December 6, 2025, 9:04 PM
25.6 C
Chennai

மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் டீமை கவர்ந்த மணப்பெண்! வைரலான புகைப்படம்!

meganthi - 2025

இந்தியாவில் தென் இந்தியாவைவிட வட இந்தியாவில் திருமணங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். திருமணத்திற்கு முன்பாக மணப் பெண் மற்றும் அவருடைய தோழிகள், உறவினர்கள் எனப் பலருக்கும் மருதாணி வைக்கும் நிகழ்ச்சி ஆடல் பாடல் உடன் சிறப்பாக நடக்கும்.

இந்த நிகழ்ச்சி திருமணத்திலேயே அதிகளவில் செலவு செய்யப்படும் நிகழ்ச்சியாக இருக்கும். அந்தவகையில் பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்காக வைத்த மருதாணி ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது

மும்பையைச் சேர்ந்த கீத் கேடக்கர் என்ற பெண்ணிற்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது.

அவரின் திருமணத்திற்கு முன்பாக மருதாணி வைக்கும் நிகழ்ச்சி வழக்கம் போல் நடைபெற்று உள்ளது. அதில் அவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகை என்பதால் கிரிக்கெட் அணியின் முத்திரையுடன் மருதாணி போட ஆசைப்பட்டுள்ளார்.

அவருடைய வருங்கால கணவர் ஒரு தீவிர கால்பந்து ரசிகர் என்பதால் அந்த அணியின் முத்திரையையும் மருதாணியில் சேர்க்க விரும்பியுள்ளார்.

இந்த இரண்டையும் காண்பிக்கும் வகையில் ஒரு கையில் மணமகன் போல் கீழே வரைந்து மேலே அவருக்கு பிடித்த கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முத்திரையை வைத்திருந்தார்.

அதேபோல மற்றொரு கையில் இவருக்கு பிடித்த ஐபிஎல் கிரிக்கெட் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் முத்திரையை வைத்திருந்தார். அந்த கைக்கு கீழே மணப்பெண் போல் ஒரு உருவத்தையும் வரைந்து வைத்திருந்தார். தன்னுடைய மருதாணி மூலம் இருவருக்கும் எந்த விளையாட்டு மற்றும் எந்த அணி பிடிக்கும் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இதை பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இந்த படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் படத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கம் எடுத்து தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அத்துடன், “இந்த மருதாணி எங்கள் இதயத்தை வென்றுவிட்டது. மணமக்கள் இருவருக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருந்தது.

இந்தப் பதிவிற்கு தற்போது வரை கிட்டதட்ட 3.6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன் இந்தப் பெண்ணை பலரும் தங்களுடைய பதிவுகளின் மூலம் பாராட்டி வருகின்றனர்.

இந்த திருமண பெண்ணின் மருதாணி இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories