December 6, 2025, 3:24 AM
24.9 C
Chennai

4வது டி20 : இந்தியா வெற்றி! சமனில் தொடர்!

ind team - 2025

இங்கிலாந்துக்கு எதிரான 4வது ‘டுவென்டி-20’ போட்டியில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசி கைகொடுக்க, 20 ஓவரில் 185 ரன்கள் குவித்த இந்திய அணி, 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் முடிவில் இந்திய அணி 1-2 என பின்தங்கிய நிலையில் இருந்தது.

இந்நிலையில் நான்காவது போட்டி, ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் இஷான் கிஷான், யுவேந்திர சகால் நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ், ராகுல் சகார் தேர்வு செய்யப் பட்டனர்.

இந்தப் போட்டியில்’டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா (12), லோகேஷ் ராகுல் (14) இணை சுமாரான தொடக்கம் தந்தது. கேப்டன் விராட் கோலி (1) ஏமாற்றிய நிலையில், அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 57 ரன் எடுத்தார். ரிஷாப் பன்ட் (30), ஸ்ரேயாஸ் ஐயர் (37) நன்கு ஆடினர். ஹர்திக் பாண்ட்யா (11), வாஷிங்டன் சுந்தர் (5) சுமாராக ஆட, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது.

186 ரன் கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 177 ரன் எடுத்து, வெற்றி இலக்கை கோட்டை விட்டது. இதை அடுத்து இரு அணிகளும் தலா இரண்டு ஆட்டங்களில் வென்று தொடர் சமனில் உள்ளது. எனவே கடைசி டி20 போட்டி பெரும் விறுவிறுப்பு நிறைந்ததாக, இறுதிப் போட்டி போல் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories