December 6, 2025, 8:18 AM
23.8 C
Chennai

தமிழகம் தொடர்ந்து வெற்றி நடை போட வாய்ப்பு தாருங்கள்: முதல்வரின் பிரசார நிறைவுரை!

edappadi palanisami speech - 2025

தமிழகம் தொடர்ந்து முதல் மாநிலமாக விளங்க, தொடர்ந்து வெற்றி நடை போட மீண்டும் வாய்ப்பு தாருங்கள் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சார நிறைவு உரை

ஒரு விவசாயியாக ஒரு சாமானியனாக உங்களில் ஒருவனாக பேசுகிறேன்….

புரட்சி தலைவி அம்மாவின் மறைவு நம் எல்லோருக்கும் பேரிழப்பு, ஆனால் அம்மா இருந்த பதவியில் உங்கள் முதலமைச்சராக எனது கடைமைகளை அம்மா இருந்து முடிவெடுத்து செய்தால் எப்படி செய்வார்களோ அதே வழியில் செய்து வந்திருக்கிறேன்.

குடிமராமத்து, தடுப்பணைகள் நீர் வளத்தை பெருக்க எண்ணற்ற திட்டங்கள், டெல்ட்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு, காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி முறைப்படுத்தும் குழு அமைத்தல், அத்திக்கடவு – அவிநாசி திட்டம், காவேரி – குண்டாறு இணைப்பு திட்டம் என்று பல நீர் மேலாண்மை திட்டங்கள் என இதனால் நாட்டிலேயே நீர் மேலாண்மையில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எட்டியுள்ளது

எதிர்க்கட்சிகள் வாக்குறுதி கொடுப்பாங்க ஆனால் நிறைவேற்றியுள்ளார்களா?

கடந்த 2006 பொதுத் தேர்தலின் போது 2 ஏக்கர் நிலம் கொடுப்பதா சொன்னாங்க செய்தார்களா?

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது சுய உதவிக் குழு நகைக் கடன் தள்ளுபடி என்றார்கள் செய்தார்களா?

கலர் டி.வி தந்தார்கள், அதிலும் தங்களது குடும்பத்தினர் நடத்தும் கேபிள் டி.விக்கு கட்டணம் வசூலித்தார்கள்.

மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்தபோது மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் கட்ச தீவை தாரைவார்த்தது யார்.

காவிரியின் உரிமையை 1974ம் ஆண்டு புதுப்பிக்காமல் விட்டது யார்?

2007ல் காவிரி பிரச்சனையில் உச்ச நீதி மன்றம் பிறபித்த உத்தரவை மைய அரசின் அரசிதழில் வெளியிடாமல் காலதாமதம் செய்தது யார்? அதனால் இரண்டாம் முறையாக காவேரி பிரச்சனையில் துரோகம் செய்தது யார்?

நீட் தேர்வுக்கு ஆதரவாக நின்றது யார்?

மீத்தேன், ஹட்ரோகார்பன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டது யார்?

தமிழ்நாட்டின் பாரம்பரிய ஜல்லிகட்டுக்கு தடைவிதிக்க உடந்தையாக இருந்தது யார்?

*விவசாயிகள் ஏழைகள் நலன் காக்க நாங்கள் வேண்டுமா? அல்லது அவர்களை புறக்கணிப்பவர்கள் வேண்டுமா?

சிறுபான்மையினரின் நண்பர்களான நாங்கள் வேண்டுமா? அல்லது சிறுபான்மையினரின் காவலன் போல் வேஷம் போடுபவர்கள் வேண்டுமா?

மகளிர் நலன் காக்கும் நாங்கள் வேண்டுமா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் அவர்கள் வேண்டுமா?

தமிழகம் தொடர்ந்து முதல் மாநிலமாக விளங்க, தொடர்ந்து வெற்றி நடை போட எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories