ஆக… ஆக… ஆக.9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

dmk stalin - 2026

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆக. 9ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் மாநில அரசு அவ்வப்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஞாயிறு இன்று காலை 6 மணியுடன் நிறைவடைவதால், நேற்று மாநில அரசு மீண்டும் அதே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில், தொற்று நிலையைக் கட்டுப்படுத்த வேண்டி இருப்பதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆக.9-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

  • தற்போதைய தளர்வுகளே ஆக.9 வரை தொடர்ந்து நீட்டிக்கும். இதில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • கூடுதலாக வேறு எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை.
  • அதிக அளவில் கூட்டம் சேர்ந்தால் குறிப்பிட்ட பகுதியை மூட நடவடிக்கை எடுக்கலாம்.
  • விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், இதர நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பொது இடங்களில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்வது ஆகியவற்றை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொற்று அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப் பட்டுள்ளது

என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

கடந்த அதிமுக., ஆட்சியின் போது, ஊரடங்கு பிறப்பிக்கப் பட்ட நேரத்தில், ஊரடங்கு தேவையற்றது என்றும், ஊரடங்குக்கு எதிராகவும் பேனர் பிடித்து முழக்கமிட்ட ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வரும் நிலையில், இன்னொரு ஊரடங்கை தமிழ்நாடு தாங்காது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், பதவி ஏற்ற காலத்தில் இருந்து மூன்று மாதங்கள் முடியும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப் பட்டே வந்துள்ளது. ஆக… ஆக… ஆக.9ம் தேதி வரை தற்போது ஸ்டாலினால் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories