February 22, 2026, 5:39 PM
29 C
Chennai

இருக்க இடமின்றி சுடுகாட்டில் தவித்த பெண்! வீடு கட்டி உதவிய மக்கள்!

sita - 2026

சேலத்தில் உள்ள சுடுகாட்டில் தனியாளாக நின்று உடல் அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் பெண்ணுக்கு சேலம் ட்ரக்கர்ஸ் கிளப் சார்பில் இலவமாக வீடு கட்டி கொடுத்து உதவியதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

சேலம் டிவிஎஸ் மயானத்தில் கடந்த பல ஆண்டாக தனியாளாக நின்று ஆயிரக்கணக்கான பிரேதங்களை அடக்கம் செய்யும் பணியில் சீதா என்பவர் ஈடுபட்டு வருகிறார்.

இளம் பெண்ணான சீதா குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை மற்றும் பெற்றோர்கள் இறந்ததால், எதிர்கால வாழ்க்கை பெரும் கேள்வி குறியானது. பெற்றோரை இழந்து, வீடில்லாமல் தனித்து விடப்பட்ட சீதாவுக்கு, டிவிஎஸ் மயானம் அடைக்கலம் கொடுத்தது.

இறந்த உடல்களை அடக்கம் செய்யும் பணியில் கிடைக்கும் சொற்ப கூலியை கொண்டு, சீதா உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டார்.

உடல் அடக்கம் செய்வதை தனது தொழிலாக்கி கொண்ட சீதா, இதுவரை ஆயிரக்கணக்கான பிரேதங்களை இரவு பகல் என்று பாராமல் தனி ஒரு ஆளாய் நின்று குழி தோண்டி அடக்கம் செய்து, தேவையான சடங்குகளை செய்து மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளார்.

இறந்தவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கூட மயானத்துக்குள் அடி எடுத்து வைக்காத மரபை கடைபிடித்து வரும் சமூக சூழலில், சீதா சுடுகாட்டில் தனி ஒரு ஆளாக இருந்து, உடல் அடக்கம் செய்து ‘பாரதியின்’ புரட்சி பெண் வரிசையில் இடம் பிடித்துள்ளதாகவே சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ஊரார் உடலை அடக்கம் செய்யும் பணியில் அக்கறையுடன் செயலாற்றி வரும் சீதாவுக்கு மழை, வெயிலுக்கு ஒதுங்கிட ஓட்டை கூரை வீடே இருந்தது. இந்நிலையில், மயான வளாகத்தில் ஓய்வுக்காக ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்பட்ட சிறிய அறை முற்றிலும் பழுதடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்ததால், சமூக ஆர்வலர்கள் யாரேனும் புனரமைத்து கொடுக்க வேண்டும் என்று சீதா கருணையுடன் கேட்டு கொண்டிருந்தார்.

சீதாவின் கோரிக்கைக்கு செவி சாய்த்த சேலம் ட்ரக்கர்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த கட்டிடத்தை சீரமைத்து இலவசமாக வீட்டை கட்டி கொடுத்துள்ளனர். இதற்கான சாவியை சேலம் ட்ரக்கர்ஸ் கிளப் நிர்வாகிகள் நேற்று சீதாவிடம் ஒப்படைத்ததை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories