மார்பில் ஏற்பட்ட வலி! எக்ஸ்ரே பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி!

- 2026

பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஒருவரின் எக்ஸ்ரேவை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கென்ட் ரயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரங்கத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது சில மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.

இதனால்அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.அதை பார்த்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு வலிநிவாரணி மருந்துகளை கொடுத்து உள்ளனர். அதனால் இவர் சில நாட்கள் ஓய்வில் இருந்துள்ளார்.

அதன் பிறகு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு காயம் காரணமாக சிகிச்சை பெற்று கொண்ட மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என்று வேலையின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அதனால் அவர் மருத்துவ சான்றிதழ் வாங்குவதற்கு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தனக்கு நேர்ந்தவற்றை சொல்லி மருத்துவச் சான்றிதழ் கேட்டு உள்ளார். அதற்கு அந்த மருத்துவர்கள் உங்களை பரிசோதனை செய்த பின்னரே மருத்துவச் சான்றிதழ் வழங்குவோம் என்று கூறியுள்ளனர்.

pilipains - 2026

அதன்பிறகு அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் விலா எலும்புக் கூட்டுக்கு அருகில் நுரையீரலில் ஒரு அங்குலம் மட்டும் இடம் விட்டு கூர்மையான கத்தி ஒன்று இருப்பது தெரிய வந்தது.

அதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனே அவரிடம் தகவலை தெரிவித்தனர். ஆனால் அவர் சிறிதும் கவலைப்படாமல் இதற்குமுன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறினார்.

மேலும் அவர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் எந்த அளவிற்கு கவனமுடன் நோயாளிகளை கவனிக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு சான்று என்று நெத்தியடி பதில் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் அவ்வபோது நுரையீரல் பகுதியில் வலி ஏற்படும் ஆனால் அதை நான் கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று விடுவேன் என்று தெரிவித்தார்.

ஆனால் மருத்துவர்கள் இந்தக் கத்தியை அகற்றும் வரை தங்களால் வேலைக்கு செல்ல முடியாது. அதே நேரத்தில் அப்போது ஏற்பட்ட காயத்தை அந்த மருத்துவர்கள் ஒழுங்காக பார்க்காததால் இந்த விளைவு ஏற்பட்டுயுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அந்த மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் தான் இந்தப் பிரச்சனையிலிருந்து உடனடியாக குணமாகி வேலைக்கு போனால் போதும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Topics

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories