December 5, 2025, 10:37 PM
26.6 C
Chennai

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன்! புள்ளியாய் ஒளிரும் நிகழ்வு! நாசா வெளியீடு!

earth - 2025

கடந்த 10 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது நிகழ்ந்த சிறந்த தருணத்தை நாசா காட்சியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் காலநிலையை கண்காணிக்க செயற்கைகோளில் எபிக் எனப்படும் எர்த் பாலிக்ரோமேட்டிக் இமேஜிங் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆர்க்டிக் துருவ பகுதியில் மீது சந்திரனின் நிழல் புகைப்படத்தை நாசா பதிவு செய்துள்ளது. இந்த செயற்கைகோளானது பூமியில் இருந்து சுமார் ஒரு மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிழல் குறித்து பார்க்கையில், இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது இந்த நிழலின் கடைசி பகுதியானது ஆர்க்டிக் பகுதியில் ஒரு புள்ளி போன்று தோன்றியது.

இதை நாசா காலநிலை செயற்கோளில் பொருத்தப்பட்டிருக்கும் எபிக் கேமரா மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, ​​இது ‘ரிங் ஆஃப் ஃபயர்’ வளையத்தை ஏற்படுத்துகிறது. இது சந்திரனைச் சுற்றித் தெரியும். எளிமையான சொற்களில் சொன்னால், இது தூரத்தின் காரணமாக நிகழ்கிறது,

சந்திரன் சற்று சிறியதாகத் தோன்றுகிறது மற்றும் சூரியனின் முழு பார்வையையும் இது தடுக்காது, வளையம் போன்ற ஒளியை உருவாக்குகிறது. எனவே, நீங்கள் ஒளியின் வளையத்திற்குச் சாட்சியாக இருப்பீர்கள். இது ‘நெருப்பு வளையம்’ அல்லது ‘ரிங் ஆஃப் ஃபயர்’ என்று குறிப்பிடப்படுகிறது.

சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும். இந்த சூரிய கிரகணத்தை சாதாரண கண்களில் சூரியனை காண்பது கடினம். எனவே, இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது. இது தவிர சன் ஃபில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தியே இந்த கிரகணத்தைக் காண முடியும் எனத் தெரிவித்தனர்.

ஆண்டு தோறும் சூரிய கிரகண நிகழ்வுகளும், சந்திரன் சார்த்த பிங்க் மூன், ரெட் மூன் போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துகொண்டே தான் இருக்கின்றன,

அப்படி வானில் ஏராளமான அதிசயங்கள் நமது கண்களுக்குத் தென்படாமல் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இதில் சில நிகழ்வுகளை மட்டும் நம்மால் வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். அதன்படி பல்வேறு நிகழ்வுகளை நாசா காட்சிப்படுத்தி வெளியிட்டு வருகிறது.

யுஎஃப்ஓ என்பது அடையாளம் தெரியாத வானில் பறக்கும் பொருட்கள், விண்கற்கள் உட்பட பல்வேறு ஆபத்துகள் குறித்து நாசா அவ்வப்போது தகவல்கள் தெரிவித்து வருவதோடு அதற்கான ஆதாரங்களையும் புகைப்படங்களாக பதிவிட்டு அனுப்புகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories