மார்பில் ஏற்பட்ட வலி! எக்ஸ்ரே பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி!

- 2026

பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஒருவரின் எக்ஸ்ரேவை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கென்ட் ரயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரங்கத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது சில மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.

இதனால்அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.அதை பார்த்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு வலிநிவாரணி மருந்துகளை கொடுத்து உள்ளனர். அதனால் இவர் சில நாட்கள் ஓய்வில் இருந்துள்ளார்.

அதன் பிறகு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு காயம் காரணமாக சிகிச்சை பெற்று கொண்ட மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என்று வேலையின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அதனால் அவர் மருத்துவ சான்றிதழ் வாங்குவதற்கு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தனக்கு நேர்ந்தவற்றை சொல்லி மருத்துவச் சான்றிதழ் கேட்டு உள்ளார். அதற்கு அந்த மருத்துவர்கள் உங்களை பரிசோதனை செய்த பின்னரே மருத்துவச் சான்றிதழ் வழங்குவோம் என்று கூறியுள்ளனர்.

pilipains - 2026

அதன்பிறகு அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் விலா எலும்புக் கூட்டுக்கு அருகில் நுரையீரலில் ஒரு அங்குலம் மட்டும் இடம் விட்டு கூர்மையான கத்தி ஒன்று இருப்பது தெரிய வந்தது.

அதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனே அவரிடம் தகவலை தெரிவித்தனர். ஆனால் அவர் சிறிதும் கவலைப்படாமல் இதற்குமுன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறினார்.

மேலும் அவர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் எந்த அளவிற்கு கவனமுடன் நோயாளிகளை கவனிக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு சான்று என்று நெத்தியடி பதில் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் அவ்வபோது நுரையீரல் பகுதியில் வலி ஏற்படும் ஆனால் அதை நான் கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று விடுவேன் என்று தெரிவித்தார்.

ஆனால் மருத்துவர்கள் இந்தக் கத்தியை அகற்றும் வரை தங்களால் வேலைக்கு செல்ல முடியாது. அதே நேரத்தில் அப்போது ஏற்பட்ட காயத்தை அந்த மருத்துவர்கள் ஒழுங்காக பார்க்காததால் இந்த விளைவு ஏற்பட்டுயுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அந்த மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் தான் இந்தப் பிரச்சனையிலிருந்து உடனடியாக குணமாகி வேலைக்கு போனால் போதும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories