விவேக் படித்த கல்லூரியில்… நண்பர்கள் அஞ்சலி!

IMG 20210417 WA0006
actor vivek

நடிகர் விவேக் படித்த அமெரிக்கன் கல்லூரியில், கல்லூரி முதல்வர் மற்றும் அவரது கல்லூரி நண்பர்கள்  அஞ்சலி செலுத்தினர்!

விவேக் வைத்த மரங்களில் இருந்து வரும் ஆக்சிஜன் காற்றாக கல்லூரியின் நினைவில் இருந்துகொண்டே இருப்பார் என கல்லூரி முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய போது குறிப்பிட்டார்.

மறைந்த நடிகர் விவேக் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் 1978 –1981 ஆம் ஆண்டு காமர்ஸ் பிரிவில் படித்தார். இதன் பின்னர் நாடக நடிகராக இருந்து, சினிமாவில் நடித்து மிகப்பெரும் நடிகராக உருவாகி தனது சிந்தனை நிறைந்த நகைச்சுவையால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

நடிகர் விவேக் இன்று அதிகாலை இயற்கை எய்திய நிலையில் அவர் கல்லூரிப் படிப்பை முடித்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவேக்  உருவப்படத்திற்கு கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், அவரது கல்லூரி நண்பர்கள் மற்றும் பேராசிரியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்லூரி முதல்வர் கிறிஸ்டோபர் பேசுகையில் : எங்கள் கல்லூரி மாணவரான விவேக் மறைவு ஈடுசெய்ய இயலாதது. அவர் மறைந்தாலும் எங்கள் கல்லூரியில் அவர் நட்டுவைத்த மரங்களில் காற்றாக வாழ்ந்து கல்லூரியில் நினைவாக இருப்பார் என்றார்.

அவரது கல்லூரி நண்பர்கள் குறிப்பிடுகையில், நண்பனின் இழப்பு ஏற்க முடியவில்லை, சினிமா இயக்குனராக வருவார் என எதிர்பார்த்தோம், ஆனால் இவ்வளவு விரைவாக தனது வாழ்வை முடிப்பார் என்பதை ஏற்க இயலவில்லை என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories