நான் குழந்தை பெற உதவினால் பணம் தருவேன்: பேஸ்புக்கில் இளம்பெண் பகீர் பதிவு!

Published:

எனக்கு குழந்தை தரும் ஆணுக்கு பணம் தருவேன் என்று ஒரு இளம்பெண் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவை சேர்ந்த 25 வயதான அடிலினா அல்பு, தனது ஃபேஸ் புக் பக்கத்தில் அளித்துள்ள பதிவு ஆண்களின் புருவத்தை உயர்த்த செய்துள்ளது. அடிலினா அல்பு தனது ஃபேஸ் புக் பக்கத்தில், ”மனதளவில் ஆண்கள்எல்லாருமே முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆணை சந்திப்பது பிரச்சனை இல்லை. ஆனால், குழந்தை தேவைப்படும் ஒரு ஆணை சந்திப்பதே பிரச்சனை.

அதற்காக, எந்த உபயோகமும் இல்லாத உறவில் என் நேரத்தை வீணடிப்பதை நான் விரும்பவில்லை. நான் குழந்தை பெற உதவுபவர்களுக்கு 350 பவுண்ட் பணம் தருகிறேன். உங்களுக்கு சுகம், எனக்கு குழந்தை அவ்வளவுதான். இதற்கு சம்மதிப்பவர்கள், மருத்துவரிடம் கருவுறும் சோதனை செய்துவிட்டு வர வேண்டும். மேலும், பெற்றோர் உரிமைகளை எனக்கே அளித்துவிட வேண்டும். ஆண்கள் முதிர்ச்சியடையாதவர்கள், எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள். நான் முதிர்ச்சியடைந்தவள், சுதந்திரமானவள், எனக்கு ஒரு குழந்தை தேவை” என்று பதிவு செய்துள்ளார். பல பேஸ்புக் பயனாளர்கள், அடிலினாவின் பதிவுக்கு முகம் சுளிக்க வைக்கும் விமர்சனங்களை குவித்தபடி இருந்தாலும், அவரது சுதந்திரமான குணத்தை சிலர் பாராட்ட தவறவில்லை.
ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img