டேபோது, என் வாழ்நாள் கனவாக இருந்த ஒரு காரணத்திற்காக ஏன் நன்கொடை வழங்கக்கூடாது என்று நினைத்தேன் என்று தெரிவித்தார்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறுகையில், ராமர் கோயில் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளிக்க கோரிய சுவாமி சங்கர் தாஸ் குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் வங்கிக்கு சென்றோம். பணத்தை நேரடியாக நன்கொடையாக வழங்க முடியாததால், அவர் எங்களிடம் காசோலையை ஒப்படைத்தார். நாங்கள் அவருக்கு ரசீது கொடுத்தோம். வங்கி மேலாளர் பணத்தை அறக்கட்டளையில் சமர்ப்பிப்பார் என்று தெரிவித்தது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா!

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!

Topics

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா!

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories