தற்போது வாகனங்களை தற்காலிகமாக பதிவு செய்வது போன்ற பிற சேவைகளையும் ஆன்லைனில் பெற முடியும் ஏனெனில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MORTH) ஆதார் அடிப்படையிலான பதினெட்டு சேவைகள் இப்போது ஆன்லைனில் ஆதார் அங்கீகாரம் மூலம் கிடைக்கும் என அறிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி.யை(RC) ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணுடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட பின்னர் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தால் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் கூட்டங்களை குறைக்க வழிவகுக்கும் என கருதபடுகிறது. “அனைத்து குடிமகனுக்கு வசதியான மற்றும் தொந்தரவில்லாத சேவைகளை வழங்குவதற்காக, தொடர்பு இல்லாத சேவைகளைப் பெறுவதற்கு மற்றும் ஆதார் தேவைகள் குறித்து குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட அறிவிப்புகள் மூலம் விளம்பரம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சகம் செய்யும்” என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குடிமக்களின் வீடுகளில் இருந்தே தற்போது ஆன்லைனில் கீழ் வரும் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்: இந்த சேவை மூலம் கற்றவரின் உரிமம்( learner’s license), ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் (வாகனம் ஓட்டும் திறனுக்கான சோதனை தேவையில்லை), நகல் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் மற்றும் பதிவு சான்றிதழ், சர்வதேச ஓட்டுநர் அனுமதி வழங்கல், உரிமத்திலிருந்து வாகனத்தின் வகுப்பை சரணடைதல், மோட்டார் வாகனத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம், மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்.
மேலும், நகல் சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம், பதிவு சான்றிதழுக்கான என்ஓசி(NOC) வழங்குவதற்கான விண்ணப்பம், மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம், சான்றிதழில் முகவரி மாற்றத்தின் தகவல்பதிவு செய்தல், அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்திலிருந்து ஓட்டுநர் பயிற்சிக்கான பதிவுக்கான விண்ணப்பம், வாடகை-கொள்முதல் ஒப்பந்தத்தின் ஒப்புதல், வாடகை-கொள்முதல் முடிவு ஒப்பந்தம், ஆகியவை பெற்றுகொள்ளலாம்.