மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம்! அசத்தும் புதுச்சேரி ஆளுநர்!

tamilizai 1 - 2026

பஸ்சில் பயணித்து, பொதுமக்களின் குறைகளை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், கேட்டறிந்தார். புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு, வாட்ஸ் ஆப் வழியாக, புதுச்சேரி – கடலுார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து நேற்று காலை 10:45 மணிக்கு, கடலுார் சாலை அந்தோனியார் கோவில் சிக்னல் வந்த கவர்னர், அங்கு நின்றிருந்த பாகூர் செல்லும் தனியார் பஸ்சில் திடீரென ஏறி பயணித்தார். அவருடன் கவர்னரின் செயலர் சுந்தரேசன், ஆலோசகர் மகேஸ்வரி, எஸ்.பி., பாஸ்கர்சென்றனர்.பஸ் டிரைவருக்கு அருகில் உள்ள இருக்கையில் கவர்னர் அமர்ந்து, சாலைகளை பார்வையிட்டார். பின், பயணிகளிடம் நலம் விசாரித்து பஸ்கள் சரியான நேரத்திற்கு வருகிறதா என கேட்டார்.
பஸ்கள் வருவதாக மக்கள் கூறினர். சிலர், தங்களுக்கு முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வில்லை. கிராம சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக கூறினர். மக்கள் கூறிய புகார்களை, அதிகாரிகள் குறித்து கொண்டனர்.

எப்போது வேண்டுமானாலும், கவர்னர் மாளிகை வந்து, குறைகளை தெரிவிக்கலாம் என பயணிகளிடம் கவர்னர் கூறினார்.பயணிகள் கோரிக்கை யேற்று தவளக்குப்பத்தில் இருந்து வேறு தனியார் பஸ்சில் அபிேஷபாக்கம் புறப்பட்டார். அங்குள்ள சுடுகாட்டு பாதையை பார்வையிட்டு, மீண்டும் தனியார் பஸ்சில் அபிேஷக பாக்கத்தில் இருந்து மரப்பாலம் சிக்னல் வரை வந்தனர். இரு தனியார் பஸ்களிலும் கவர்னர் மற்றும் அதிகாரிகளுக்கு டிக்கெட் எடுத்தனர்.கவர்னர் கூறுகையில்; மக்கள் தொலைபேசி, வாட்ஸ் ஆப் மூலம் சாலை சரியில்லை என புகார் அளித்தனர். மக்களுடன் பஸ்சில் பயணித்து, உண்மை நிலவரங்களை அறிந்து கொண்டேன்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

சாலை வசதி மட்டுமின்றி, பல புகார்கள், கூறினர். அதிகாரிகள் குறித்து வைத்துள்ளனர். தேர்தல் வருவதால் புது திட்டங்கள் அறிவிக்க முடியாது. நடை முறையில் உள்ள திட்டங்கள் மூலம் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.பொது மக்கள் வரவேற்பு : கவர்னர் பஸ்சில் பயணிப்பதை அறிந்து, அரியாங்குப்பத்தில் பொதுமக்கள் திரண்டு வரவேற்றனர். தவளக்குப்பத்திலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். மீனவ மக்கள் தங்களின் கோரிக்கை குறித்து மனுவாக அளித்தனர். பயணிகள் பலர் கவர்னருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories