உயிர் பிரிய போகும் பிரிய கணவரின் உயிரணுவைக் கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவி!

sparm - 2026

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கணவரின் விந்தணுக்களைப் பாதுகாக்கக் கோரி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மனு தாக்கல் செய்தார்.

அதையடுத்து அந்த பெண்ணின் கணவரின் விந்தணுவை பாதுகாக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தம்பதியர் கடந்தாண்டு அக்டோபரில் திருமணம் செய்துகொண்டனர். கனடாவில் வசித்த இவர்கள்,

திருமணமான நான்கு மாதங்களுக்குப் பிறகு, அதாவது கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தனர். கடந்த மே மாதம், அந்த பெண்ணின் கணவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வென்டிலேட்டர் ஆதரவில் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அவரை சோதித்த மருத்துவர்கள், ‘உங்கள் கணவரின் உடல்நிலை இனிமேல் மேம்பட வாய்ப்பு இல்லை. அவரை இன்னும் 3 நாட்கள் மட்டுமே வென்டிலேட்டர் ஆதரவில் வைத்திருக்க முடியும்’ என்றனர்.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

திருமணமான ஓராண்டுக்குள் தனது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பார்த்து வேதனையடைந்த அந்த பெண், தனது கணவரின் விந்தணுவை எடுத்து, அதன் மூலம் ஒரு தாயாக ஆக விரும்புவதாக மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டார்.

ஆனால் மருத்துவர்கள், கணவரின் அனுமதியின்றி விந்து மாதிரிகளை எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். இருந்தும், அந்த பெண் தனது மாமியார் மற்றும் அவர்களது உறவினர்கள் சம்மதத்துடன் தனது கணவரின் விந்தணுவை எடுப்பதற்காக குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடினார். ​​

கணவரின் உயிருக்கு மருத்துவர்கள் 24 மணிநேரம் மட்டுமே கெடு கொடுத்த நிலையில், அந்த பெண் நீதிமன்றத்தை நாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தனது தீர்ப்பை 15 நிமிட விசாரணைக்கு பின்னர் வழங்கியது.

அதில், ‘சம்பந்தப்பட்ட நோயாளியின் விந்தணுக்களை சேகரிக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. மேலும், அதனை மருத்துவமனை நிர்வாகம் முறையாக பாதுகாக்க வேண்டும்.

இருப்பினும், அடுத்த உத்தரவு வரும் வரை அந்த பெண்ணுக்கு செயற்கை கருவூட்டல் முறையில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த கூடாது. அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இந்த விவகாரத்தை நாளை (வியாழக்கிழமை) மீண்டும் விசாரிக்கும்’ என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த பெண் அளித்த பேட்டியில், ‘என் கணவரின் விந்தணுவிலிருந்து தாயாக வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால் மருத்துவ சட்டம் அதற்கு அனுமதிக்காது என்று கூறினர். கணவரின் விந்தணு எங்களது இருவருக்கும் இடையிலான அன்பின் கடைசி அடையாளமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

என் கணவரின் உயிருக்கு மிகக் குறைவான நேரம் மட்டுமே உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வென்டிலேட்டர் ஆதரவில் உள்ளார். அவரின் விந்தணுவை எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தும் அதற்கான நடவடிக்கையை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்’ என்றார்.

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அதில் கூறப்பட்டுள்ள வழிகாட்டல் நெறிமுறைகளை மருத்துவ குழுவினர் படித்து வருகின்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவரின் விந்தணுக்களை எடுத்து பாதுகாக்க முடியுமா? என்பது குறித்தும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இருந்தும், மருத்துவர்கள் கூறியபடி இன்றுடன் அவரது உயிருக்கான கெடு முடிவதால், குஜராத்தில் இவ்விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories