December 5, 2025, 5:00 PM
27.9 C
Chennai

பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெல்லை சைவ வேளாளர் பெருமக்கள் ஆதரவு!

nellai bjp candidate nagendran - 2025

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, நெல்லை மாநகர சைவ வேளாளர் பெருமக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் பெருமக்கள் கூட்டம் பாளை தியாகராஜநகரில் உள்ள திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் மாரியப்பன் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் பி.மாரியப்பன் தலைமை தாங்கினார்.

P. செந்தில் (செயலாளர் KTCநகர் & VM சத்திரம் சைவ வேளாளர் சங்கம்), R.P.லட்சுமணன் (தலைவர் என்ஜிஓ காலனி சைவ வேளாளர் சங்கம், கிருஷ்ணாபுரம்) G.பாலமுருகன் ( இளைஞரணி மாவட்ட பொருளாளர்) S.முத்துசாமி (தியாகராஜநகர் சங்க பொருளாளர்) V.சுந்தரலிங்கம் (தியாகராஜநகர் சங்க செயற்குழு உறுப்பினர்) K.சங்கரநாராயணன் (காந்திநகர் சைவ வேளாளர் சங்க தலைவர்), S.சுவாமி (சைவ வேளாளர் பேரவை கௌரவ ஆலோசகர்) C.சுப்பிரமணியன் (துணை பொருளாளர், கேடிசி நகர் சைவ வேளாளர் சங்கம்) அக்வா T.சுந்தர் (தலைவர், சமாதானபுரம் சைவ வேளாளர் சங்கம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, நயினார் நாகேந்திரன் (நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர்) கலந்து கொண்டார். மேலும், கா.குற்றாலநாதன் (உயர் நீதிமன்ற மத்திய அரசு வழக்கறிஞர்) செந்தில்ஆறுமுகம் (அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்) தயாசங்கர் (பாஜக நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் : பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்த மத்திய பாஜக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தமிழக அரசிலும் அதனை அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு சைவ வேளாளர் சமுதாயம் சார்பாக ஆதரவளிப்பது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய பாஜக நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தான் வெற்றி பெற்று முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு துறையிலும் அமுல்படுத்த தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என உறுதி அளித்தார்.

இந்தக் கூட்டத்தில் சந்தானம் , நட்டார் , தெய்வநாயகம் , சரவணன் , நல்லபெருமாள் பிரமநாயகம் சுடலை உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories